Thursday, September 28, 2006

என்னவென்று சொல்வதம்மா?

அவனைக் கண்ட முதல் நாள்
ஏனோ சலனப்பட்டது என் இதயம்
ஒரு முறை அவனைத்
திரும்பிப் பார்க்கச் சொன்னது என் கண்கள்

புன்னகைத்தான் வெட்கப்பட்டேன்
அருகில் வந்தான் நெருங்கத் துடித்தேன்
காதல் என்றான் மயங்கி நின்றேன்
கைபிடித்தான் கனவுகள் கொண்டேன்

காதலின் மொழி பேசி
அழகாய் என்னைக் காதலி என்றான்
ஏனென்று கேட்காமல்
என்னவனே நீ என்றேன்

உன்னோடு மட்டுமே என் உறவென்றான்
நீ இல்லையேல் நான் வெரும் உடலென்றான்
உடலென்றும் உயிரென்றும் இருதுருவம் ஏனென்றான்
ஒன்றாகி உறவாடி கலந்ததில் சுகமென்று மாயம்செய்தான்

அவன் நிழலைக்கூட
காதலித்த எனக்கு இன்று
நிஜத்தைத் தேடி அலைகையிலே
என் நிழலைத் தொலைத்த காயம்

நாட்கள் மாதங்களாய் ஓடியது
இதயம் வடித்த இரத்தம்
என் கருவறையில்
விதையாய் வளரக் கண்டேன்

காதலின் மயக்கத்தில்
பெண்மையை அள்ளிக் கொடுத்த எனக்கு
காலம் சுமையானது
வெருப்பென்னும் துவர்ப்பு சுவையானது

உயிரை இழந்துவிடலாம் என்று
உள்ளம் வாதிட்டது என்ன செய்வேன்
கொலை செய்வது போல்
கூனிக் குறுகியது என் மானுடம்

ஊரை மாற்றினேன்
என் பேரை மாற்றினேன்
மறைந்தான் கணவன் என்று
பொய்யாய் வேடம் தறித்தேன்

இத்தனை பொய்களும்
அத்தனை வேஷங்களும்
வீங்கிக் கொண்டிருந்த
என் வேதனையை மறைக்கவில்லை

மசக்கை மயக்கமில்லை
மாங்காய் சுவைக்கவில்லை
பசியென்று புசிக்கவில்லை
பாவம் பயிரென்று உரமிட்டேன்

வளரும் பிறை கண்டு வாடினேன்
தளரும் நடை கண்டு நாட்கள் எண்ணினேன்
ஏனோ கடனென்று இந்த
உயிரைச் சுமக்கலானேன்

அம்மா என்று என் முகம் காண
முட்டிக் கொண்டு வெளியே வந்தாள்
தொப்புள் கொடி அறுத்த மறுகணம்
அவளுக்கு குப்பைத்தொட்டியைத் தேடினேன்

கட்டிய சேலையில் பத்திரமாய் சுற்றி
பதமாய் ஒரு குப்பையில்
வைத்தேன் இந்த மரகதத்தை
இதயம் கணத்தது இருந்தும் திரும்பினேன்

முதலடி எடுத்து வைத்தேன்
வீதியின் ஓராமாய் பசியென்று ஒரு பிஞ்சு
கையேந்தி கதறியது
உள்ளம் கலங்கியது என்ன செய்வேன்

இரண்டடி எடுத்து வைத்தேன்
நாய்கள் ஊளையிட்டது
காதை இறுகப் பொத்திக்கொண்டு
நடக்க முயன்றேன் கால்கள் உறைந்தது

கயவனோ காமுகனோ
ஒருவனோடு மட்டுமே களப்பின்
அதுவே கற்பு என்று பறைசாற்றும்
கலாச்சரம் சொல்லுமா நான் கற்புல்லவள் என்று

தாய்மையை இறையென்பார்
அவள் முதுமையை சுமையென்பார்
பொற்றவளை காப்பகத்தில் கைவிடும்
சமூகம் சொல்லுமா நான் தாய்யில்லை என்று

ஒருவனுக்கு ஒருத்தி என்று
கதை சொல்லும் கலாச்சாரத்தில்
பாதுகாப்பாய் காமம் செய் என்று
விளம்பரப் பேடைகள் விற்கும் அவலம்

இந்த சமுதாயத்தைக் கண்டா
நான் கூசினேன்?
என்னக்குள் இருக்கும் தாய்மையைக் கொல்லும்
இந்த விதிமுறைகள் எனக்குத் தேவையா?

காதலைப் பொய்யாக்கி
காமத்தில் என்னை களவாடியவனுக்கும்
இல்லாத இந்த பயம்
எனக்கு மட்டும் ஏன் வரவேண்டும்?

போதும் இந்தப் பொய்கள்
இனி ஓட வேண்டியவள் நான் அல்ல
தொலைய வேண்டியவள் என் மகளல்ல
இதயம் இருப்பின் சிந்திக்கும் உலகம்
இல்லையேல் வேறொரு குப்பைத்தொட்டியில்
வேறொத்தி நிற்ப்பாள் என்னைப் போல!!!



************************************************************************************

தமிழில் அனாதை என்ற வார்த்தை மிகவும் கொடுமையானது. அதிலும் பெற்ற தாயே தன் கருவை அனாதையாக்குவது சொல்லக் கூடிய அவலமல்ல..

இதற்கு என்ன காரணம்?? சமுதாயமா... அதன் சட்டங்களா.. இல்லை அவரவர் தேவைக்கேற்ப மாறும் கலாச்சாரமா?? இதுதான் கலாச்சாரம் கற்றுக் கொடுக்கும் கோட்ப்பாடுகளா?

சிந்திக்க மனமுடையோர் சிந்தியுங்கள்!!!

கன்யா

Saturday, September 23, 2006

சிரிவிளையாடல் - finale

இடம்: செம்பு மன்னன் தமிழ் சங்கம்
பார்டீஸ்: முருகன், செம்பு, கீரர்..

காட்சி: அப்பனுக்கு சொன்ன மாதிரி செம்புவுக்கும் கேள்விக்கு பதிலை காதில் ஓதுகிறார் முருகர்.. செம்பு அப்படியே சொக்கி போய் சந்தோஷத்துல பரிசுகளை அழைத்து வரச் சொல்றார்..

கீ: மன்னா.. நில்லுங்கள்.. முருகன் அப்படி என்ன சொன்னார் என்று அலசி ஆராயாமல் பரிசை எப்படித் தரலாம்?

மு: யோவ்.. உன் சவுண்டை எல்லாம் எங்கப்பன்கிட்ட வெச்சுக்கோ.. நான் பொற்தாமரை குளத்துல எல்லாம் தள்ள மாட்டேன்.. நேர சிவலோகம் தான்..

கீ: இந்த மிரட்டலுக்கெல்லாம் பயந்தவன் நான் இல்லை.. எனக்கும் சொன்னாத்தான் உண்டு..

செ: அய்யோ கிழ கீரரே.. இது எல்லாம் வயசுப் பசங்க மேட்டர்..

மு: தோடா சைக்கிள் கேப்புல உட்டா சங்கராபரனமே பாடுவீங்களே... நீர் வயசுப் பைய்யனா???

செ: (ஈ என்று இளிக்கிறார்....)

கீ: ஆவ்வ்வ்வ்வ்.. செம்புவுக்கு தெரிஞ்சா எனக்கும் தெரியனும்..

மு: கருமம்.. கேளும்..

“மதுரையின் மணம் மல்லிகையில்
மன்னவன் மனம் மங்கையரில்
காதலின் மணம் காமத்தில்
அந்த மோகத்தினால் மங்கையர் மயக்கத்தில்
அதனால், கொஞ்சும் உன் தமிழிலில்
உன் நேசத்துக்கு வந்தது இந்த மணம்”

இதுதான் மேட்டர்..

கீ: தப்பு...

மு: என்ன தப்பு??

கீ: அது தெரியாது.. ஆனா தப்பு..

மு: யோவ்வ்வ்வ்வ்

செ: தமிழ் வேந்தர்களே.. அமைதி அமைதி.. கலைஞர்களுக்கு மத்தியில் சர்ச்சை இருக்கலாம் ஆனால் சண்டை கூடாது..

மு & கீ: அடங்குடா செம்பு

செ: சரி சரி.. பரிசைக் கொடுக்கலாமா?

கீ: என்ன தப்புன்னு சொல்ல தெரியல.. சோ.. கொடுத்துடுங்க

செ: யார் அங்க.. அழைத்துவாருங்கள், பரிசுப் பொக்கிஷங்களை!!!!

பெரிய பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

ஒள: என்ன ஆச்சு முருகா

மு: ஏன் கேக்குற பாட்டி.. நான் கூட அழகா அம்சமா 5 பிகர் வரும்ன்னு பாத்தேன்

ஒள: பின்னே.. எல்லாம் கிளவிங்களா??

மு: கிளவிங்களா இருந்து இருந்தா கூட சரி பிரியா விட்டு இருப்பேன்.. அவுங்க எங்கயாவது போய் பொளச்சுக்குவாங்க..

ஒள: அப்பறம்...???

மு: எல்லாம் 5 வயசு புள்ளைங்க... எல்லாம் என்னைப் பார்த்ததும்.. அங்கிள் அங்கிள்’ன்னு மிங்கிள் ஆகிடுச்சுங்க.. :( ... இனி அதுங்களை பாத்துக்குற வேலை வேற..

ஒள: ஓஹோ... இதுக்குத்தான் இங்க சோகமா??

மு: அட நீ வேற பாட்டி.. இதைக்கூட சமாளிக்கலாம்.. இல்லை எங்க அப்பன் பண்ணின மாதிரி கார்த்திகை பெண்களை அப்பாயிண்ட் பண்ணி இதுங்கள வளக்க சொல்லலாம்...

ஒள: பின்னே, ஏன் இந்த சோகம்...

மு: சரக்கடிச்சவன் அதுக்கு ஊருகா நக்கலாம்.. ஆனா பாட்டி, அல்ப்ப மேட்டர், செம்பு சதி பண்ணீட்டதுல என் வீட்டில எத்தனை வருஷம இந்த வேளை பண்றே, 5 புள்ளைகளும் எந்த ஆங்கில்’ல பார்த்தாலும் உன்னோட ஜாடையா இருக்கேன்னு சொல்லி சாத்து சாத்துன்னு சாதுறாளுங்க!!! சும்மா நேரத்துல சக்களத்தி சண்டையில் நமக்கு நல்ல கவனிப்பு இருக்கும்.. ஆனா இப்போ அவளுங்க ரெண்டு பேரும் ஜோடி சேந்துகிட்டாங்க.. இந்த கொடுமைய எங்க போய் சொல்லுவேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒள: நல்ல குடும்பம் இதுக்கு நான் ஒரு ஆஸ்த்தான புலமைப் பாடகி.. ஏதோ படத்தை முடிக்கனுமே... சோ பாடித்தொலைக்கிறேன்

மு: நிறுத்துங்க நிறுத்துங்க... இந்த சிச்சுவேஸனுக்கு... நானே பாடிக்கிறேன்... எத்தனை பாட்டு கேட்டு இருப்பேன்

"ஊரத் தெரிஞ்சுகிட்டே உலகம் புரிஞ்சுகிட்டேன்
ஒளவையே ஓ ஒளவையே
வேலும் ஒடஞ்சுடிச்சு மயிலும் பறந்துருச்சு
ஒளவையே ஓ ஒளவையே

பொண்டாட்டி கோவப்பட்டா சின்னூடு புடிச்சேன்
பொம்பலைங்க சேந்துகிட்டு என் தலைய உருட்டுறாங்க

ஊரத் தெரிஞ்சுகிட்டே உலகம் புரிஞ்சுகிட்டேன்
ஒளவையே ஓ ஒளவையே
வேலும் ஒடஞ்சுடிச்சு மயிலும் பறந்துருச்சு
ஒளவையே ஓ ஒளவையே

ஏன் கதை ஒரு சோகம்தான்
அதை யாரும் வந்து கேட்ட
பாடினேன் நான் பாடினேன்
ஒரு பாடில் நீ கேட்க

நான் புடிச்சேன் ஜோடி ரெண்டு
எனக்கேது ஜோடி இங்கு
நான் வந்து நிக்கிறேனே
ரோடுல நடு ரோட்டுல

நான் போட்ட கணக்கு அஞ்சு
செம்பு போட்டானே வேற ஒன்னு
ஆடிட்டான் ஒரு ஆட்டத்த

ஊரத் தெரிஞ்சுகிட்டே உலகம் புரிஞ்சுகிட்டேன்
ஒளவையே ஓ ஒளவையே
வேலும் ஒடஞ்சுடிச்சு மயிலும் பறந்துருச்சு
ஒளவையே ஓ ஒளவையே"

பா: முருகா... என்ன இது... இப்படி பாட ஆரம்பிச்சுட்டே??

சொ: ஹிஹிஹி... எனக்கு முந்திகிட்டு ஐந்ஞ்சையும் தள்ளிக்கலாம்ன்னு நினைச்ச இல்ல அதான்....

பி: ஏண்டா தம்பி... வள்ளி மேட்டர்'ல எல்பு கேட்ட மாதிரி இப்போவும் கேட்டு இருக்கலாம் இல்ல

மு: அடச்சே... வெந்த புண்ணுல என்னோட வேல்'லையே பாச்சுறீங்களா?

வ & தெ: முருகா... செய்யிறதெல்லாம் செய்துட்டு நாங்க உங்க தலைய உருட்டுறோம்ன்னு பாட்டு பாடுறீகளோ..... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம இங்க வந்து குடும்பத்தோட ஆலோசனையா? அப்பா, அண்ணன், அம்மாகிட்ட எல்லாம் கண்சல்டிங்கா...???

ஒள: ஆஹா.... ஆரம்பிச்சுட்டாங்யா.... இது இவங்க குடும்பப் பிரச்சனை... இனி நாம அப்ஸ்காண்டு.................................................

**** இதுவரை சிவன் பேமலி டோட்டல் டேமேஜ்.... இனி அவங்களே டாமேஜ் கண்டிரோல் பண்ணிக்கட்டும்!!!!!!!

நிறைய இஸ்பெல்லில் மிஸ்டேக்கோட டைப் அடிச்சதையும் பொருட்படுத்தாம.... இந்த மெகா சீரியல படிச்சதுக்கு நெம்ப தாங்ஸ்சுங்கோவ்!!!!!1

சிரிவிளையாடல் - part III

Recap – எப்பவும் போல நம்ம செம்பு மன்னன் சந்தேகத்தைக் கிளப்ப, ஜொள்ளு தாங்காம நம்ம தருமி சொக்கனுக்கு SOS அனுப்ப, சொக்கனும் அவசர அவசரமா FAQ டாக்குமெண்ட்ட பிரௌஸ் பண்ண போய் இருக்கார்… இதை எல்லாம் பெவிலியன்’ல இருந்து, Mrs. மீனாட்சி சொக்கநாதனும் அவங்களோட கடைக்குட்டி முருகனும் நோட் பண்ணிகிட்டு இருக்காங்க

இடம்: சரக்குக் காய்ச்சும் கிடங்கின் ஓப்பன் பாடியோ
பார்ட்டீஸ்: பெப்ஸி, லேஸ் சிப்ஸ், ரிக்லைனரோட முருகனும், அம்மா பார்வதியும்.

காட்சி: இதுவரை நடந்த அனைத்தும் பார்த்து லேசா முருகனுக்கு டென்ஷன் ஆகுது.. ஆனா காமெடி மெகா சீரியல் பாக்குற குஷில அம்மா இதை நேட் பண்ணவே இல்லை..

மு: அம்மா என்ன இது சின்ன புள்ளத்தனமா இருக்கு..

பா: எதைடா சொல்ற?

மு: செம்புதான் அசட்டுத்தனமா கேள்வி கேக்குறான்னா… அப்பாவும் இப்படி.. சீ சீ..

பா: அப்படி சொல்லுடா என் தங்கமே.. உனக்காவது புத்தி இருக்கே..

மு: பின்னே என்னம்மா.. போட்டின்னு வந்த அப்பறம் அதுல கொசுறா தருமிக்கு எதுக்கு ஒரு பிகரு?? போட்டிய முடிச்சோமா கிடைச்சத மொத்தமா ஒரு அள்ளுனோமான்னு இல்லாம.. சே சே.. முக்கி முக்கி ரகசியமா சொல்லிக் கொடுத்த பாடம் எல்லாம் அந்த பக்கம் காதுல வெளிய விட்டுடாரு போல!!!

பா: அடபாவிமக்கா.. இதுக்குத்தான் இத்தனை பீலிங்கா!!! அது சரி இதைத்தான் நீ உங்கப்பனுக்கு காதுல சொன்னியா.. அப்போ நீ நிஜமாவே சின்ன பையன் தானேடா..

மு: மூர்த்தி சிறுசானாலும் நம்ம கீர்த்தி பெரிசும்மா.. இதை எல்லாம் கண்டுக்காதே..

பா: அப்பனோட போடுறது எல்லாம் சண்டை.. ஆனா ஆளப்பாருங்கடா அப்படியே ஜெராக்ஸ்...

மு: சரி சரி.. இதை எப்படி டீல் பண்றதுன்னு என்னக்கு தெரியும்.. மீ கோயிங்.. யூ வாச்சிங்..

டிரிரிரிரிங்ங்ங்....(வெறும் சவுண்டு.. எல்லாம் ஒரு பீலிங்குக்காகத்தான்)

இடம்: செம்பு மன்னன் தமிழ் சங்கம்
பார்டீஸ்: முருகன், செம்பு, கீரர்.. இன்னும் சில ஜால்ராஸ்...

மு: யோவ் செம்பு என்னைய்யா உனக்கு பிரச்சனை.. ஏன் இப்படி எல்லாம் கேள்வி கேட்டு கொல்ற?

செ: சாரி.. நீங்க யாருன்னு தெரியலையே..

மு: டேய் டப்ஸா கண்ணா.. நல்லா பாரு.. உன்னோட அரசவைக் கேலண்டர்க்கு போஸ் கொடுத்துகிட்டு இருக்குறது யாரு??

செ: ஆகா… என் அப்பன் சொக்கனோட நெற்றிக் கண்ணில் இருந்து வந்த, ஆறுபடை வீடு கொண்ட என் அழகு முருகனா இது!!

மு: டேய் டேய்.. இந்த பில்டப்புத்தானே வேண்டாங்குறது.. எத்தனை காலம்டா இப்படி மொழ நீலத்துக்கு இண்ட்ரோடெக்ஷன் கொடுப்பீங்க.. ஏன் எங்களுக்குன்னு தனி அறிமுகம் கிடையாதா?

செ: சரி சரி கோவிச்சுக்காதே முருகா.. எப்படி இருக்கீங்க.. வீட்டுல எல்லா எப்படி இருக்காங்க… ஆமா ரெண்டு பேர எப்படி சமாளிக்கிறீங்க??

மு: அடப்பாவி.. அதுக்குள்ள இன்னோரு டவுட்டா??

செ: சாரி.. என்ன விஷயமா இந்த விஜயம்..??

மு: சொல்றேன்.. சொல்லத்தானே வந்து இருக்கேன்..

இடம்: மேல அப்படியே கட் பண்ணி, முருகன் வீட்டு குசனி அறை.. அதாங்க கிட்சன்.. அங்க போறோம்.. அப்பறம் அங்க இருந்து அப்படியே நகர்ந்து ஹால் வரைக்கும் வருவோம்
பார்டீஸ்: தெய்வானை, வள்ளி.. கொஞ்ச நேரம் களிச்சு நாரதர்..

வ: அக்கா.. கொஞ்ச நாளா எனக்கு என்னவோ கெட்ட கெட்ட கனவாவே வருது!!

தெ: அப்படியா.. இப்போ எல்லாம் எனக்கும் அப்படித்தான்.. என்னவோ திடீர் திடீர்ன்னு தூக்கம் கலையுது.. வயத்துல புளிய கரைக்கிற மாதிரி இருக்கு..

வ: அய்யோ அக்கா.. எனக்கும் அப்படித்தான்.. என்னவா இருக்கு??

தெ: எனக்கு என்னவோ திக்கு திக்குன்னு இருக்கு.. இவர் உன்னை ரூட் விட இங்க இருந்து அப்ஸ்காண்ட் ஆனதும் இப்படித்தான் இருந்துச்சு.. கண்மூடி திறக்குறதுக்குள்ள உன்னை தள்ளிகிட்டு வந்துட்டார்..

வ: சே சே.. அப்படி எல்லாம் ஒன்னும் பண்ண மாட்டாருக்கா..

தெ: எனக்கேவா.. ஆமா உன்னை டாவடிச்சப்போ நான் இருக்குறதை உன்கிட்ட சொன்னாரா?

வ: சொல்லல.... ஏன்கா அப்படி எதுவும் பண்ணுவாரோ?

தெ: பண்ணட்டும் அப்பறம் இருக்கு...

ஹால்’ல ஏதோ சத்தம் கேட்க.. ரெண்டு பேரும் அங்க நகர..

நா: நாராயனா.. நாராயனா..

வ & தெ: வாங்க நாரதர் மாமா... என்ன இன்னைக்கு குழப்ப குட்டை கிடைக்கலையா.. இங்க வந்து இருக்கீங்க..

நா: அய்யோ நாராயனா.. நான் அதுக்கு எல்லாம் இங்க வரலை தாய்களா.. அப்பா கிட்ட கோவிச்சுகிட்டு கிளம்பின முருகன் ஏதோ தன்னை ரிலாக்ஸ் பண்ணிக்க ஏதோ செய்றதா கேள்விப் பட்டேன்.. அது என்னன்னு கேட்டுட்டுப் போக வந்தேன் அவ்ளோதான்..

தெ: என்னது.. அப்பா கூட சண்டை போட்டு அதுனால டென்ஷனா?? சான்ஸே இல்லை.. என்ன நடக்குது.. உண்மைய சொல்லுங்க!!!

நா: நாராயனா.. இல்லை இல்லை.. நான் தப்பான நேரத்துல வந்துட்டேன்.. அப்பறம் கொஞ்ச நேரம் களிச்சு வரேன்..

வ: ஹலோ.. அதான் அக்கா கேக்குறாங்க இல்ல.. அப்பறம் ஏன் மழுப்புறீங்க.. என்ன விஷயம் சொல்லுங்க!!!

நா: அப்பா முருகா.. மன்னிச்சுக்கோ.. ரெண்டு பொம்மளைங்க மடக்கிட்டாங்க.. நானோ பயந்த சுபாவம்.. சோ உண்மை சொல்ல வேண்டியதா இருக்கு!!!

வ & தெ: போதும் போதும்.. மாட்டருக்கு வாங்க

நா: அது வந்து... ************

வ & தெ: என்ன?? ஏற்கனவே ரெண்டு.. இப்போ இன்னும் அஞ்சா??????? வரட்டும் வரட்டும் இன்னைக்கு ஒன்னுல ரெண்டு.. இல்ல இல்ல ஏழுல ரெண்டு பாக்குறோம்.. இதை அத்தையும் தடுக்கலையா.. அவங்களுக்கும் இருக்கு!!!!

இதற்கிடையில் சில காட்சிகள் ஓடுகிறது.. அவை பிளாஸ் போக்காக அப்பறம் வரும்.....

இடம்: ஏதோ ஒரு மலை.. இல்லை இல்லை நம்ம நடிகர் விஜெய் எங்க கல்லு கிடைச்சாலும் ஏறி குதிச்சுட்டு அதை டான்ஸ்’னு சொல்லுவாறே அது மாதிரி நம்ம முருகனும் ஒரு பாறை போல ஏறி நிக்கிறார்..
பார்டீஸ்: முருகன், ஒளவ்வையார் (ஒ ள வ்வையார்ன்னு படிக்கிற புத்திசாலிகளுக்காக.. அது அவ்வையார்)

ஒள: என்ன முருகா.. இப்படி இங்க வந்து மொட்டை வெய்யில்’ல நிக்குறீங்க.. சன் பாத்தா?

மு: தோடா.. கடுப்ப கிளப்பாம சைலெண்டா கிளம்புற வழிய பாருங்க பாட்டி.. ஞானப்பழம் பாட்டு எல்லாம் இனி செல்லாது!!!

ஒள: காலம் மாறும் போது அதுக்கேத்த மாதிரி நானும் பாட்டை மாத்திக்குறேன்.. இல்லைன்னா நல்லது சொன்ன எவன் கேக்குறான்.. அதையே மசலா போட்டு, தேவா மியூசிக் போட்டா கேக்குறானுங்க..

மு: என்னது தேவா மியூசிக்கா......

ஒள: அட ஏன் டென்ஸன் ஆகுறீங்க.. அதுவே ஈ அடிச்சாங் காப்பிதான்.. அதை நான் சுட்டா ஒன்னும் தப்பு இல்ல..

மு: அது சரி

ஒள: ஆமா கேட்டதுக்கு ஒன்னும் சொல்லலையே.. இங்க மொட்டை வெய்யிலுல என்ன பண்றீங்க

மு: ஒரே சோகம் அதான்.. கொஞ்ச நேரம் தனியா இருக்கலாம்ன்னு இங்க வந்துட்டேன்

ஒள: ஆகா.. உங்களுக்கே சோகமா?? என்ன ஆச்சு..

மு: அதை ஏன் கேக்குற பாட்டி.. விடு.. இதை எல்லாம் சொன்னா உனக்கு புரியாது!!!

ஒள: ஒரு காலத்துல நக்கலா நீங்க சுட்ட பழம் சுடாத பழம்’ன்னு சொன்னதே எனக்கு விளங்குச்சு.. இன்னும் வேற என்ன புரியாம போறதுக்கு.. மேட்டரை சொல்லுங்க

மு: அது வந்து பாட்டி.. பொண்டாட்டிங்க....

ஒள: ஓ.. குடும்ப ஊடலா..???

மு: அடச்சே.. ஊடலா இருந்தா நாங்க டபாய்க்க மாட்டோமா.. இல்லாமையா ரெண்ட கட்டினோம்.. இது வேற

ஒள: அப்படியா.. சரி மேல சொல்லுங்க..

மு: மொதல்ல இருந்து வரேன்.. செம்பு மன்னனுக்கும் ஒரு டவுட்டு.. கிளியர் பண்ணினா 5 பிகர்ன்னு அறிவிப்பு விட்டான்.. சரி அதை நாம தட்டலாமேன்னு நானும் அங்க போய் டவுட்ட கிளியர் பண்ணினேன்.. ஆனா பரிசை எனக்கு கொடுக்குறதுக்குள்ள....

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. பிளாஸ் பேக்.....

அடுத்த போஸ்ட்'ல

Wednesday, September 20, 2006

இன்று என் இதயம் வருடிய பாடல்: வாலியின் வரிகள்

காலையில் விழிக்க மனமில்லை, அலுவலகம் அலுத்தது இருந்தும் வந்தேன், வேலை சுமையானது, செய்ய மனமில்லை, செய்யவும் இல்லை. வேற என்ன பாடல்களை காதோரம் அலறவிட்டேன்...

கனிப்பொறியில் பாதி இடம் பாடலுக்காக ஒதுக்கினேன் ஆனால் அத்தனையிம் முழுதாய் இதுவரை கேட்டது இல்லை... எத்தனை பாடல்கள் ஓடியது என்று தெரியாது.. சட்டென்று ஒரு பாடல் மனதை ஏதோ செய்தது.. அதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்...

***********************************************************************************
படம்: அன்பே சங்கீதா
பாடியவர்: S. P. B & S. P. Sailaja
இசை: இளையராஜா
வரிகள்: வாலி


சின்னப் புறா ஒன்று
எண்ணக் கனாவினில
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே

ஒருவன் இதயம் உறுகும் நிலையை
அறியா குழந்தை நீ வாழ்க
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும்
உறங்கா மனதை நீ கான்க
கீதாஞ்சலி செய்யும் கோவில்மணி
சிந்தும் நாதங்கள் கேட்டாயோ
மணியோசைகளே எந்தன் ஆசைகளே
கேளம்மா

சின்னப் புறா ஒன்று
எண்ணக் கனாவினில


மீட்டும் விரல்கள் காட்டும் சவரங்கள்
மறந்தா இருக்கும் பொன் வீணை
மடிமேல் தவழ்ந்தேன் மறுநாள் வரை நான்
மறவேன் மறவேன் உன் ஆனை
நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே
எந்தன் ராகங்கள் தூங்காது
அவை ராகங்களா இல்லை சோகங்களா
சொல்லம்மா

சின்னப் புறா ஒன்று
எண்ணக் கனாவினில
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே


************************************************************************************

கண்ணதாசன் அவர்களுக்குப் பின் நான் ரசித்த வரிகள் வாலி அய்யாவுடையது.. ஒரு காலத்தில் இந்த வரிகள் வாலியுடையதா இல்லை கண்ணதாசனுடையதா என்று குழம்பும் அளவுக்கும் இருவரின் வரிகளும் ஆழமாகவும் அழகாகவும் இருந்தது... தமிழே இவர்களிடம் மயங்கும், நான் என்ன சிறு எறும்பு!!!

இந்த பாடல் spb, ராஜா & வாலி இவர்களில் கூட்டில் வந்த எத்தனையோ அருமையான பாடல்களில் ஒன்று. காதலிக்காதவருக்குகூட இந்த பாடல் சொல்ல முடியாத ஒரு சோகத்தை விட்டுச் செல்லும்.

இந்த பாடலை கேட்க விரும்புவோர்... இங்கே கேட்கலாம்

வாழ்க இசை, வளர்க தமிழ்.
கன்யா

Sunday, September 17, 2006

நிறைவு

மக்களே...

கொஞ்சம் பிசி.. அதுனால சிரிவிளையாடல் - finale இன்னும் under production'லயே இருக்கு...

இன்னைக்கு சிகாகோ வந்தேன்.. வந்த விமானத்துல அழகான ஒரு குடும்பத்தைப் பார்த்தேன்... பார்த்தப்போ தோனிய ஒரு கவிதைய என்னோட நோட்டுல நோட் பண்ணினேன்.. அதை இங்கே போஸ்ட் பண்றேன்...

************************************************************************************
வளையல் அழகென்று
கைநிறைய குலுங்கவிட்டேன்
தழுவி அனைக்கையிலே உன் மேனி கீரும் என்று
அத்தனையும் களைந்துவிட்டேன்

கொலுசொலி சுகமென்று
மன்னன் மயங்க ஒலிக்கவிட்டேன்
அதிர்ந்து நடைக்கையிலே உன் துயில் கலையுமென்று
சலங்கைகளை பிரித்துவைத்தேன்

மங்களமாய் அவர் தந்த
மாங்கல்யம் தொங்கவிட்டேன்
என் மார்பில் பசியாரும் பைங்கிளியே நீ பற்ற
உன் உள்ளங்கை சிவந்ததடி பொன்மகளே என்ன செய்வேன்

மன்னவனும் என் கலக்கம் கண்டு
மரகதமே உன் சிவந்த விரல் கண்டு
என் சித்திரம் இது கலங்குமெனில்
களட்டிவிடு அது பெரிதல்ல என்றார்

என்னவென்று சொல்வதம்மா
நான் கொண்ட இந்த வரம்
எத்துனை தவம் புரிந்தேனோ
இத்துனை சுகமாய் ஒரு இல்லரம்

என்னை நிறைத்த நீ
நம்மை சுமக்கும் அவர்
போதுமடி இந்த ஜென்மம்
நிறைந்துவிட்டேன் இனி ஏது சலனம்

*************************************************************************************

கண்ணு வெச்சுட்டேனோன்னு ஒரு டவுட்டு... சொ .. ஊர் கண்ணு உறவுக் கண்ணு... கொள்ளிக் கண்ணு.. குறிப்பா என் கண்ணு.. எல்லாக் கண்ணும் நாசமாப் போகட்டும்!!!! தூ தூ தூ... :D

அப்பா இப்போத்தான் ஒரு திருப்த்தி....;;)