Saturday, September 23, 2006

சிரிவிளையாடல் - finale

இடம்: செம்பு மன்னன் தமிழ் சங்கம்
பார்டீஸ்: முருகன், செம்பு, கீரர்..

காட்சி: அப்பனுக்கு சொன்ன மாதிரி செம்புவுக்கும் கேள்விக்கு பதிலை காதில் ஓதுகிறார் முருகர்.. செம்பு அப்படியே சொக்கி போய் சந்தோஷத்துல பரிசுகளை அழைத்து வரச் சொல்றார்..

கீ: மன்னா.. நில்லுங்கள்.. முருகன் அப்படி என்ன சொன்னார் என்று அலசி ஆராயாமல் பரிசை எப்படித் தரலாம்?

மு: யோவ்.. உன் சவுண்டை எல்லாம் எங்கப்பன்கிட்ட வெச்சுக்கோ.. நான் பொற்தாமரை குளத்துல எல்லாம் தள்ள மாட்டேன்.. நேர சிவலோகம் தான்..

கீ: இந்த மிரட்டலுக்கெல்லாம் பயந்தவன் நான் இல்லை.. எனக்கும் சொன்னாத்தான் உண்டு..

செ: அய்யோ கிழ கீரரே.. இது எல்லாம் வயசுப் பசங்க மேட்டர்..

மு: தோடா சைக்கிள் கேப்புல உட்டா சங்கராபரனமே பாடுவீங்களே... நீர் வயசுப் பைய்யனா???

செ: (ஈ என்று இளிக்கிறார்....)

கீ: ஆவ்வ்வ்வ்வ்.. செம்புவுக்கு தெரிஞ்சா எனக்கும் தெரியனும்..

மு: கருமம்.. கேளும்..

“மதுரையின் மணம் மல்லிகையில்
மன்னவன் மனம் மங்கையரில்
காதலின் மணம் காமத்தில்
அந்த மோகத்தினால் மங்கையர் மயக்கத்தில்
அதனால், கொஞ்சும் உன் தமிழிலில்
உன் நேசத்துக்கு வந்தது இந்த மணம்”

இதுதான் மேட்டர்..

கீ: தப்பு...

மு: என்ன தப்பு??

கீ: அது தெரியாது.. ஆனா தப்பு..

மு: யோவ்வ்வ்வ்வ்

செ: தமிழ் வேந்தர்களே.. அமைதி அமைதி.. கலைஞர்களுக்கு மத்தியில் சர்ச்சை இருக்கலாம் ஆனால் சண்டை கூடாது..

மு & கீ: அடங்குடா செம்பு

செ: சரி சரி.. பரிசைக் கொடுக்கலாமா?

கீ: என்ன தப்புன்னு சொல்ல தெரியல.. சோ.. கொடுத்துடுங்க

செ: யார் அங்க.. அழைத்துவாருங்கள், பரிசுப் பொக்கிஷங்களை!!!!

பெரிய பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

ஒள: என்ன ஆச்சு முருகா

மு: ஏன் கேக்குற பாட்டி.. நான் கூட அழகா அம்சமா 5 பிகர் வரும்ன்னு பாத்தேன்

ஒள: பின்னே.. எல்லாம் கிளவிங்களா??

மு: கிளவிங்களா இருந்து இருந்தா கூட சரி பிரியா விட்டு இருப்பேன்.. அவுங்க எங்கயாவது போய் பொளச்சுக்குவாங்க..

ஒள: அப்பறம்...???

மு: எல்லாம் 5 வயசு புள்ளைங்க... எல்லாம் என்னைப் பார்த்ததும்.. அங்கிள் அங்கிள்’ன்னு மிங்கிள் ஆகிடுச்சுங்க.. :( ... இனி அதுங்களை பாத்துக்குற வேலை வேற..

ஒள: ஓஹோ... இதுக்குத்தான் இங்க சோகமா??

மு: அட நீ வேற பாட்டி.. இதைக்கூட சமாளிக்கலாம்.. இல்லை எங்க அப்பன் பண்ணின மாதிரி கார்த்திகை பெண்களை அப்பாயிண்ட் பண்ணி இதுங்கள வளக்க சொல்லலாம்...

ஒள: பின்னே, ஏன் இந்த சோகம்...

மு: சரக்கடிச்சவன் அதுக்கு ஊருகா நக்கலாம்.. ஆனா பாட்டி, அல்ப்ப மேட்டர், செம்பு சதி பண்ணீட்டதுல என் வீட்டில எத்தனை வருஷம இந்த வேளை பண்றே, 5 புள்ளைகளும் எந்த ஆங்கில்’ல பார்த்தாலும் உன்னோட ஜாடையா இருக்கேன்னு சொல்லி சாத்து சாத்துன்னு சாதுறாளுங்க!!! சும்மா நேரத்துல சக்களத்தி சண்டையில் நமக்கு நல்ல கவனிப்பு இருக்கும்.. ஆனா இப்போ அவளுங்க ரெண்டு பேரும் ஜோடி சேந்துகிட்டாங்க.. இந்த கொடுமைய எங்க போய் சொல்லுவேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒள: நல்ல குடும்பம் இதுக்கு நான் ஒரு ஆஸ்த்தான புலமைப் பாடகி.. ஏதோ படத்தை முடிக்கனுமே... சோ பாடித்தொலைக்கிறேன்

மு: நிறுத்துங்க நிறுத்துங்க... இந்த சிச்சுவேஸனுக்கு... நானே பாடிக்கிறேன்... எத்தனை பாட்டு கேட்டு இருப்பேன்

"ஊரத் தெரிஞ்சுகிட்டே உலகம் புரிஞ்சுகிட்டேன்
ஒளவையே ஓ ஒளவையே
வேலும் ஒடஞ்சுடிச்சு மயிலும் பறந்துருச்சு
ஒளவையே ஓ ஒளவையே

பொண்டாட்டி கோவப்பட்டா சின்னூடு புடிச்சேன்
பொம்பலைங்க சேந்துகிட்டு என் தலைய உருட்டுறாங்க

ஊரத் தெரிஞ்சுகிட்டே உலகம் புரிஞ்சுகிட்டேன்
ஒளவையே ஓ ஒளவையே
வேலும் ஒடஞ்சுடிச்சு மயிலும் பறந்துருச்சு
ஒளவையே ஓ ஒளவையே

ஏன் கதை ஒரு சோகம்தான்
அதை யாரும் வந்து கேட்ட
பாடினேன் நான் பாடினேன்
ஒரு பாடில் நீ கேட்க

நான் புடிச்சேன் ஜோடி ரெண்டு
எனக்கேது ஜோடி இங்கு
நான் வந்து நிக்கிறேனே
ரோடுல நடு ரோட்டுல

நான் போட்ட கணக்கு அஞ்சு
செம்பு போட்டானே வேற ஒன்னு
ஆடிட்டான் ஒரு ஆட்டத்த

ஊரத் தெரிஞ்சுகிட்டே உலகம் புரிஞ்சுகிட்டேன்
ஒளவையே ஓ ஒளவையே
வேலும் ஒடஞ்சுடிச்சு மயிலும் பறந்துருச்சு
ஒளவையே ஓ ஒளவையே"

பா: முருகா... என்ன இது... இப்படி பாட ஆரம்பிச்சுட்டே??

சொ: ஹிஹிஹி... எனக்கு முந்திகிட்டு ஐந்ஞ்சையும் தள்ளிக்கலாம்ன்னு நினைச்ச இல்ல அதான்....

பி: ஏண்டா தம்பி... வள்ளி மேட்டர்'ல எல்பு கேட்ட மாதிரி இப்போவும் கேட்டு இருக்கலாம் இல்ல

மு: அடச்சே... வெந்த புண்ணுல என்னோட வேல்'லையே பாச்சுறீங்களா?

வ & தெ: முருகா... செய்யிறதெல்லாம் செய்துட்டு நாங்க உங்க தலைய உருட்டுறோம்ன்னு பாட்டு பாடுறீகளோ..... கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம இங்க வந்து குடும்பத்தோட ஆலோசனையா? அப்பா, அண்ணன், அம்மாகிட்ட எல்லாம் கண்சல்டிங்கா...???

ஒள: ஆஹா.... ஆரம்பிச்சுட்டாங்யா.... இது இவங்க குடும்பப் பிரச்சனை... இனி நாம அப்ஸ்காண்டு.................................................

**** இதுவரை சிவன் பேமலி டோட்டல் டேமேஜ்.... இனி அவங்களே டாமேஜ் கண்டிரோல் பண்ணிக்கட்டும்!!!!!!!

நிறைய இஸ்பெல்லில் மிஸ்டேக்கோட டைப் அடிச்சதையும் பொருட்படுத்தாம.... இந்த மெகா சீரியல படிச்சதுக்கு நெம்ப தாங்ஸ்சுங்கோவ்!!!!!1

10 comments:

G3 said...

Haiya.. Naan dhaan phirst komint.. Nataamai.. inimae ungalukku no puliyodharais..

//அது தெரியாது.. ஆனா தப்பு..//

//எல்லாம் 5 வயசு புள்ளைங்க... எல்லாம் என்னைப் பார்த்ததும்.. அங்கிள் அங்கிள்’ன்னு மிங்கிள் ஆகிடுச்சுங்க..//
...............
(ellathaiyum potta post fulla podara maadiri aayidum.. :))

Chancae illa.. Nalla vizhundhu vizhundhu sirichen.. :) Nalla vela ungalukku mega serial aasai ellam illannu prove panni seekiramae storya mudichiteenga.. Sivan family adhukkaga ungalukku spl thanks soldradhu unga kaadhula vizhudhaa :)

Syam said...

எது எப்படியோ சிவன் ஃபேமிலியோட டோட்டல் டேமேஜ் ஆயிட்டாரு...மொத்தத்துல சிரி விளையாடல் "சூப்பர் சிரிப்பு" (சன் டிவி டாப் டென் ஸ்டைல்ல படிக்கவும்)... :-)

Anonymous said...

mudiyila kanya mudiyila sivasnesihya irundittu ipadi pottu thakkitiye irundhalum ivalavu jovialana father son concept supera irundhudhu good job




amma

ambi said...

//சைக்கிள் கேப்புல உட்டா சங்கராபரனமே பாடுவீங்களே... //
ROTFL :) full postum rocking. munthina partum padichuten. naan sirikaratha paarthu, pakathu cabin party ezhunthu vanthruchu.

Kudos! :)

KK said...

Super'a irukku Kanya...ROTFL!!!
//அங்கிள் அங்கிள்’ன்னு மிங்கிள் ஆகிடுச்சுங்க// super!!! yeppadinga ippadilam thonuthu ungalukku?
Murugan oda song ultimate!!! Very nice!!!

gils said...

wow...sooopero sooper...aana mudichiteengalay :(

Harish said...

Full form la irukeenga pola...

Kanya said...

Guyz..

Thanks everyone for ur support on my comedy trial.. :D

my next post is going to be kind of serious and sensitive... hope to c ur feedbacks on that as well...

Thanks

Unknown said...

super ya...super. kalkkitta. bayangara sense of humour.

Anonymous said...

superb....very creative....