வணக்கமுங்க... நமக்கு ஊரு கோவைப் பக்கம்... வளர்ப்பு சிங்காரச் சென்னை ... பொளப்பு சுத்திகிட்டே இருக்கேன்... இப்போ அமெரிக்கா... அப்பறம் எங்கேன்னு யாருக்கு தெரியும்... கை அரிப்பு தாங்கல.. அதான் கிறுக்கி இருக்கேன்...
தழும்பு
காதலின் விதைகளை
விழிகளில் விதைத்துச் சென்றவளே
கண்ணீரை உரமாக்கி நான் வளர்த்த
என் கனவுகள் இருண்டதடி
இமைகளில் உனை அடைக்க நினைத்தேன்
அன்றே சிறைப்பட்டவன் நானடி
சிந்திய ஒரு புன்னகையில்
சிதறிய என் நெஞ்சை
என்றாவது நீ அறிவாயென்றால்
அன்றுவரை நான் பித்தனாய்.....
*******************************************************************
நம்ம பசங்க சிலர் இப்படித்தான் சுத்துறதா கேள்வி .... :P
அப்பப்போ இப்படி எதாவது கிறுக்குவேன்... உங்கள் திட்டுகள் kanyabp@gmail.com... பாராட்டு.. ஹிஹி.. இங்கயே கொடுக்கலாம்...
நன்றி.. சொல்லிக் கொண்டே இருப்பேன்...