Tuesday, January 08, 2008

நீ நான் காதல்!!

வானம் அந்த வானம்
மஞ்சள் பூசும் நேரம்
இதமாய் ஒரு கானம்
என் காதோடுதான் கேட்கும்

மேகம் வென் மேகம்
மெதுவாய் தவழும் காலம்
சில்லென்று சில தூரல்
என் தேகம் உரசிப் போகும்

உன் பேயரே கானமாய்
உன் வாசமே தூரலாய்
என்னைத் தொடும் போதெல்லாம்
நானாக நான் இல்லை
என் நிழல்கூட எனதில்லை

என் அருகில் நீ இருக்க
உன் அணைப்பில் நான் தவிக்க
மார்போடு முகம் புதைத்தேன்
எனக்குள் துடிக்கும்
உன் இதயத்தில் சுகம் வேண்டி

போதுமென்று நான் சிணுங்க
வேண்டுமென்று நீ சீண்ட
இதழோரம் தேங்கிய
சில பணித்துளிகளில்
நனைந்தது நான் மட்டுமல்ல

உன் தோளோடு எனைச் சேர்த்து
பரிவோடென் உச்சி முகர்ந்து
ஆதரவாய் எனை அனைத்து
நம் சுவாசம் ஒன்றாய் கலந்து
உறையும் இந்த இரவுகளில்
தொடரும் நம் நெருக்கம்

இன்று போல் என்றும் வாழ்
இன்னும் வேண்டும்
பல கோடி பௌர்னமிகள்
உன்னோடு மட்டும்