Saturday, August 25, 2007

பணயம்!!

பாதைகள் பல
கடந்து வந்தேன்
ஓய்ந்ததென்
கால்கள் மட்டுமல்ல

வார்த்தைகள் பல
உதிர்த்துவிட்டேன்
சிதறியது
சொர்க்கள் மட்டுமல்ல

இரவுகள் பல
விழித்திருந்தேன்
தேடியது
விடியலை மட்டுமல்ல

காலங்கள் பல
கறையவிட்டேன்
தொலைத்தது
வயதை மட்டுமல்ல

இனி எதை
பணயமாக்குவேன்
உடைந்த துகள்களிலிருந்து
என்னை மீண்டெடுக்க!!

Thursday, August 02, 2007

வரம் தா!!

விடியலைத் தேடி
என் இரவுகள்
ஒளியினைத் தேடி
ஓடும் பாதைகள்

அமைதியைத் தேடி
அலரும் இதயம்
ஏன் தந்தாய் இறையா
இப்படி ஒரு சாபம்!!

மனதைப் படைத்தாய்
அதில் வலிகளை விதைத்தாய்
விழிகள் கொடுத்தாய்
பல கனவுகள் உலவவிட்டாய்
அறிவொன்று தந்தாய் - அதன்
அழிவையும் உணரச்செய்தாய்

உணர்வுகள் தந்தாய்
உணர்ச்சிகள் உறையக் கண்டாய்
ஊன் ஒன்று தந்தாய்
உயிர் கசிய பார்த்து நின்றாய்
பாதைகளை வகுத்துவிட்டு
இலக்கினை மறைத்து வைத்தாய்

எதைத் தேடுகிறோம் அதை
எதற்காகத் தேடுகிறோம் என்ற
பொருளில்லா தேடல்
இந்த வாழ்க்கை

இன்று வருமோ இல்லை
என்று வருமோ என்று
ஓயாமல் ஓடும்
பல காலம்

இனியும் தேட சக்தி கொடு
இல்லையேல்
இனியாவது ஓய்வு கொடு!!!