Wednesday, September 20, 2006

இன்று என் இதயம் வருடிய பாடல்: வாலியின் வரிகள்

காலையில் விழிக்க மனமில்லை, அலுவலகம் அலுத்தது இருந்தும் வந்தேன், வேலை சுமையானது, செய்ய மனமில்லை, செய்யவும் இல்லை. வேற என்ன பாடல்களை காதோரம் அலறவிட்டேன்...

கனிப்பொறியில் பாதி இடம் பாடலுக்காக ஒதுக்கினேன் ஆனால் அத்தனையிம் முழுதாய் இதுவரை கேட்டது இல்லை... எத்தனை பாடல்கள் ஓடியது என்று தெரியாது.. சட்டென்று ஒரு பாடல் மனதை ஏதோ செய்தது.. அதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்...

***********************************************************************************
படம்: அன்பே சங்கீதா
பாடியவர்: S. P. B & S. P. Sailaja
இசை: இளையராஜா
வரிகள்: வாலி


சின்னப் புறா ஒன்று
எண்ணக் கனாவினில
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே

ஒருவன் இதயம் உறுகும் நிலையை
அறியா குழந்தை நீ வாழ்க
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும்
உறங்கா மனதை நீ கான்க
கீதாஞ்சலி செய்யும் கோவில்மணி
சிந்தும் நாதங்கள் கேட்டாயோ
மணியோசைகளே எந்தன் ஆசைகளே
கேளம்மா

சின்னப் புறா ஒன்று
எண்ணக் கனாவினில


மீட்டும் விரல்கள் காட்டும் சவரங்கள்
மறந்தா இருக்கும் பொன் வீணை
மடிமேல் தவழ்ந்தேன் மறுநாள் வரை நான்
மறவேன் மறவேன் உன் ஆனை
நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே
எந்தன் ராகங்கள் தூங்காது
அவை ராகங்களா இல்லை சோகங்களா
சொல்லம்மா

சின்னப் புறா ஒன்று
எண்ணக் கனாவினில
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே


************************************************************************************

கண்ணதாசன் அவர்களுக்குப் பின் நான் ரசித்த வரிகள் வாலி அய்யாவுடையது.. ஒரு காலத்தில் இந்த வரிகள் வாலியுடையதா இல்லை கண்ணதாசனுடையதா என்று குழம்பும் அளவுக்கும் இருவரின் வரிகளும் ஆழமாகவும் அழகாகவும் இருந்தது... தமிழே இவர்களிடம் மயங்கும், நான் என்ன சிறு எறும்பு!!!

இந்த பாடல் spb, ராஜா & வாலி இவர்களில் கூட்டில் வந்த எத்தனையோ அருமையான பாடல்களில் ஒன்று. காதலிக்காதவருக்குகூட இந்த பாடல் சொல்ல முடியாத ஒரு சோகத்தை விட்டுச் செல்லும்.

இந்த பாடலை கேட்க விரும்புவோர்... இங்கே கேட்கலாம்

வாழ்க இசை, வளர்க தமிழ்.
கன்யா

5 comments:

Syam said...

ஏம்மா கன்யா இப்படியும் ஓபி அடிக்கலாமா என்ன ஆச்சு சிரிவிளையாடல் :-)

Kanya said...

:).. அடுத்த போஸ்ட் சிரிவிளையாடல் finale தான்... ஓகே??

Prasanna Parameswaran said...

@ syam: kadamaiyaa kannum karuthumaa seyaareenga ponga! :)

nalla paatunga

KK said...

Syam naan nichatha neenga solliteenga...ippadiyum post podalamna easy'a irukume... :)

gils said...

nalla song...unga micha kavidhailamum padichu mudichiten...tamizh padamla song ezhutha inoru poo..thamaraiku thunai kidachachu.. :D