உயிரினும் மேலாய்
உனையே சுவாசித்தேன்
இதயம் முழுதும்
உன்னக்கே கொடுத்தேன்
இமைகள் துடிக்கும்
நொடிப் பொழுதில்
உன்னை சுமந்த இதயத்தை
துகள்களாய் துண்டித்தாய்
பத்து வருடங்களாய்
சிதறிய துகளில் எல்லாம்
அந்தக் காதலை கருவாக்கி
நினைவுகளால் ஒத்தடம் கொடுத்தேன்
என் கருவை
இனி சுமக்கவும் தெம்பில்லை
கலைக்கவும் மனதில்லை