பசிக்கிறதா என்று கேட்டவனெலாம்
பந்திக்கு அழைக்கிறான்
வெறும் தேகப்பசி என்றால்
முந்தி இருக்கலாம்
எனக்கோ
உணர்வுப் பசி அதை உணரப் பசி
உலகப் பசி அதை ஆழப் பசி
அறிவுப் பசி அதை அடையப் பசி
சாதனைப் பசி அதை சாதிக்கப் பசி
யானைப் பசியட எனக்கு
அதை தீர்க்கும் ருசி இல்லை உனக்கு
இதை எப்படிச் சொன்னாலும்
விளங்காத மடையர்தமக்கு
விளக்கிச் சொல்லும்
விதி இல்லை என்னக்கு
Monday, October 24, 2011
Tuesday, January 11, 2011
வரி கேடு
கோடிகளில் புரளும்
தனவான்களில் எல்லாம்
கொடுப்பவர் கொஞ்சம்
கொள்பவர் மிச்சம்
கொடுப்பவர் கொடுப்பதும்
கொள்ளையில் கொஞ்சம்
குருதியை கறைத்து
கூட்டை வறுத்தி
வேர்வையில் வாடும்
உழைப்பவர் கொடுப்பதோ
கோமணம் வாங்க
விற்பனை வரி 12 .5 சதம் !!!!
தனவான்களில் எல்லாம்
கொடுப்பவர் கொஞ்சம்
கொள்பவர் மிச்சம்
கொடுப்பவர் கொடுப்பதும்
கொள்ளையில் கொஞ்சம்
குருதியை கறைத்து
கூட்டை வறுத்தி
வேர்வையில் வாடும்
உழைப்பவர் கொடுப்பதோ
கோமணம் வாங்க
விற்பனை வரி 12 .5 சதம் !!!!
Tuesday, January 04, 2011
இதுவும் சுகம்
உன்னோடு பேசிய தமிழ்
தேனாய் இனிக்கிறது
உன்னோடு சுவாசித்த காற்று
உயிராய் தேய்கிறது
உன்னோடு கொண்ட ஊடல்
சுகமாய் வலிக்கிறது
உன்னோடு கூடிய மோகம்
முல்லை மாறியது
உன் நினைவுகளை சுமக்கும்
நான் நித்ய கர்பிணி
தேனாய் இனிக்கிறது
உன்னோடு சுவாசித்த காற்று
உயிராய் தேய்கிறது
உன்னோடு கொண்ட ஊடல்
சுகமாய் வலிக்கிறது
உன்னோடு கூடிய மோகம்
முல்லை மாறியது
உன் நினைவுகளை சுமக்கும்
நான் நித்ய கர்பிணி
Subscribe to:
Posts (Atom)