tag:blogger.com,1999:blog-182780922024-03-07T11:36:03.328-08:00தமிழோசைKanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-18278092.post-58216297171354896082013-08-15T10:09:00.002-07:002013-08-15T10:11:31.191-07:00இதுவா சுதந்திரம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-GHRf2SSmFMOoEZpJ1pGhdrMpKak3gRPNYKTkodITdi3mrMeTuu7wusQw_u21OprMzZGgvZ0wvQYeRCpC3Y4HFF2rs7xULbcdi15WHIJEHMyA3r9TZSClJRDhlHwrxBzA3c5XTw/s1600/chained_woman.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-GHRf2SSmFMOoEZpJ1pGhdrMpKak3gRPNYKTkodITdi3mrMeTuu7wusQw_u21OprMzZGgvZ0wvQYeRCpC3Y4HFF2rs7xULbcdi15WHIJEHMyA3r9TZSClJRDhlHwrxBzA3c5XTw/s640/chained_woman.jpg" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Add caption</td></tr>
</tbody></table>
<br /></div>
Kanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18278092.post-6778739812134306212012-02-29T00:47:00.000-08:002012-02-29T00:47:26.863-08:00கலைந்த கனாகனவொன்று கண்டேன் <br />
அதில் நான் கரையக் கண்டேன் <br />
இப்படி ஒரு கனவென்றால் <br />
எப்படி கண் விழிப்பேன் <br />
<br />
கருவறையின் இருட்டில் <br />
சிறிதாய் ஓர் ஒளி கண்டேன் <br />
என் இதயத்தோடு ஒன்றாய் <br />
கூடித் துடிக்கும் இருநாடி கேட்டேன் <br />
<br />
வளராத வயிற்றை கூட <br />
மெதுவாய் தடவிப் பார்த்தேன் <br />
கேளாத மழலையில் <br />
அம்மா என்று ஒரு மொழி கேட்டேன்<br />
<br />
விடிந்ததும் கலைந்த <br />
என் கனவே <br />
இனி உன்னை சுமக்க <br />
எத்தனை கனவுகள் வேண்டுவேன் <br />
<br />
-- கன்யாKanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-18278092.post-28520704050877354162012-01-24T06:26:00.001-08:002012-01-24T06:26:25.350-08:002012 என்ன வேண்டும்அழியும் காலம் அருகிலென்று <br />
ஆய்வளர் அறிந்ததொரு விதம்<br />
அழியா அழகுகள் பலகோடி இருந்தும்<br />
நாம் ஆண்டதென்ன சதம் <br />
<br />
ஆண்டுகள் பல கரைய விட்டு <br />
நான் சுவாசித்தும் மரித்திருந்தேன் <br />
இனி இந்த ஆண்டு விடியாதெனில் <br />
சில நாட்கள் வாழ்ந்து கரைத்திடுவேன்<br />
<br />
உதிக்கும் சூரியன், உறைந்த பனித்துளி <br />
மெதுவாய் உரசும் தென்றல், சுகமாய் தழுவும் மழைத்துளி <br />
ஓடும் காட்டருவி, உயர்ந்த பனிமலை <br />
உச்சியில் தவழும் வென்மேகம், இரவில் முகம் காட்டும் முழு நிலா <br />
<br />
இனிதாய் பாடும் பூங்குயில், அழகை ஆடும் பொன்மயில் <br />
வாலை ஆட்டும் நாய்க்குட்டி, காலை சுற்றும் பூனை <br />
மலர்களின் வாசம், மான்களில் வேகம் <br />
மடியை முட்டும் கன்று <br />
<br />
இவை எல்லாம் ஒரு நொடி என் விழிகளில் நிறைத்து <br />
நினைவுகளில் பதிக்க வேண்டும் <br />
<br />
மறக்க நினைக்கும் மனிதரை எல்லாம்<br />
மன்னிக்க சில நாட்கள் வேண்டும் <br />
என்னை அறவே வெறுத்த அன்பரை எல்லாம் <br />
அணைக்க சில நாட்கள் வேண்டும் <br />
<br />
மறந்து போன மழலை நினைவுகளில்<br />
களிக்கச் சில காலம் வேண்டும் <br />
நான் கூடிச் சிரித்த நண்பரை எல்லாம் <br />
சந்திக்கச் சில காலம் வேண்டும் <br />
<br />
காதலில் விழுந்து களவியல் அறிந்து <br />
காமனை வென்ற கர்வம் வேண்டும்<br />
தாய்மையைச் சுமந்து பிறப்பை சுகித்து <br />
சிரித்து அழுதிடும் அனுபவம் வேண்டும் <br />
<br />
எல்லாம் கண்டு எல்லாம் வென்று<br />
என் தாயின் மடியில் தலையினைச் சாய்த்து <br />
விடியாத இரவை, உதிக்காத சூரியனை <br />
மறித்தும் வென்றிட இன்னும் ஒரு நொடி வேண்டும்Kanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18278092.post-84057368656800237762012-01-21T07:22:00.000-08:002012-01-21T07:23:01.632-08:00காதல்காணும் இடமெல்லாம் அவனைக் <br />
காணக் காத்திருக்கும் கண்களை <br />
பேசும் மொழி எல்லாம் அவன்<br />
இதல்வழிக் கேட்கக் கெஞ்சும் காதுகளை <br />
<br />
துவர்க்கும் சுவை எல்லாம் அவனை<br />
நினைத்தே இனிக்கும் உதடுகளை <br />
நெருங்கும் நொடிகளில் அவன் <br />
தோழ் சாயத் தள்ளும் கால்களை <br />
<br />
மெதுவாய் சபித்துக் கொண்டிருகிறது <br />
அவனுக்காக எனக்கே தெரியாமல் துடிக்கும் <br />
என் இதயம்<br />
<br />
- கன்யாKanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18278092.post-72535368694634890982011-10-24T13:15:00.000-07:002011-10-24T13:15:05.446-07:00பசிபசிக்கிறதா என்று கேட்டவனெலாம்<br />
பந்திக்கு அழைக்கிறான் <br />
வெறும் தேகப்பசி என்றால் <br />
முந்தி இருக்கலாம் <br />
<br />
எனக்கோ <br />
உணர்வுப் பசி அதை உணரப் பசி <br />
உலகப் பசி அதை ஆழப் பசி <br />
<br />
அறிவுப் பசி அதை அடையப் பசி <br />
சாதனைப் பசி அதை சாதிக்கப் பசி <br />
<br />
யானைப் பசியட எனக்கு<br />
அதை தீர்க்கும் ருசி இல்லை உனக்கு <br />
<br />
இதை எப்படிச் சொன்னாலும் <br />
விளங்காத மடையர்தமக்கு <br />
விளக்கிச் சொல்லும் <br />
விதி இல்லை என்னக்குKanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18278092.post-61640590196394673872011-01-11T06:07:00.001-08:002011-01-11T06:07:06.851-08:00வரி கேடுகோடிகளில் புரளும் <br />
தனவான்களில் எல்லாம்<br />
கொடுப்பவர் கொஞ்சம்<br />
கொள்பவர் மிச்சம்<br />
கொடுப்பவர் கொடுப்பதும்<br />
கொள்ளையில் கொஞ்சம் <br />
<br />
குருதியை கறைத்து<br />
கூட்டை வறுத்தி <br />
வேர்வையில் வாடும் <br />
உழைப்பவர் கொடுப்பதோ<br />
கோமணம் வாங்க <br />
விற்பனை வரி 12 .5 சதம் !!!!Kanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18278092.post-8392531404293144042011-01-04T14:20:00.001-08:002011-01-04T14:20:57.204-08:00இதுவும் சுகம்உன்னோடு பேசிய தமிழ் <br />
தேனாய் இனிக்கிறது <br />
உன்னோடு சுவாசித்த காற்று <br />
உயிராய் தேய்கிறது <br />
<br />
உன்னோடு கொண்ட ஊடல் <br />
சுகமாய் வலிக்கிறது <br />
உன்னோடு கூடிய மோகம் <br />
முல்லை மாறியது<br />
<br />
உன் நினைவுகளை சுமக்கும் <br />
நான் நித்ய கர்பிணிKanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18278092.post-91022677374354169502010-12-24T13:48:00.000-08:002010-12-24T13:48:53.372-08:00என்ன செய்வேன் ?????உயிரினும் மேலாய் <br />
உனையே சுவாசித்தேன் <br />
இதயம் முழுதும் <br />
உன்னக்கே கொடுத்தேன்<br />
<br />
இமைகள் துடிக்கும்<br />
நொடிப் பொழுதில் <br />
உன்னை சுமந்த இதயத்தை <br />
துகள்களாய் துண்டித்தாய்<br />
<br />
பத்து வருடங்களாய் <br />
சிதறிய துகளில் எல்லாம் <br />
அந்தக் காதலை கருவாக்கி <br />
நினைவுகளால் ஒத்தடம் கொடுத்தேன் <br />
<br />
என் கருவை <br />
இனி சுமக்கவும் தெம்பில்லை <br />
கலைக்கவும் மனதில்லைKanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18278092.post-16438977237219075262010-08-17T17:46:00.000-07:002010-08-17T17:47:21.330-07:00ஒரு பாடல் தந்த ஊக்கம்வணக்கம் நண்பர்களே <br />
<br />
ரொம்ப நாள் ஆச்சு .. இந்த பட்டை எழுத ஆரம்பிச்சு .. இந்த பக்கம் வந்தும் தான்.. :)<br />
<br />
பௌர்ணமி'னு ஒரு தெலுங்கு படம் .. அதுல இந்த பாட்டு என்னக்கும் ரொம்ப பிடிக்கும்.. இந்த பாட்டு தமிழ்'ல கூட வந்திருச்சு இருந்தாலும் என்னோட சந்தோஷத்துக்காக நான் எழுதினேன் .. இசை'ல ஆர்வம் இருக்குற அளவுக்கு என்னக்கு அறிவு இல்ல .. ஸ்வரங்களுக்கு தோதா சில வார்த்தைகள் இல்லேன்னா மன்னிச்சுடுங்க... உங்க கருத்துக்களை சொல்லுங்க... <br />
<br />
<object style="background-image:url(http://i1.ytimg.com/vi/0NCsZyOi0n4/hqdefault.jpg)" width="480" height="295"><param name="movie" value="http://www.youtube.com/v/0NCsZyOi0n4?fs=1&hl=en_US"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/0NCsZyOi0n4?fs=1&hl=en_US" width="480" height="295" allowScriptAccess="never" allowFullScreen="true" wmode="transparent" type="application/x-shockwave-flash"></embed></object><br />
<br />
<br />
*******************************************************************************************<br />
சம்போ சங்கரா .... <br />
<br />
தத் தித் தா தக தீம் த தீம் <br />
என நித்தம் ஆடிடும் ஈஸ்வரா <br />
ஊதும் சங்கின் நாதமாய் <br />
ஓம்காரம் சொல்லும் நாயகா <br />
<br />
பரத வேதம் கொண்டு <br />
நடன யாகம் செய்ய<br />
பழகிய பதம் இது ஈசா<br />
<br />
சிவனின் நாமம் சொல்ல <br />
புவனம் யாவும் உள்ள<br />
வினை களைந்திடும்பர மேசா<br />
<br />
நீலகண்டனே நித்ய சுந்தரா <br />
கருணையில் கண் மலராய் <br />
<br />
வேத நாயகா ருத்ர காந்தார<br />
எந்தவம் தனைப் பாராய் <br />
<br />
வருவாய் மனோஜ ஜகதீஷ்வரா <br />
சு காந்த சாம்பாவ சங்கரா <br />
<br />
பரத வேதம் கொண்டு <br />
நடன யாகம் செய்ய<br />
பழகிய பதம் இது ஈசா<br />
<br />
சிவனின் நாமம் சொல்ல <br />
புவனம் யாவும் உள்ள<br />
வினை களைந்திடும்பர மேசா<br />
<br />
ஹர ஹர மகாதேவா........... (5)<br />
<br />
ஆ …………..<br />
<br />
ஹா ….<br />
<br />
<br />
ஆத்ம பந்தம்நீ அல்லவா<br />
நாடும் பிள்ளைநான் அல்லவா<br />
வனமாகி மேகமாகி என்னை அட்கொள்ளு மன்னவா<br />
<br />
ஆதி சக்தி அம்சம் நீ<br />
அண்டம் காக்கும் சிற்ஷ்டி நீ<br />
தேகம்பாதி தேவியாகி நின்ற ஈசனே உமாபதி <br />
<br />
ஹா ……<br />
<br />
உடலை உனக்கு சிறு திரியாக்கி<br />
உயிரை உருக்கி அதில் விளக்கேற்றி<br />
வளர்த்த யாகம் இது பாராய் <br />
மாயனே மனோகரா நின் மனம் இறங்கதா.. தேவா<br />
<br />
பரத வேதம் கொண்டு <br />
நடன யாகம் செய்ய<br />
பழகிய பதம் இது ஈசா<br />
<br />
மடியில் உமையவள் தலையில் மலையவள் இருவரின் துணைகொண்ட கைலேஸ்வரா <br />
பக்தனின் பக்தியில் நாத்திகன் அன்பினில் நித்தம் வாழ்த்திடும் பிரியபுஷ்கரா <br />
பாவ விமோசன பைரவ துர்ஜெய மஹா கால விஷ்வேஸ்வரா <br />
ஆஷுதோஷ தய சாம்பா சதாசிவா ஜெய கிரீஷ பிரிஹ லிங்கேஸ்வரா <br />
<br />
ஹர ஹர மகாதேவா...... (2)<br />
<br />
ஓம் நமசிவய ….(8)<br />
<br />
ஓ மகேஷன் உன்னை இதயத்தில் விதைத்த என் நேசக் குரலை நீ கேட்பாயோ<br />
யோகா நாதன் என் உயிரினில் கரைந்திட்ட ஆத்மா ராகம் உனதே <br />
<br />
ஜோதி ஈசனென் அருகினில் இருக்கையில் சூழும் இருளும் இனி வதைதிடுமோ <br />
பூமி யாவும் உள்ள உயிர்களை காத்திடும் அபாய கரங்கள் உனதே <br />
<br />
ஜதியும் ஸ்வரமும் உன் நாமங்கள் உடுக்கை ஒலியும் உன் ரூபங்கள் <br />
<br />
பார்க்கும் திசைகள் எல்லாமும்.. முதலுமாகி முடிவுமாகி நின்றாய் நீ <br />
<br />
ஹர ஹர மகாதேவா .... (12)<br />
<br />
*******************************************************************************************<br />
<br />
அன்புடன் <br />
கன்யாKanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-18278092.post-87383181345158432782010-06-20T15:01:00.001-07:002010-06-20T15:01:24.336-07:00சுமைபூமி தொட்ட <br />
முதல் மழையை <br />
மண் மறந்தது <br />
<br />
கொடியில் பூத்த <br />
முதல் மலரை <br />
கிளைகள் உதிர்த்தது <br />
<br />
முத்தம் இட்ட <br />
முதல் வண்டை<br />
மலர்கூட பிரிந்தது <br />
<br />
பாழும் இதயம் தொட்ட <br />
முதல் காதலை <br />
ஏன் உயிர் இன்னும் சுமக்குதுKanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18278092.post-73153973382228382362010-03-05T13:39:00.001-08:002010-03-05T13:39:56.308-08:00உன்னகாக.........உன் கண்களில் <br />
என்னை மறந்தேன் <br />
உன் மொழிகளில் <br />
நான் சிவந்தேன் <br />
<br />
உன் மௌனங்களில் <br />
உயிர் கரைந்தேன் <br />
உன் பிரிவில் <br />
முழுதாய் மடிந்தேன் <br />
<br />
உன்னை தெரியுமென <br />
கர்வம் என்னக்கு <br />
இன்று உன்னை தெரியாமல் <br />
தொலைத்த தவிப்பு எனக்கு <br />
<br />
உன் நினைவுகளை <br />
நான் தேடும் நொடிகள் அனைத்தும்<br />
உன் வாழ்வில் <br />
சுகம் பல சேர்க்க வரம் வேண்டி <br />
என் பிரார்த்தனைகள்!!Kanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-18278092.post-55459969084516665532009-10-20T11:56:00.000-07:002009-10-20T12:58:03.478-07:00பத்திரிக்கை சுதந்திரம் - லாஜிக் இல்லா மேஜிக்வணக்கம் <br /><br />இன்னைக்கு நம்ம விமர்சிக்கப் போறது "செய்திகள்" <br /><br />நாட்டுல நடக்குற விஷயங்களை தெரிஞ்சுக்க நிறைய வழிகள் இருக்கு. நாளேடுகள், வாரப் பத்திரிகைகள், டிவி ரேடியோ செய்திகள் இப்படி நிறைய. அதுலையும் நாட்டை விட்டு வெளியே வந்து வாழுற என்ன மாதிரி பலருக்கு அவசர அவசரமா கேட்டுட்டு ஓடுற தலைப்பு செய்திகள் .. <br /><br />இன்னைக்கு காதல கூட ஒரு தலைப்பு செய்தி .. <br /><br />"பெண் அதிகாரி தீ குளித்து மரணம், உளவுத்துறை விசாரணையே காரணம்"<br /><br />சரி இது ஒரு செய்தி தான் ஆனா லாஜிக் இடிக்குதே.. <br /><br />...... உளவுத்துறை விசாரணை பண்ற அளவுக்கு எதோ தப்பு நடந்து இருக்கு. இதை பண்ண தெரிஞ்சவங்களுக்கு தப்பிக்க தெரியாத என்ன? <br /><br />...... சரி அப்படியே தற்கொலை தான் தபிக்க ஒரே வழின்னு நினைச்சு இருந்தாலும், அமைதியா, அழகா சாக நிறைய வழிகள் இருக்கே. எதுக்கு கோரமா கரி கட்டை ஆகணும்?<br /><br />இது மட்டும் இல்ல.. இன்னும் சில செய்திகள்..<br /><br />"அனுமதி இல்லாத பட்டாசு கடை தீ பிடித்ததில் நாப்பத்தி நாலு பேர் மரணம்.. மூன்று பேர் கைது" <br /><br />இங்கையும் லாஜிக் இடி படுத்து..<br /><br />...... அனுமதியோட கடை வைக்கிறவனே கல்லாவை கட்டிப் பிடிச்சுகிட்டு இருப்பான். ஆனா இங்கே இப்போ கைது பண்ணி இருகாங்க!!<br /><br />...... பட்டாசு கடையில எப்படி தீ பிடிச்சுது? எப்படி வேடிகிறதுன்னு வெடிச்சு காட்டினாங்கள? இல்ல பீடி பிடிச்சு போடாங்கள இப்படி எந்த விவரமும் இல்ல.<br /><br />...... யாரோ அத்தனை போரையும் உள்ள வெச்சு பூட்டிட்டு பத்த வெச்ச மாதிரி இருக்கு, இப்படி மொட்டையா செய்திகள் சொன்ன என்ன அர்த்தம்<br /><br />இது கூட ஒரு அளவுக்கு ஒத்துக்கலாம், ஆனா பூட்டி இருந்த இரும்பு கடை தீ பிடித்து மொத்தமா சேதம் ஆச்சாம்.. இந்த கொடுமைய எங்கே போய் சொல்ல. தீபாவளி நேரம் தான் அதுக்காக இரும்பு கூடவா? <br /><br />...... ஒரு இரும்பு கடைய கற்பனை பண்ணுங்க, அங்கே ஒரு பட்டாசு தெறிச்சு விழுது. இதனால இரும்பு கடையே சேதம் ஆகுதுன்னா பட்டாசு விழுந்த இடத்துல ஒன்னு வெடி பொருள் இருந்து இருக்கணும்.. அதுக்கு வாய்ப்பு கம்மி ஏன்ன வெடி பொருள் இருந்து இருண்ட மொத்தமா வெடிச்சு சிதறி இருக்கும்... இல்ல ஒரு டிரம் நிறைய எண்ணை இருந்து இருக்கனும்... இரும்பு அடிக்க எண்ணை எதுக்கு? அட அதுவும் இல்லையா அட்லீஸ்ட் ஒரு பஞ்சு மூட்டையாவது இருந்து இருக்கனும்.. ஆனா அதுக்கு எல்லாம் இரும்பு அசைஞ்சு கொடுக்காது.<br /><br />...... பூட்டி இருந்த கடை திறக்க முடியலாம் அதுனால மொத்தமா அழிஞ்சு போச்ச? ஏன் அது என்ன வேர்ல்ட் பேங்க் லோக்க்கேர்'எ போட்டு இருந்தது? <br /><br />கொடுமை கொடுமைன்னு இந்த வருஷம் தீபாவளிக்கு வட நாட்டு இனிப்பு வகைகளுக்கு அதிக வரவேற்ப்பா ஒரு சிறப்பு ரிப்போர்ட் ... இது செய்திகள்'ல சொல்ற விஷயமா? <br /><br />என்ன கொடுமை சரவணன் இது? <br /><br />கேக்குறவன் கேனையனா இருந்தா கேழ்வரகுல கூட கிக்கு ஏருமாம!!!!Kanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18278092.post-31471685865580956772009-08-31T23:22:00.000-07:002009-09-01T06:33:29.778-07:00ஏன்????கேளடி பராசக்தி <br /><br />மேகங்களின் பாரம் குறைய <br />மழை துளி தந்தாய் <br />மழை துளிகள் விழுவதை தாங்க <br />அருவிகள் தந்தாய்<br /><br />அருவிகளின் வேகம் தடைபட <br />நதிகள் தந்தாய்<br />நதிகளின் தேடல் கிடைக்க <br />கடல்தனை தந்தாய்<br /><br />கடல்மகள் வெட்பம் தணிக்க<br />தழுவும் தென்றல் தந்தாய்<br />தென்றலின் ஈரம் எடுத்து <br />மேகம் தந்தாய்<br /><br />நின் படைப்பில் <br />அனைத்துக்கும் இலக்கொன்று படைத்தாய்<br />அதை ஒரு வட்டத்துக்குள் வரைந்து வைத்தாய்<br /><br />சொல்லடி பராசக்தி <br />மனிதனை மட்டும் ஏன் அலைய விட்டாய் <br /><br />இன்னதென்று தெரியாது <br />ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு<br />அதை தேடித்திரிய <br />இருட்டில் ஒரு பாதை<br /><br />தேடல் தீரும் முன்பே <br />தள்ளாடும் தேகம்<br />பயணம் முடியும் முன்பே <br />உயிர் விடுபடும் வேகம் <br /><br />ஏன் இல்லை நிறைவு <br /><br />மார்கங்களில் கிடைக்கும் என்று<br />மனமொத்து நாடினால் <br />மதம் என்ற மதம் பிடித்து <br />மானுடம் அழியக் கண்டேன் <br /><br />ஏனடி பராசக்தி<br /><br />போராடும் மனமும்<br />புரியாத குணமும் <br />முடியாத தேவைகளும்<br />மனிதருக்கு கொடுத்தாய்Kanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18278092.post-87978635541638006912008-12-03T02:12:00.000-08:002008-12-03T04:35:28.830-08:00இருண்டு கொண்டிருக்கும் தமிழ் நாடுஓட்டு போடுறது நம்முடைய உறிமை.. சரிதான்.. ஆனா ஓட்டர் லிஸ்ட்'ல நம்ம பேரு பதிவு பண்ணுறதுக்குள்ள நாய் படாத பாடு பட்ட ஒரு குடிமகள் நான்..<br /><br />வயித்தெரிசலா இருக்குங்க தமிழ் நாட்டோட நிலவரம் பாக்கும் போது.... அரசியல்'ல குடும்பம் மொத்தமும் கூடி உக்காந்து கும்மி அடிச்சாங்க.. அப்பறம் கேபிள் .. அப்பறம் தனியார் தொலைக்காட்சி .. அதுல படம் மட்டும் காட்ட ஒண்ணு.. பாட்டு மட்டும் காட்ட ஒண்ணு.. அவங்க வசதிக்கு செய்திகள் வசிக்க ஒண்ணு.. காமெடிக்கு ஒண்ணு.. குடும்பம் ரெண்டு பட்டதுனால தொலைக்காட்சி வரிசைகளும் ரெண்டு பட்டு இப்போ.. நாலுக்கு எட்டு சேனல்கள் .. <br /><br />சரி அப்படித்தான் எட்டு சேனல் இருக்கே எதுலையாவது நல்லதா நாலு வார்த்தை கேக்க முடியுதா... எல்லாத்துலயும் இழவெடுத்த காதல் படம்.. காதல் பாட்டு.. கேவளமான நகைச்சுவை .. தேவை இல்லாத ரியாலிட்டி ஷோ.. இன்னும் என்ன எல்லாம் பாக்க வேண்டியது இருக்கோ??<br /><br />சரி விட்டு தொலைக்கலாம்'னு நினைச்சா.. அடுத்து சினிமாத் துறை.. அதுல தான் என்ன புதுசா காட்டுறாங்கன்னு பாத்தா ... செத்து போன காதலியோட பிணத்தை தூக்கி கிட்டு திரியறதுதான் காதலாம்!! என்ன கொடுமை சார் இது!!<br /><br />இவங்க திட்டம் தான் என்ன??<br /><br />குடும்பம் மொத்தமும் எல்லா துறைகளிலும் அசைக்க முடியாத அளவு ஊடுருவிட்ட அப்பறம் நாடென்ன நட்டு மக்கள் என்ன ?? எல்லாத்தையும் அடிமைகள் ஆகிடலாம் இல்லையா? <br /><br />எதோ இப்போதான் இளைஞர்கள் எல்லாம் படிப்பு, தொழில், சாதனைகள்'னு உழைப்பை மதிக்க ஆரம்பிச்சு இருகாங்க.. இப்போ அவங்களை மறுபடியும் காதல்.. கத்திரிக்காய்'னு பித்து பிடிக்க வெச்சுட்ட .. கூலி இல்லாத அடிமைகள .. சுய புத்தி இல்லாத மூடர்கள என்னைக்கும் நம்மை ஆட்டி வைக்கலாம் இல்லையா?<br /><br />சரி இதை எல்லாம் விடுங்க.. ஓடி ஓடி உழைச்சு 30% வரி கட்டுரோமே.. அந்த பணம் எங்கே போகுது தெரியுமா?.. மறைந்த தலைவர்களோட பழைய வீடு, சமாதி இதை எல்லாம் பராமறிக்க மட்டுமே ஒரு வருசத்துக்கு எவ்ளோ செலவு ஆகுது தெரியுமா?? <br /><br />அது மட்டுமா?? வயது வரைமுறை இல்லாம.. இந்த அளவுகாவது ஆரோக்கியமா இருக்கணும்'னு எந்த சட்டமும் இல்லாம .. இன்னும் தலைவர்கள இருக்குற சிலரோட மருத்துவச் செலவுக்கு.. தன்னை தானே காப்பாதிக்க முடியாத தலைவர்களுடைய அளவுக்கு அதிகமான பாதுகாப்புக்கு.. உக்காந்தா எழுந்துக்க முடியாத தலைவரோட தனிப்பட்ட நர்சு செலவுக்கு.. இன்னும் சொல்லனுமா என்ன??<br /><br /><br />தெரியாமத்தான் கேக்குறேன்.. நமக்கு தெரிஞ்சு அறுவது எழுவது வயசு ஆனா நம்ம தாத்த பாட்டி எல்லாம் போகும் போது யாருக்கும் தொல்லை இல்லாம .. வலி இல்லாம போகணும்'னு தானே கடவுளை வேண்டி இருகாங்க.. அது ஏன் சிலருக்கு இருக்க மாட்டேங்குது.. ஒரு உடல் இவ்ளோ நாள் தான் இருக்கும்'னு ஒரு அளவு இருக்கு இல்லையா? அதுக்கு மேல அதை வாட்டினா என்ன ஆகும்!!<br /><br />காது கேக்குறது இல்ல.. பிரஸ் மீட்'ல பத்திரிக்கை ஆளுங்க என்ன கேக்குறாங்கன்னு காதுல விழுந்து அது மண்டைக்கு போறதுகுள்ள வாய் எதையோ சொல்லி தொலைக்குது.. அதுவும் அறிவோட அனுமதி இல்லாம .. இதை ஒண்ணு பத்திரிக்கை உலகம் புரிஞ்சுக்கனும்.. இல்ல பிற தனியார் தொலைக்காட்சிகளாவது புரிஞ்சுக்கனும்.. ரெண்டுமே இல்லாம அதையும் ஒரு சுட சுட செய்தி ஆக்கி நம்ம காதுல ரத்தம் வர வைக்கிறாங்க.. <br /><br />கண்ணு தெரியறது இல்ல ஆனா திரை உலகம் மொத்தமும் கூடி மேடை'ல நடிகைகளை ஆட விடும் போது மட்டும் முதல் வரிசைல உகந்து என்ன பாக்குறாங்க??<br /><br />குடும்பத்துக்குள்ள அடிசுகுறாங்க.. நான் அப்படி என்ன தப்பு செய்துட்டேன்னு சீன் போடுறாங்க.. அவங்க பண்றது மட்டும் சரியான்னு சகதிய மாதி மாதி விசிகிறாங்க.. அப்பறம் ஒன்னு கூடி ஈ'னு இழுசுகிட்டு பத்திரிகைக்கு போஸ் கொடுக்குறாங்க.. <br /><br />தேர்தல்ன்னு வந்தா.. கலர் டி வீ கொடுக்குறாங்க.. ரூபாய்க்கு கிலோ அரிசி கொடுக்குறாங்க.. என்ன கணக்கு இது எல்லாம்?? இதுக்கு எல்லாம் யாரோட பணம் போகுது.. என்ன யோசனை எல்லாம் நம்ப கொடுக்குற வரிதான் <br /><br />அண்ணாத்துரை காலத்துல ஒரு ரூபாய் ஒண்ணும் இன்னைக்கு இருக்குற ஒரு ரூபாய் கணக்கு இல்ல.. அப்போ ஒரு கிலோ அரிசி மூணு ரூபாய்'னு சராசரி மனிதன் வாங்கினா.. ஏழைகளுக்கு அண்ணாத்துரை ஒரு ரூபாய்க்கு கொடுக்கணும்'னு நினைச்சார்.. அது நியாயம் .. இன்னைக்கு வரி கட்டுரை நாம எல்லாம் ஒரு கிலோ அரிசிய முப்பது ரூபாய்க்கு வாங்கின, நியாய விலை பத்து ரூபையாவது இருக்க வேண்டாமா?? <br /><br />இது மூலமா என்ன சாதிச்சீங்க.. ஆட்டோ ஓட்டுறவன்.. கூலி வேலை செய்றவன் எல்லாம் ஒரு நாளைக்கு நூறு ரூபாய் சம்பாரிச்சா, அறுவது எழுவது ரூபாய் வீட்டுக்கு கொடுத்துட்டு நாப்பது இல்ல முப்பது ரூபாய்க்கு குடிகிறான்னு வெச்சுக்குவோம்... அவனே இன்னைக்கு நாப்பது இல்ல முப்பது ரூபாய் வீட்டுக்கு கொடுத்துட்டு அறுவது எழுவது ரூபாய்க்கு குடிகிறான்.. அதான் ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைக்குதே!!<br /><br />சரி.. இது மட்டும் தான.. இன்னும் எத்தனை பிரச்சனை இருக்கு தெரியுமா?? இலங்கை தமிழர் பிரச்னைக்கு வருவோம்.. இன்னொரு தனியார் தொலைக்காட்சி'ல ஒரு இலங்கை தமிழர் பேசியது!! அவங்க நாட்டுல ஆடம்பரமா வாழ்தவங்க இங்கே வந்து கஞ்சிக்கு கூட கஷ்டப் படுறாங்கன்னு.. அகதிகள்'னு கணக்கு கட்ட மட்டும் அவங்களை பயன் படுத்துற அரசாங்கம் அவங்களுக்கு உழைக்க ஒரு வழி காட்டுறது இல்ல.. தீவிரவாதிகள்'னு பீதில இருக்குற போது ஜனங்களும் அவங்கள நம்பி வேலை கொடுக்குறது இல்ல.. அப்பறம் எப்படி அவங்க வாழுவாங்க? <br /><br />பாஸ்போர்ட் கொடுக்க பண்ற பேக் ரௌண்ட் செக் மாதிரி இவங்களுக்கும் செய்து ஒரு அரசாங்க அட்டை கொடுத்தா அவங்க வேலை தேடிக்க வசதியா இருக்கும் இல்லையா? அதை ஏன் செய்றது இல்ல.. இப்படி எல்லாம் அவமாணப் படனுமேன்னு தான்.. அவங்க யாரும் இங்கே வந்து அசிங்கப் பட்டு போறதுக்கு சொந்த நாட்டுளையே அடி பட்டு சாகலாம்'னு நினைகிறாங்க.. தீவிரவாதம் ஏன் வளராது?<br /><br />இப்போ மும்பை'ல நடந்த குண்டு வெடிப்பே இருக்கட்டும், ஏழைகள் கூட்டம் கூடமா வாழுற எத்தனையோ இடங்கள் இருக்கு மும்பை'ல அங்கே எல்லாம் குண்டு போட்டு இருந்தா எத்தனை பேர் செத்து இருப்பாங்க.. தீவிரவாதிகளுக்கும் அது தானே வேணும்.. நிறைய மரணம்.. ஆனா ஏன் அவங்க வெறும் பணம் படைத்த சமுதாயத்தில் குண்டு போட்டாங்க?? <br /><br />மஞ்ச பத்திரிகை கொடுத்த பச்சன், ஆனா அவரோட குடும்பம் இன்னைக்கு உலகம் முழுக்க ஒளிபரப்பாகுற தொலைக்காட்சி கணகேடுப்புப் படி இரண்டாயிரம் கோடி மதிப்புள்ள சொத்து உள்ளவர்களாம்!! வெறும் ஆயிரக் கணக்குல கடன் வாங்கிட்டு வங்கிகளோட தொல்லை தாங்காம தற்கொலை செய்துக்குற அவலமும் இங்கே தான் .. 2000 கோடி சொத்து உள்ள பிச்சைக்காரணும் இங்கதான் .. அப்பறம் ஏன் சார் தீவிரவாதம் வளராது!!<br /><br />தனியார் தொலைக்காட்சி'ல ஒரு நிகழ்ச்சி'ல சொல்றாங்க.. தமிழ் நாட்டுல ஒரு கிராமத்துல பிறந்த குழந்தைக்கு சூடு போடுறாங்களாம்.. அப்படி சூடு போட்ட நோய் வராதாம் .. காத்து கருப்பு அண்டாதம்!! இது அவங்களோட நம்பிக்கையாம்.. அதுக்கு அந்த ஊரை சேர்ந்த கலெக்டர் மருத்துவர்கள் போலீஸ் எல்லாரும் பொய் அப்படி செய்யாதீங்க அது தப்பு.. இது தொடர்ந்து நடந்த உங்க மேல சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும்'னு கேஞ்சினாங்களாம்.. அப்படியும் அது தொடர்ந்து நடக்குதாம்.. பெத்தவங்களே அதை செய்யும் போது யார் மேல எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்'னு வருத்தப் படுறாங்களாம்!!<br /><br />ஏன்? அந்த ஊருல இருக்குற குழந்தை பெத்துகுற வயசுல இருக்குற எல்லாருக்கும் பேசாம குடும்பக் கட்டுப்பாடு செய்து விட வேண்டியதுதானே? இது கொலையும் இல்ல .. இனி அவங்களால கொலை செய்யவும் முடியாது இல்லையா? இருக்குற சின்ன குழந்தைகள் எல்லாம் வளைந்து வந்து கல்யாணம் குடும்பம்'னு ஆகா எப்படி 15 - 20 வருஷம் இருக்கும் .. அவங்களுக்கு எல்லாம் சொல்லி கொடுத்து வழக்களாமே!!<br /><br />ஒரு உயிரை காப்பாத்த கூட கேஞ்சனுமா என்ன? இந்த மாதிரி முடிவு எடுக்க அரசாங்க மருத்துவர்களுக்கு உறிமை இருந்தா அவங்கங்க கண்டிப்பா இப்படி ஒரு முடிவை எடுபாங்க..<br /><br />என்னடா இவ்ளோ கொடூரமா சொல்லுறாளேன்னு நினைகுறீங்களா?? நடகுறதும் கொடுமை தாங்க .. இதை எல்லாம் விட நம் மக்களுக்கு சினிமா.. நடிகர்கள் .. அரசியல் தலைவர்கள் .. இது எல்லாம் தான் பெரிசா தெரியுது!! <br /><br />சொல்லி முடியாத அவலம்!!Kanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-18278092.post-68862248527990315592008-09-05T07:31:00.000-07:002008-09-08T00:40:59.610-07:00தொடரும்!!என் இதயச் சுவர்களில்<br />காலம் இட்ட சூடு<br />காய்ந்த <span class="">பிறகும் </span><span class="">பதிந்து </span>போன<br />தழும்புகளின் சாயல் -<br />என் வார்த்தைகளில்<br /><span class="">கசப்பாய் </span>கசிகிறது என்றாய்<br /><br /><span class=""></span><br /><span class="">மறுத்துப் பேச </span><span class="">மொழி அரியது </span><br /><span class=""></span><span class="">சிக்கனமாய் </span>புன்னகைக்கிறேன்<br /><span class=""></span><br />உதடுகளில் தேன் வைத்து<br />உள்ளத்தில் தீ வைக்கும்<br />சில நிழல்களை<br />நிஜம் என்று நினைத்த<br />வெள்ளை மனதொன்றில்<br />இந்த மாற்றம்<br /><br /><span class="">இறுகிய </span>என் உணர்வுகள்<br />உன்னகேனும் புரிகிறதா என்றேன்<br />மௌனமாய் ஆமோதிக்கிறாய்<br /><span class=""></span><br /><span class="">சொல்லி என்ன... </span><span class="">கேட்டென்ன </span><br />திசைக்கு ஒன்றை பாதைகள்<br />திக்குக்கொன்றை ஆசைகள்<br />சந்திப்போம் ஒரு நாள்<br />நம் பாதைகள் சேர நேர்ந்தால்Kanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-18278092.post-10430073392201012742008-08-26T02:39:00.000-07:002008-08-26T03:06:11.418-07:00ஹைக்கூ<strong><u><em>தனிமை</em></u></strong><br /><br /><span class="">விரையமாகும் போதும்</span><br /><span class=""><span class="">வளர்ந்து கொண்டே போகும் </span> </span><br />வேண்டாத செல்வம்<br /><br /><strong><u><em>போர்</em></u></strong><br /><span class=""></span><br /><span class="">காதலில் மயங்கும் </span><br /><span class="">இதயம் - அதை </span><br /><span class="">சொல்லத் தயங்கும்</span><br />உதடுகள்<br /><span class=""></span><br /><strong><u><em>முதிற் கன்னி</em></u></strong><br /><span class=""></span><br /><span class="">கனவுகளை கருவாக்கி </span><br /><span class="">கண்களில் சுமந்து வரும்</span><br /><span class="">நித்திய கற்பினி </span><br /><span class=""></span><br /><strong><u><em>மரணம் </em></u></strong><br /><span class=""></span><br /><span class="">முடியாத இரவுகளில்</span><br /><span class="">கலையாத நித்திரை </span><br /><br /><strong><u><em>பிறப்பு</em></u></strong><br /><strong><em><u></u></em></strong><span class=""></span><br />முண்ணுறு திங்கள்<br />தேயாது வளரும்<br />முழு நிலவு<br /><br /><span class=""></span><br /><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span><br /><span class=""></span>Kanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-18278092.post-68956506294017853782008-05-05T00:19:00.000-07:002008-05-05T02:38:03.129-07:00என்று தனியும் இவள் தாகம்?உறவுகள் கோடி <span class="">கூடி இருந்தும் </span><br /><span class="">ஊமையாய் ஒரு இதயம் </span><br /><span class="">உதிர்ந்து போன நிஜங்களை</span><br /><span class="">ஓயாமல் அசைபோடுகிறதே </span><br /><span class=""></span><br /><span class="">நினைவுகளைச் சுமக்கும் </span><br /><span class="">கூட்டின் வழிச் </span><br /><span class="">சொல்லி முடியுமென்றால் </span><br /><span class="">உதடுகள் காயச் சொல்லி இருப்பாள் </span><br /><span class=""></span><br /><span class="">அவள் என்ன செய்குவாள்</span><br /><span class="">பாவம் நாட்களை தொலைத்துவிட்டு</span><br /><span class="">நினைவுகளில் மட்டுமே </span><br />சிறை பட்டு வாழுகிறாள்<br /><br />ஏட்டுப் பாடம் பயிலும் வயதில்<br />வேறு எண்ணம் வாராது வளர்ந்தாள்<br />காதலை உணர்ந்த சாபம்<br />இவள் இன்று இந்தக் கோலம்<br /><span class=""></span><br /><span class="">இவள் கோபம் </span><br /><span class="">காதலின் மீது அல்ல </span><br />தொலைந்து போன<br /><span class=""></span>காதலன் மீதும் அல்ல<br /><br />மனிதனின் மீது<br />அவனுள் உறைந்து போன உணர்வுகள்<br />அவன் மறந்து போன மானுடம்<br />அவசரமாய் அவன் தீர்த்துக் கொள்ளும் உணர்ச்சிகள்<br /><br />என்ன அவலம்<br />எப்படி செய்வாள் காதல்<br />யாரிடம் தேடுவாள்<br />உறக்கப் பேசும் உணர்வுகளைKanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-18278092.post-6011827103317026262008-01-08T11:38:00.000-08:002008-01-10T10:08:48.615-08:00நீ நான் காதல்!!வானம் அந்த வானம்<br />மஞ்சள் பூசும் நேரம்<br />இதமாய் ஒரு கானம்<br />என் காதோடுதான் கேட்கும்<br /><br />மேகம் வென் மேகம்<br />மெதுவாய் தவழும் காலம்<br />சில்லென்று சில தூரல்<br />என் தேகம் உரசிப் போகும்<br /><br />உன் பேயரே கானமாய்<br />உன் வாசமே தூரலாய்<br />என்னைத் தொடும் போதெல்லாம்<br />நானாக நான் இல்லை<br />என் நிழல்கூட எனதில்லை<br /><br />என் அருகில் நீ இருக்க<br />உன் அணைப்பில் நான் தவிக்க<br />மார்போடு முகம் புதைத்தேன்<br />எனக்குள் துடிக்கும்<br />உன் இதயத்தில் சுகம் வேண்டி<br /><br />போதுமென்று நான் சிணுங்க<br />வேண்டுமென்று நீ சீண்ட<br />இதழோரம் தேங்கிய<br />சில பணித்துளிகளில்<br />நனைந்தது நான் மட்டுமல்ல<br /><br />உன் தோளோடு எனைச் சேர்த்து<br />பரிவோடென் உச்சி முகர்ந்து<br />ஆதரவாய் எனை அனைத்து<br />நம் சுவாசம் ஒன்றாய் கலந்து<br />உறையும் இந்த இரவுகளில்<br />தொடரும் நம் நெருக்கம்<br /><br />இன்று போல் என்றும் வாழ்<br />இன்னும் வேண்டும்<br />பல கோடி பௌர்னமிகள்<br />உன்னோடு மட்டும்Kanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-18278092.post-75323674589572921672007-11-29T11:57:00.000-08:002007-11-29T12:22:11.422-08:00நேசம் மறந்த நெஞ்சம்!!வானம் வேண்டா நிலவு<br />ஈர மேகம் வெறுத்த பூமி<br />தென்றல் தழுவா சோலை<br />புல்வெளி காண பணித்துளி<br /><br />கடலைச் சேராத நதி<br />கறைக்கு வாராத ஓடம்<br />பகலைப் பாராத தாமரை<br />இரவில் மலராத அல்லி<br /><br />கீதம் பாடாத குயில்<br />விண்ணைத் தொடாத கிளி<br />தேண்சுவை கசந்த தேணீ<br />மழைத்துளி சுட்ட ம்யிலிறகுKanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-18278092.post-76654926060162923382007-08-25T16:01:00.000-07:002007-08-25T16:03:15.402-07:00பணயம்!!பாதைகள் பல<br />கடந்து வந்தேன்<br />ஓய்ந்ததென்<br />கால்கள் மட்டுமல்ல<br /><br />வார்த்தைகள் பல<br />உதிர்த்துவிட்டேன்<br />சிதறியது<br />சொர்க்கள் மட்டுமல்ல<br /><br />இரவுகள் பல<br />விழித்திருந்தேன்<br />தேடியது<br />விடியலை மட்டுமல்ல<br /><br />காலங்கள் பல<br />கறையவிட்டேன்<br />தொலைத்தது<br />வயதை மட்டுமல்ல<br /><br />இனி எதை<br />பணயமாக்குவேன்<br />உடைந்த துகள்களிலிருந்து<br />என்னை மீண்டெடுக்க!!Kanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-18278092.post-20315359487008373922007-08-02T09:44:00.000-07:002007-08-03T03:28:00.633-07:00வரம் தா!!விடியலைத் தேடி<br />என் இரவுகள்<br />ஒளியினைத் தேடி<br />ஓடும் பாதைகள்<br /><br />அமைதியைத் தேடி<br />அலரும் இதயம்<br />ஏன் தந்தாய் இறையா<br />இப்படி ஒரு சாபம்!!<br /><br />மனதைப் படைத்தாய்<br />அதில் வலிகளை விதைத்தாய்<br />விழிகள் கொடுத்தாய்<br />பல கனவுகள் உலவவிட்டாய்<br />அறிவொன்று தந்தாய் - அதன்<br />அழிவையும் உணரச்செய்தாய்<br /><br />உணர்வுகள் தந்தாய்<br />உணர்ச்சிகள் உறையக் கண்டாய்<br />ஊன் ஒன்று தந்தாய்<br />உயிர் கசிய பார்த்து நின்றாய்<br />பாதைகளை வகுத்துவிட்டு<br />இலக்கினை மறைத்து வைத்தாய்<br /><br />எதைத் தேடுகிறோம் அதை<br />எதற்காகத் தேடுகிறோம் என்ற<br />பொருளில்லா தேடல்<br />இந்த வாழ்க்கை<br /><br />இன்று வருமோ இல்லை<br />என்று வருமோ என்று<br />ஓயாமல் ஓடும்<br />பல காலம்<br /><br />இனியும் தேட சக்தி கொடு<br />இல்லையேல்<br />இனியாவது ஓய்வு கொடு!!!Kanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-18278092.post-61822112544983139472007-06-19T10:59:00.000-07:002007-06-19T12:07:37.627-07:00சிவாஜி - ஒரு பிரம்மாண்டம்மக்களே,<br /><br />ஒரு மூணு நாலு மாசமா இந்த பக்கம் வர முடியல. சில நண்பர்களோட வலைப் பக்கம் சத்தமில்லாம எட்டிப் பார்த்துட்டு ஓடிட்டேன்... என்னடா ஆளைக் காணோம்ன்னு நினைச்சவங்களுக்கு எல்லாம்.. இதோ வந்துட்டேன்.. அப்பா ஒரு தொல்லை குறைச்சல்ன்னு நினைச்சவங்களுக்கு எல்லாம்.. கிளம்பிட்டோம்ல... :)<br /><br />சரி இனி மேட்டருக்கு வருவோம். சிவாஜி பார்த்தேன். இருங்க இருங்க.. பச்சைக்கிளி முத்துச்சரம் மாதிரி திரைவிமர்சனம் எல்லாம் போடல... படம் சப்பையா இருந்தா ஏதோ மக்கள் இப்படி ஒரு படத்தைப் பார்க்காம எஸ்கேப்பிக்கட்டுமேன்னு திரைவிமர்சனம் போடலாம்... ஆனா இந்த மாதிரி படத்துக்கு போடக் கூடாது!!!<br /><br />இந்த பகுதிய கொஞ்சம் வித்தியசமா எழுதப்போறேன். இப்போ சிவாஜி எப்படி இருந்துச்சுன்னு நம்ம வைகைப் புயல் வடிவேலு சொல்லப் போறார். அவர் சொல்ல சொல்ல நான் நோட்ஸ் எடுத்துகிட்டேம்பா...<br /><br />***********************************************************************************<br /><br />ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... சொப்பா... என்ன கூட்டம் என்ன கூடடம்.. ஏம்மா கன்னியா எப்படி நம்ம தலைவர் சும்மா அசத்திப்புட்டார்ல... அது என்னவோப்பா இவருக்கு மட்டும் வயசே ஆக மாட்டேங்குது... ஹம்.. வகையா, எளசா, தினுசா ஜோடி போடுறாரு.. அதுக்கு எல்லாம் ஒரு மச்சம் வேணும்.. தார் ஊத்துன மாதிரி இருக்குற என உடம்புல மச்சம் இருந்தாலும் தெரியாது!!..<br /><br />அடா அடா அடா.. என்ன ஒரு எண்டிரி கொடுக்குறாரு சிவாஜி.. அமேரிக்கா ரிட்டர்ன்னு.. அசத்தல் இங்கிலிபிஸ்.. ஆளே வாயப் பொலக்கிற மாதிரி இருக்காரே.. ஒரு பத்து பதினஞ்வி வயச முழுங்கிப்புட்டாரப்பா...<br /><br />படம் ஆரம்பிச்சதுல இருந்து முடிக்கிற வரைக்கும் தொறந்த வாய நான் மூடவே இல்ல... முடியல... நம்ம சிரேயா குட்டி நம்ம தலைய கருப்புன்னு சொல்லிடுச்சேன்னு கலர் ஆகுறதுக்கு இவர் போட்ட லூட்டி.. அய்யோ அய்யோ.. <br /><br />பன்ச்சு டைலாக்கு கொடுக்குறாரு பாரு.. "கிடைச்சவங்கள கல்லியாணம் பண்ணிக்கிறதை விட புடிச்சவங்களை கல்லியாணம் பண்ணிக்கணுமாம" வேண்டாம்'ன்னா சொல்லப் போறேன்.. இந்த முகறக்கட்டைய போக்கிரியில என்னையவே கொரங்கு பொம்மைன்னு சொல்ல வெச்சுட்டாங்க. இந்த லச்சணத்துல புடிச்சவங்க எங்க மாட்டப் போறாங்க!!!<br /><br />அது மட்டுமா, அன்னியன் மாதிரி கூட்டத்துக்கு நடுவுல சும்மா சுத்தி சுத்தி அடிக்கிறாரப்பா... பாத்த எனக்கே பல்லு கலண்டு போச்சு, வாங்குன அவனுங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்!! "பன்னிங்கதாண்டா கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாத்தான் வரும்"ன்னு போட்டாரு பாரு.. நம்ம அலப்பறை எல்லாம் ஒன்னுமே இல்ல!!<br /><br />மொதலமைச்சர சொருகீட்டு கையெழுத்துப் போடலைன்னா கேபிள கட் பண்ணிடுவேன்னு பொரட்டிட்டு, பணத்தையாவது கொடுக்கலாமேன்னு கேட்டா, கொடுப்பேன் ஆனா ராத்தி வந்து பாதிய புடுங்கிடுவோம் மீதிய வரித்துரைக்கு போட்டுக் கொடுத்துறுவோம்'ன்னு ஆட்டைய போட்டாரப்பா...<br /><br />தமிழ் நாட்டுல மட்டும் 20 லட்சம் கோடி கருப்பு பணம் இருக்குதாம்யா... இதைத்தான் ஆபீஸ் ரூம்ல வசூல் பண்ணுறாரு நம்ம பாஸ்.. இனி எவனும் ஆபீஸ் ரூம் பக்கமே போக மாட்டாய்ங்க.. (இல்லன்னா மட்டும் நம்ம பசங்க கிளிக்கிறானுங்க...)<br /><br />ஒரு கார் சண்டை சீண்... கண்ணக் கட்டிருச்சப்பா!! நடுவுல ஒரு பிட்டு, நடிகர் திலகம் சிவாஜி அய்யாவோட பாட்டு, மக்கள் திலகம் என் அருமை அண்ணன் எம்.ஜி.ஆர் அய்யாவோட பாட்டு, காதல் மன்னன் கமல ஹாசனோட நேத்து ராத்தி அம்மா பாட்டு இதுக்கு எல்லாம் இவரும் சிரேயாவும் அந்தந்த காஸ்ட்டியூம் போட்டு ஆடுனது.. ஹ்ம்ம்... வையித்தெரிச்சலப் போச்சு... அது சரி, பல்லு இருக்கு பகோடா சாப்பிடுறாரு!!<br /><br />காஸ்ட்டியூம்ன்னு சொன்னதும் இந்த பாட்டுக்கு எல்லாம் டிரஸ் ஒண்ணும் சரி இல்ல... என்னா ஆப் ஆகிருச்சு.. இரு இன்னும் சொல்லி முடிக்கல.. அந்த பொண்ணு என்னவோ அம்சமாத்தான் இருக்கு... ஆனா பாவம் டிரஸத்தான் ரொம்ப குட்டியா கொடுத்துட்டாங்க... ஹா பிரைட் ஆகிருச்சு.. உங்க மூச்சிதான்.. பொண்ணுக்கு சின்ன டிரஸ்ன்னு சொன்னா போதுமே... ஆனா, அந்த செட்டு, பொண்ணுங்க, சிரேயா எல்லாத்தையும் தூக்கி சாப்பிடுற மாதிரி நம்ம தலை மொத்தமா கவர் பண்ணிட்டாரு.. இன்னொரு தடவ பிகருங்கள பாக்கிறதுக்காக சிவாஜிய மறுபடியும் பாக்கணும்.<br /><br />படத்துல சொல்ல வேண்டிய இன்னொரு அம்சம் நம்ம சுமனோட நடிப்பு.. அண்ணமாச்சாரியார்'ல பார்த்த சுமனா இதுன்னு நம்பவே முடியல.. என்ன வில்லத்தனம்யா.. <br /><br />படத்துல எல்லாமே டாப்பு... ஆனா ஒரே ஒரு புகைச்சல், அந்த வெட்டி வாயன் விவேக்'க போட்டுப்புட்டாரே... ஹ்ம்ம்.. சொல்லக் கூடாதுன்னுதான் நினைச்சேன் ஆனா சொல்லாம இருக்க முடியல.. பய நல்லாவே பண்ணி இருக்கான்!!<br /><br />இதுக்கு மேல சொல்ல என்னால ஆகாதப்பா.. இப்பவே கண்ணக் கட்டுது... போய் ஒழுக்கமா தியேட்டர்'ல விசில் பறக்க சிவாஜியா பாத்து மிரண்டுட்டு வாங்க...<br /><br />முடியே இல்லாம மொட்டையா வந்தாலும் அழகா இருக்காரே!!<br /><br />"ஸ்டாப்பிட்"<br /><br />எவ அவ?<br /><br />நான் யாருன்னு தெரியல??<br /><br />ஆஆஆஆ... பார்த்தீ... (இவனா!!!)<br /><br />நீ சொல்லைன்னா நம்ம மக்கள் தியேட்டர் போய் பாக்க மாட்டாங்களா?<br /><br />இல்லப்பா... திருட்டு வீசீடி அப்படி இப்படின்னு ... எல்லாம் ஒரு பார்மாலிட்டிக்குத்தான்<br /><br />ஹா? திருட்டூ... வீசீடியா... யோவ் மக்களே அதை மறந்து இருந்தாலும் நீங்களே நியாபகப் படுத்தி விடுங்க!! எங்கப்பன் குதறுக்குல்ல இல்லைன்னு!!<br /><br />ரைட் விடு..<br /><br />என்னத்த ரைட் விடு?<br /><br />நீ சொன்னதுதாம்பா<br /><br />என்ன நீ சொன்னதுதாம்பா?<br /><br />ஆஹா... ஆரம்பிச்சுட்டான்யா... அம்மா கன்னியா இதோட முடிச்சுக்குவோம்.. இல்லைன்ன இவன்... இல்ல இல்ல இவர் என்னை பிச்சு பிக்காரனாக்கி விடுவாரு... யப்பா ராசா.. மன்னிச்சுக்கோ... கெளம்பலாம்மா...<br /><br />சொல்லிகிட்டே இருக்க.. கிளம்பு...<br /><br />நீ... சாரி.. நீங்க..<br /><br />நான் எப்பவோ கிளம்பிட்டேனே...<br /><br />ஆஹா.. என்னை கெளப்பத்தான் நீ கெளம்புனியா?? வாஜி வாஜி சிவாஜி, நீ வாஜி வாஜி என் பாஜி!!!<br /><br />*********************************************************************************<br /><br />ஹிஹி.. சரி மக்களே சிவாஜி போய் பாருங்க... என்சாஆஆஆஆய்!!!<br /><br />கன்யாKanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-18278092.post-23393372983808831882007-02-25T04:33:00.000-08:002007-02-25T04:37:43.017-08:00சின்னஞ் சிறு வயதில்!!!கடந்த சில மாதங்களாக நான் கண்ட, கேட்ட செய்திகளில் சில:<br /><br />(1) 5 வயது சிறுமி திருக்குறளின் எல்லா குறள்களையும் மன ஏட்டில் பதிவு செய்துள்ளார்<br />(2) 7 வயது சிறுவன் திரைப்படம் இயக்குகிறான்<br />(3) 15க்கும் குறைந்த வயது உள்ள சிறுவர் சிறுமியர் நடிக்கும் காதல் திரைப்படம்!!!<br />(4) டெல்லியின் ஒதுக்குப் புரத்தில் சிறுவர் சிறுமியரின் பிணங்கள் கண்டு பிடிப்பு. குற்றவாளி விசாரிக்கப் படுகிறார்!!!??….<br />(5) 40 வயதை எட்டாத 3 பேருந்து ஓட்டுனர்கள் பேருந்து ஓட்டும் போதே மாரடைப்பால் மரணம்!!!<br /><br />கொஞ்சித் தவழும் மழலைக் காலங்கள் இன்று இல்லாமல் போய்விட்டதோ என்ற கேள்விக்குறியே இந்த கவிதை… மழலைப் பருவமே உருவாய் வந்து தன் உணர்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறது:<br /><br />*********************************************************************************<br />துள்ளித் திறிந்த காலங்கள்<br />என் நினைவில் இல்லை தோழி<br />மழைத் துளிகளை ரசித்த நொடிகள்<br />மனதில் நிலைக்கவில்லை தோழி<br /><br />புல்வெளியில் புதைந்து<br />என் பாதங்கள் நனைந்ததில்லை தோழி<br />ஓடும் மேகங்களை பிடிக்க<br />ஓடிய கால்கள் இவையில்லை தோழி<br /><br />சேறும் சகதியும் ஆடையில் பற்ற<br />ஆடிய பருவம் எனக் கில்லாது போக<br />மழலையும் மறந்து அன்னை மடியையும் துறந்து<br />காகிதக் குப்பையில் முகம் தொலைந்த பாவமடி<br /><br />போதாது போதாது என்றார் போல<br />இன்னும் புகழோடு நான் தவழ - முன்னோர்<br />எழுதிய ஏட்டுப் பாடங்கள் அனைத்தும்<br />என் மனக் கூட்டில் விதைத்தனரே<br /><br />புகழை அடைந்தேன் - பிறர் பார்வைக்கு<br />வேடிக்கைப் பொருளாய் திரிந்தேன்<br />வேதமும் குறளும் என் நாவில் ததும்ப<br />குளரும் மழலையைத் தொலைத்து மயங்கினேன்<br /><br />பிழை கண்டே பொருள் அரியும்<br />அர்ப்ப சுகம் அரியாது<br />பிஞ்சில் முதிரும்<br />சோகம் எங்கும் காணீரோ<br /><br />சிறு குயிலின் தோள் மீது<br />சுமை பல ஏற்றும் மேதைகாள்<br />என் தோள்கள் தாங்கும் சுமைதனை<br />பூ இதயம் தாங்குமோ<br /><br />சுமை பல தாங்கியே<br />பாழும் இதயம் இது<br />காலம் மிஞ்சி இருந்தும்<br />உயிரைக் கசிகிறதே தோழி<br /><br />இட்ட வேலை செப்பென முடிந்தது<br />இனி தாமதம் வேண்டாம்<br />இறையடி சேர் என்கிறது<br />எனக்குள் ஒரு நிசப்தம்<br /><br />இந்த மரணம் வேதனையா<br />இதை இன்றே காண்பதில் வலிக்கிறதா<br />என் பாதைகளை மெதுவாய் கடந்திருந்தால்<br />இனியும் துடித்திருக்குமோ என் இதயம்<br />என்ற எண்ணம் வலிக்கிறதா?<br /><br />எதை வலியென்பேன்<br />எதை வலியென்பேன்<br /><br />மானுடமே கேள்<br /><br />இன்று செல்கிறேன்<br />இனியும் வருவேன் வேறு வடிவில்<br />அன்றாவது எனக்கு<br />முழுமையாய் வளர இடம் கொடு<br /><br />*********************************************************************************<br /><br />என்ன கொடுமை தெரியுமா? 5 வயது குழந்தை காமத்துப் பாலில் இருந்து கூட குறள் ஒன்றை ஒப்பிக்கிறது.. இதைத் தெரிந்து கொள்ளும் வயதா இல்லை புரிந்து கொள்ளும் நேரமா?<br /><br />என்ன உலகமடா இறைவா.. இதைப் பார்த்துக்கவும் கேட்கவுமா இந்த நூற்றாண்டை கடக்கச் செய்தாய்… இதற்கெல்லாம் அவதரிக்காத கல்கி வேறு எதற்கு!!!<br /><br />என் அம்மாவிற்கு நினைவில் இருக்கும் மழலைப் பருவம் கூட எனக்கில்லை.. என் குழந்தைக்காவது அந்த நினைவுகளை நான் சேமிக்க விரும்புகிறேன்..Kanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-18278092.post-42718495945718399192007-02-20T23:53:00.001-08:002007-02-21T01:44:20.517-08:00பச்சைக்கிளி முத்துச்சரம்!!!!அருவைப் படம் பார்த்து இருக்கேன் .. உதாரணத்துக்கு "விண்ணுக்கும் மண்ணுக்கும்"<br /><br />மொக்கைப் படம் பார்த்து இருக்கேன் ... உதாரணம் "தாஸ்"<br /><br />புரியாமையே படம் பார்த்து இருக்கேன்... "பாபா"<br /><br />எவன் அடிக்கிறான் எதுக்கு அடிக்கிறான்னு தெரியாத அளவுக்கும் அடிதடி உள்ள படமும் பார்த்து இருக்கேன் .. "சுள்ளான்"<br /><br />புழிஞ்சு தள்ளின படம் பார்த்து இருக்கேன்.. "காதல்".. "வெயில்"<br /><br />அட கொடுமையே கேப்டன் படம் கூட பார்த்து இருக்கேன்... ஆன இப்படி ஒரு படம் பார்த்தில்லைடா சாமி!!!!!!!!!!<br /><br />இந்த படத்தைப் பார்த்துட்டு வந்ததே அதிகம்... இதுல இதுக்கு ஒரு விமர்சனம் எழுதனுமான்னு யோசிச்சேன்... இருந்தாலும் இந்த படத்தை ஏற்கனவே பார்த்த பாவப்பட்டவர்களுக்கும்.. இன்னும் பார்க்காம இருக்குற பாக்கியசாளிகளுக்கும் ஒரு பொதுச் சேவையா இந்த விமர்சனம்<br /><br />***********************************************************************************<br /><br />பார்த்தார்கள்.. சிரித்தார்கள்.. காபி குடிக்க போனார்கள்.. இதுக்கே என்னோட அக்கவுண்ட்'ல எட்டு லட்சம் இருக்குன்னு ஒரு வெண்ணை வெட்டி ஒப்பிக்கிறான்னா... ஆண்களை இவ்வளவு அசமந்துக்களாக நான் கூட நினைத்தது இல்லை!!!!<br /><br />மனைவி தன்னைவிட உடல் நலம் சரி இல்லாத தன் மகனோடு அதிக நேரம் செலவு செய்கிறாள்... தன்னோட உடல் உறவு வைத்துக் கொள்ள அவளுக்கும் மனம் இல்லைன்னு நினைத்த நம்ம ஹீரோ.. (இப்படி ஒரு ஹீரோவைத்தான் தமிழ் திரையுலகம் தேடிகிட்டு இருந்துச்சு போல... நான் சித்தப்பாவை சொல்லலைங்க... இந்த கதாப் பாத்திரத்தை சொன்னேன்!!!)<br /><br />எங்க விட்டேன்... ஹா.. நம்ம ஹீரோ சின்ன சந்து கிடைச்சதும் சங்கீதம் கத்துக்க முடிவு பண்றார்.... (சிந்து பாடத்தான்!!!) சந்துக்கு ரொம்ப அழக ரூட் மேப் போடுகிறார் நம்ம ஜோ.. (அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்... ஆனா மேக்கப்தான் சகிக்கலை!!!!)<br /><br />பிடிச்சிருக்குன்னு சொன்னா, என் கூட இருக்கனும்ன்னு சொன்னா, யாரும் இல்லாத இடம் எங்காவது போகலாம்ன்னு சொன்னா.. அடங்க இன்னுமா தெரியல அவ உன்னை மொட்டை அடிச்சு ஆண்டி மடத்துக்கு அனுப்ப போறான்னு... அய்யா செய்தி எல்லாம் படிக்கிறது இல்ல போல...<br /><br />ஒரு வழியா தனியா தள்ளிகிட்டு போய் பேச்சுக் கொடுக்க.. அதுக்குள்ள எங்கிருந்தோ வந்தான் ரேஞ்சுக்கு ஒரு ரிசார்ட் கெஸ்ட் ஹவுஸ்க்கு வில்லன் வருகிறான்.. ரெண்டு பேரோட பர்ஸ்'லயும் வேற குடும்ப போட்டோ இருக்க .. இதை வெச்சு நம்ம ஹீரோவை மிரட்டி, பையன் மருத்துவ செலவிக்கு வெச்சு இருந்த எட்டு லட்சமும் அம்பேல்!!!<br /><br />ஜாயிண்ட் அக்கவுண்ட்ல இருந்து 8 லட்சம் காலி ஆகியும் இது தெரியாம இருக்குற ஹிரோயினி... (புருஷன் மேல அவ்வளவு நம்பிக்கை பாவம்!!!!) .. ஆண்டிரியா.. அழகுன்னு சொல்றதா.. இல்ல அசடுன்னு சொல்றதா???<br /><br />எல்லா பணமும் அம்பேல் ஆனதும் வேற வழி இல்லாம மனைவி கிட்ட உண்மையை சொல்ற ஹீரோ... அதுவும் எப்படி...<br /><br />"பார்த்தேன்.. பேசினேன்.. பழகினேன்... பீச் ரிசார்ட் ரூம் வரை போனேன் ஆனா நான் ஒன்னுமே பண்ணல கல்யாணி என்னை நம்பு!!!!!!!!" அடடா இதுதாண்டா டயலாக்!!!<br /><br />அம்மணிக்கு கோவம்.. 600 ரூபாய் எடுத்துகிட்டு ஏதோ ஒரு பஸ் ஏறியாச்சு... எங்கயோ பொன அப்பறம் ஒரு போன்...<br /><br />"நான் தான் கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்னேன் இல்ல... நீ எப்பவாவது வேற எந்த பொண்ணு கூடயாவது இருந்தன்னு தெரிஞ்சா நான் உன்னை விட்டுட்டு ஏதாவது பஸ் ஏறுவேன்னு... ஏறிட்டேன்... திரும்பி வருவேனான்னு தெரியாது.. என்னை தேடாதே!!!"<br /><br />இதுக்கு நடுவில நம்ம ஹீரோவுக்கும் ஒரு பல்பு எரிய.. உண்மையை கண்டிகிறான்.. அதாகப்பட்டது.. ஜோவும் மிலினும் (நம்ம வில்லன்!!) ஒரு ஜோடி... இப்படிதான் எல்லாருக்கும் மொட்டை அடிக்கிறாங்க...<br /><br />இது இல்ல கொடுமை... இதுக்கு மேல... 3 நாள் களிச்சு அம்மணி வீட்டுக்கு ரிடர்ன்.. ஏன் தெரியுமா.... 600 ரூபாயிம் காலி... கட்டு கட்டா புருஷனும் பொண்டாட்டியும் செலவு செய்றாங்கப்பா!!!<br /><br />எல்லாம் பேசி.. ஒரு வழியா முடிச்சாங்கன்னு பாத்தா... அடிச்சு புடிச்சு என் பணத்தோட வரேன்னு சொல்லீட்டு ஒரு துப்பாக்கி ஒரு இஸ்கூல் பேக் இதை எடுத்துகிட்டு நம்ம ஹீரோ அதே பீச் ரிசார்ட் போகிறார்.. அங்க வேற ஒரு அசமந்து!!!<br /><br />இவர்தான் போனாரே சுட்டோமா நம்ம பணத்தை எடுத்தோமான்னு வேண்டாம்.. ஒரு 15 நிமிஷம் அந்த அசமந்துகிட்ட இந்த அசமந்து பேசுது!! உன்னை நான் இன்னைக்கு காப்பாத்தி இருக்கேன்.. என் காலில் விழுந்து நன்றி சொல்லீட்டு தப்பிச்சுப் போன்னு சொல்லிட்டு.. அந்த லூசு வாசலுக்கு போகும் போது எவனோ போட்டுத் தள்ளிட்டான்.. இதுக்கு எதுக்கு 15 நிமிஷ டயலாக்'ன்னு கேக்காதீங்க!!<br /><br />எல்லாரையும் ஒரு ரவுண்டு சுட்டுட்டு ஹீரோ பணத்தோட ஹைதிராபாத் எஸ்கேப்... அப்பா படம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சா... மனைவி ஆண்டிரியா மிஸ்ஸிங்... கடத்தினது நம்ம ஜோ... ஆமாங்க அம்மணி சாகல!!! <br /><br />மம்மி ரிடர்ஸ் ரேஞ்சுக்கும் வில்லியாமா!! சந்திரமுகி பாதிப்பே இன்னும் இறங்கலை போல ... அதுல லகலகலக... இதுல அட்றா அட்றா... இப்படி கத்தினதுக்கு மட்டுமே ஒரு படத்தோட சம்பலம் வாங்கி இருக்கனும்...<br /><br />கடைசியா ரெண்டாவது முறையாக ஜோவை கொல்கிறார் நம்ம சித்தப்பா... அப்பறம் தனக்கு சேர வேண்டிய 8 லட்சத்தை வட்டியோட எடுத்துகிட்டு.. மிச்சத்தை ஜோவோட ஒன்னுக்கும் ஆகாத அப்பிரசெண்டுகளுக்கு தானம் செய்கிறார்.... ஹீரோவாமாப்ப!!!!<br /><br />அப்பா முடிஞ்சிடுச்சு!!!!<br />**********************************************************************************<br /><br />என்ன கொடுமை சரவணன் இது... எல்லாம் எங்க அம்மாவும் ஜோவும் பண்ணின வேலை.. கௌதம் கிட்ட அப்படி ஒன்னும் பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லைனாலும் இது கொஞ்சம் அதிகம் தான்...<br /><br />எனக்கு என்ன புரியலைன்னா.. இப்படி சராமாரியா ஒரு மெடிகல் ரெப்பிரசெண்ட்டேடிவ் கொலை செய்தும் போலீஸ் கேஸ் இது எதுவுமே ஒரு வாசனைக்கு கூட படத்துல இல்லை...<br /><br />அப்பறம்.. மெனக்கெட்டு ஆண்டிரியாவை கடத்திக் கிட்டு போன ஜோ... இப்படி கத்தி கத்தி உயிரை விட்டதுக்கு ... ஆண்டிரியா பொட்டுல துப்பாக்கிய வெச்சு இருந்தா எல்லாமே சத்தம் இல்லாம முடிஞ்சு இருக்குமே... அதை விட்டுட்டு... ஆண்டிரியாவையும் கவனிக்காம சித்தப்பாவையும் அடிக்காம... வெரும் அப்பிரசெண்டுகளை கத்தியே வேலை வாங்கினதை நினைச்சா பாவமா இருக்கு!!!<br /><br />மொத்ததுல பச்சைக்கிளி பிச்சுப்பிடுங்கும்.. ஹீரோ பணத்தை மட்டும் இல்லை.. என்னோட 360 ரூபாயும் சேர்த்துதான்...<br /><br />பி.கு: வெளிய வந்ததும் இதை பார்த்ததுக்கு "வீராச்சாமியே" பார்த்து இருக்கலாம்ன்னு நான் கிண்டல் அடிச்சேன்... அதைக் கேட்டு எனக்கு பின்னாடி இருந்த இரு இளைஞர்கள்.. ஆமாண்டா மச்சான்... இந்த படத்தை பார்த்த பாதிப்பு போகனும் நாமா இன்னைக்கு ராத்திரிக்கு தூங்கனும்ன்னா போய் வீராச்சாமி பார்க்கலாம் வா'ன்னு கிளம்பிட்டாங்க...!!!!!!!!!!Kanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-18278092.post-72533662204253376092007-02-09T03:32:00.000-08:002007-02-05T00:01:51.890-08:00வந்தேன் வந்தேன்!!!நண்பர்களே,<br /><br />சில நாட்களாக வலைப் பக்கம் வர முடியல... இப்போ ஆஜர் ஆகிட்டேன்.. இனி என்ன எழுதி தள்ள வேண்டியதுதான்... பாவம் நீங்கதான்.. :P<br /><br />***********************************************************************************<br /><br />இதோ சில ஹைக்கூக்கள்...<br /><br /><strong><u><em>காவேரி</em></u></strong><br /><strong><em><u></u></em></strong><br />கேட்டவர் எவரோ<br />இங்கு உதை<br />வாங்குபவர் எவரோ!!!<br /><strong><em><u></u></em></strong><br /><strong><u><em>பந்த்</em></u></strong><br /><strong><em><u></u></em></strong><br />வேலை இல்லாதவர்<br />பிறர் வேலையைக் கெட்டுக்க<br />சிறந்த ஒரு நாள்<br /><br /><strong><em><u>காதலர் தினம்</u></em></strong><br /><strong><em><u></u></em></strong><br />காவேரி பந்த்<br />எல்லாம் கடந்து<br />காதலர் குதூகலிக்கும்<br />நன்னாள்!!<br /><br />ps: வாழ்க காதலர் தினம்<br />இந்நாளில்<br />தமிழரும் கன்னடரும் காதல் கொண்டால்<br />தீறுமோ காவேரி கலேபரம்!!!!<br /><br /><br />ஹிஹி... எங்க அம்மா கிட்ட இன்னைக்கு டீம் லஞ்ச் போனேன்னு சொன்னப்போ.. ஊரே கலவரமா இருக்கு... உங்களுக்கு ஒரு கிலுகிலுப்புத் தேவையான்னு கேட்டாங்க... இதுக்கே இப்படின்னா காதலர் தினத்துக்கு எங்க அம்மா என்ன சொல்லுவாங்க!!!!!!!!!!!<br /><br /><br /><br /><br /><br /><br /><strong><em><u></u></em></strong><br /><strong><em><u></u></em></strong><br /><strong><em><u></u></em></strong><br /><strong><em><u></u></em></strong><br /><strong><em><u></u></em></strong><br /><strong><em><u></u></em></strong><br /><strong><em><u></u></em></strong><br /><strong><em><u></u></em></strong><br /><strong><em><u></u></em></strong>Kanyahttp://www.blogger.com/profile/00526466454878956827noreply@blogger.com7