நான்
நேற்றுவரை அனுமதி கேட்டிருந்தேன்
இன்று சில காலமாய்
சுயமாய் சுவாசித்துவிட்டேன்
நினைவுகளின் வண்ணங்களில் வாழ்ந்த எனக்கு
நிஜத்தின் கறுப்பு வெள்ளை கற்றுகொடுத்த பாடம்
சில நேரங்களில் தனிமை கூட சுகமென்று
******************************************************************
இன்று...
நான் பறவை
வானமும் பூமியும்
என் சிறகுகளில்
நான் காற்று..
தென்றலும் புயலும்
என் வேகத்தில்
நான் மேகம்
மென்மையும் மேன்மையும்
என் பெண்மையில்
நான் மழை
ஈரமும் தூறலும்
என் அன்பில்
நான் கடல்
அளவும் ஆழமும்
என் தேடலில்
நான் நெறுப்பு
சுடுவதும் சுடர்விடுவதும்
என் கண்களில்
******************************************************************
பெண்மையின் முழுமையை
நானாக வாழ நினைக்கிறேன்
சமுதாயத்தின் விதிமுறைகள் இல்லாமல்
வாழ்க்கையின் இலக்கணங்களை
புறிந்துகொள்ள ஆசைப் படுகிறேன்
சடங்குகள் சம்பிரதாயங்களில் சிறை படாமல்
புரட்சி அல்ல என் நோக்கம்
எனக்குள் என்னை தேடிக் கொண்டிருக்கிறேன்
அதை வட்டதுக்கு வெளியில் வந்து தேடுகிறேன்
இன்னும் தேடுவேன்!!!