Saturday, September 23, 2006

சிரிவிளையாடல் - part III

Recap – எப்பவும் போல நம்ம செம்பு மன்னன் சந்தேகத்தைக் கிளப்ப, ஜொள்ளு தாங்காம நம்ம தருமி சொக்கனுக்கு SOS அனுப்ப, சொக்கனும் அவசர அவசரமா FAQ டாக்குமெண்ட்ட பிரௌஸ் பண்ண போய் இருக்கார்… இதை எல்லாம் பெவிலியன்’ல இருந்து, Mrs. மீனாட்சி சொக்கநாதனும் அவங்களோட கடைக்குட்டி முருகனும் நோட் பண்ணிகிட்டு இருக்காங்க

இடம்: சரக்குக் காய்ச்சும் கிடங்கின் ஓப்பன் பாடியோ
பார்ட்டீஸ்: பெப்ஸி, லேஸ் சிப்ஸ், ரிக்லைனரோட முருகனும், அம்மா பார்வதியும்.

காட்சி: இதுவரை நடந்த அனைத்தும் பார்த்து லேசா முருகனுக்கு டென்ஷன் ஆகுது.. ஆனா காமெடி மெகா சீரியல் பாக்குற குஷில அம்மா இதை நேட் பண்ணவே இல்லை..

மு: அம்மா என்ன இது சின்ன புள்ளத்தனமா இருக்கு..

பா: எதைடா சொல்ற?

மு: செம்புதான் அசட்டுத்தனமா கேள்வி கேக்குறான்னா… அப்பாவும் இப்படி.. சீ சீ..

பா: அப்படி சொல்லுடா என் தங்கமே.. உனக்காவது புத்தி இருக்கே..

மு: பின்னே என்னம்மா.. போட்டின்னு வந்த அப்பறம் அதுல கொசுறா தருமிக்கு எதுக்கு ஒரு பிகரு?? போட்டிய முடிச்சோமா கிடைச்சத மொத்தமா ஒரு அள்ளுனோமான்னு இல்லாம.. சே சே.. முக்கி முக்கி ரகசியமா சொல்லிக் கொடுத்த பாடம் எல்லாம் அந்த பக்கம் காதுல வெளிய விட்டுடாரு போல!!!

பா: அடபாவிமக்கா.. இதுக்குத்தான் இத்தனை பீலிங்கா!!! அது சரி இதைத்தான் நீ உங்கப்பனுக்கு காதுல சொன்னியா.. அப்போ நீ நிஜமாவே சின்ன பையன் தானேடா..

மு: மூர்த்தி சிறுசானாலும் நம்ம கீர்த்தி பெரிசும்மா.. இதை எல்லாம் கண்டுக்காதே..

பா: அப்பனோட போடுறது எல்லாம் சண்டை.. ஆனா ஆளப்பாருங்கடா அப்படியே ஜெராக்ஸ்...

மு: சரி சரி.. இதை எப்படி டீல் பண்றதுன்னு என்னக்கு தெரியும்.. மீ கோயிங்.. யூ வாச்சிங்..

டிரிரிரிரிங்ங்ங்....(வெறும் சவுண்டு.. எல்லாம் ஒரு பீலிங்குக்காகத்தான்)

இடம்: செம்பு மன்னன் தமிழ் சங்கம்
பார்டீஸ்: முருகன், செம்பு, கீரர்.. இன்னும் சில ஜால்ராஸ்...

மு: யோவ் செம்பு என்னைய்யா உனக்கு பிரச்சனை.. ஏன் இப்படி எல்லாம் கேள்வி கேட்டு கொல்ற?

செ: சாரி.. நீங்க யாருன்னு தெரியலையே..

மு: டேய் டப்ஸா கண்ணா.. நல்லா பாரு.. உன்னோட அரசவைக் கேலண்டர்க்கு போஸ் கொடுத்துகிட்டு இருக்குறது யாரு??

செ: ஆகா… என் அப்பன் சொக்கனோட நெற்றிக் கண்ணில் இருந்து வந்த, ஆறுபடை வீடு கொண்ட என் அழகு முருகனா இது!!

மு: டேய் டேய்.. இந்த பில்டப்புத்தானே வேண்டாங்குறது.. எத்தனை காலம்டா இப்படி மொழ நீலத்துக்கு இண்ட்ரோடெக்ஷன் கொடுப்பீங்க.. ஏன் எங்களுக்குன்னு தனி அறிமுகம் கிடையாதா?

செ: சரி சரி கோவிச்சுக்காதே முருகா.. எப்படி இருக்கீங்க.. வீட்டுல எல்லா எப்படி இருக்காங்க… ஆமா ரெண்டு பேர எப்படி சமாளிக்கிறீங்க??

மு: அடப்பாவி.. அதுக்குள்ள இன்னோரு டவுட்டா??

செ: சாரி.. என்ன விஷயமா இந்த விஜயம்..??

மு: சொல்றேன்.. சொல்லத்தானே வந்து இருக்கேன்..

இடம்: மேல அப்படியே கட் பண்ணி, முருகன் வீட்டு குசனி அறை.. அதாங்க கிட்சன்.. அங்க போறோம்.. அப்பறம் அங்க இருந்து அப்படியே நகர்ந்து ஹால் வரைக்கும் வருவோம்
பார்டீஸ்: தெய்வானை, வள்ளி.. கொஞ்ச நேரம் களிச்சு நாரதர்..

வ: அக்கா.. கொஞ்ச நாளா எனக்கு என்னவோ கெட்ட கெட்ட கனவாவே வருது!!

தெ: அப்படியா.. இப்போ எல்லாம் எனக்கும் அப்படித்தான்.. என்னவோ திடீர் திடீர்ன்னு தூக்கம் கலையுது.. வயத்துல புளிய கரைக்கிற மாதிரி இருக்கு..

வ: அய்யோ அக்கா.. எனக்கும் அப்படித்தான்.. என்னவா இருக்கு??

தெ: எனக்கு என்னவோ திக்கு திக்குன்னு இருக்கு.. இவர் உன்னை ரூட் விட இங்க இருந்து அப்ஸ்காண்ட் ஆனதும் இப்படித்தான் இருந்துச்சு.. கண்மூடி திறக்குறதுக்குள்ள உன்னை தள்ளிகிட்டு வந்துட்டார்..

வ: சே சே.. அப்படி எல்லாம் ஒன்னும் பண்ண மாட்டாருக்கா..

தெ: எனக்கேவா.. ஆமா உன்னை டாவடிச்சப்போ நான் இருக்குறதை உன்கிட்ட சொன்னாரா?

வ: சொல்லல.... ஏன்கா அப்படி எதுவும் பண்ணுவாரோ?

தெ: பண்ணட்டும் அப்பறம் இருக்கு...

ஹால்’ல ஏதோ சத்தம் கேட்க.. ரெண்டு பேரும் அங்க நகர..

நா: நாராயனா.. நாராயனா..

வ & தெ: வாங்க நாரதர் மாமா... என்ன இன்னைக்கு குழப்ப குட்டை கிடைக்கலையா.. இங்க வந்து இருக்கீங்க..

நா: அய்யோ நாராயனா.. நான் அதுக்கு எல்லாம் இங்க வரலை தாய்களா.. அப்பா கிட்ட கோவிச்சுகிட்டு கிளம்பின முருகன் ஏதோ தன்னை ரிலாக்ஸ் பண்ணிக்க ஏதோ செய்றதா கேள்விப் பட்டேன்.. அது என்னன்னு கேட்டுட்டுப் போக வந்தேன் அவ்ளோதான்..

தெ: என்னது.. அப்பா கூட சண்டை போட்டு அதுனால டென்ஷனா?? சான்ஸே இல்லை.. என்ன நடக்குது.. உண்மைய சொல்லுங்க!!!

நா: நாராயனா.. இல்லை இல்லை.. நான் தப்பான நேரத்துல வந்துட்டேன்.. அப்பறம் கொஞ்ச நேரம் களிச்சு வரேன்..

வ: ஹலோ.. அதான் அக்கா கேக்குறாங்க இல்ல.. அப்பறம் ஏன் மழுப்புறீங்க.. என்ன விஷயம் சொல்லுங்க!!!

நா: அப்பா முருகா.. மன்னிச்சுக்கோ.. ரெண்டு பொம்மளைங்க மடக்கிட்டாங்க.. நானோ பயந்த சுபாவம்.. சோ உண்மை சொல்ல வேண்டியதா இருக்கு!!!

வ & தெ: போதும் போதும்.. மாட்டருக்கு வாங்க

நா: அது வந்து... ************

வ & தெ: என்ன?? ஏற்கனவே ரெண்டு.. இப்போ இன்னும் அஞ்சா??????? வரட்டும் வரட்டும் இன்னைக்கு ஒன்னுல ரெண்டு.. இல்ல இல்ல ஏழுல ரெண்டு பாக்குறோம்.. இதை அத்தையும் தடுக்கலையா.. அவங்களுக்கும் இருக்கு!!!!

இதற்கிடையில் சில காட்சிகள் ஓடுகிறது.. அவை பிளாஸ் போக்காக அப்பறம் வரும்.....

இடம்: ஏதோ ஒரு மலை.. இல்லை இல்லை நம்ம நடிகர் விஜெய் எங்க கல்லு கிடைச்சாலும் ஏறி குதிச்சுட்டு அதை டான்ஸ்’னு சொல்லுவாறே அது மாதிரி நம்ம முருகனும் ஒரு பாறை போல ஏறி நிக்கிறார்..
பார்டீஸ்: முருகன், ஒளவ்வையார் (ஒ ள வ்வையார்ன்னு படிக்கிற புத்திசாலிகளுக்காக.. அது அவ்வையார்)

ஒள: என்ன முருகா.. இப்படி இங்க வந்து மொட்டை வெய்யில்’ல நிக்குறீங்க.. சன் பாத்தா?

மு: தோடா.. கடுப்ப கிளப்பாம சைலெண்டா கிளம்புற வழிய பாருங்க பாட்டி.. ஞானப்பழம் பாட்டு எல்லாம் இனி செல்லாது!!!

ஒள: காலம் மாறும் போது அதுக்கேத்த மாதிரி நானும் பாட்டை மாத்திக்குறேன்.. இல்லைன்னா நல்லது சொன்ன எவன் கேக்குறான்.. அதையே மசலா போட்டு, தேவா மியூசிக் போட்டா கேக்குறானுங்க..

மு: என்னது தேவா மியூசிக்கா......

ஒள: அட ஏன் டென்ஸன் ஆகுறீங்க.. அதுவே ஈ அடிச்சாங் காப்பிதான்.. அதை நான் சுட்டா ஒன்னும் தப்பு இல்ல..

மு: அது சரி

ஒள: ஆமா கேட்டதுக்கு ஒன்னும் சொல்லலையே.. இங்க மொட்டை வெய்யிலுல என்ன பண்றீங்க

மு: ஒரே சோகம் அதான்.. கொஞ்ச நேரம் தனியா இருக்கலாம்ன்னு இங்க வந்துட்டேன்

ஒள: ஆகா.. உங்களுக்கே சோகமா?? என்ன ஆச்சு..

மு: அதை ஏன் கேக்குற பாட்டி.. விடு.. இதை எல்லாம் சொன்னா உனக்கு புரியாது!!!

ஒள: ஒரு காலத்துல நக்கலா நீங்க சுட்ட பழம் சுடாத பழம்’ன்னு சொன்னதே எனக்கு விளங்குச்சு.. இன்னும் வேற என்ன புரியாம போறதுக்கு.. மேட்டரை சொல்லுங்க

மு: அது வந்து பாட்டி.. பொண்டாட்டிங்க....

ஒள: ஓ.. குடும்ப ஊடலா..???

மு: அடச்சே.. ஊடலா இருந்தா நாங்க டபாய்க்க மாட்டோமா.. இல்லாமையா ரெண்ட கட்டினோம்.. இது வேற

ஒள: அப்படியா.. சரி மேல சொல்லுங்க..

மு: மொதல்ல இருந்து வரேன்.. செம்பு மன்னனுக்கும் ஒரு டவுட்டு.. கிளியர் பண்ணினா 5 பிகர்ன்னு அறிவிப்பு விட்டான்.. சரி அதை நாம தட்டலாமேன்னு நானும் அங்க போய் டவுட்ட கிளியர் பண்ணினேன்.. ஆனா பரிசை எனக்கு கொடுக்குறதுக்குள்ள....

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. பிளாஸ் பேக்.....

அடுத்த போஸ்ட்'ல

3 comments:

gils said...

aiya..aiya...me d first...so enaku thana puli sadam..butter scotch ice cream ella...aha.pazhanila nikara murugar ungaluku sun bath edukarara...velaiya.inga manichi utrunga..aanalum nakkalo nakkalunga...avvaiyar deva paata copy podura scene semma kaamudi...finalenu solitu ipdi mega serial mathiri izhukareenga...still...nalla iruku...so eagerly looking for other releases :D

G3 said...

aaha.. ammanikku mega serial aarvam thala thooka aarambichuducha? final episode podarennu sollittu ippadi thodarum pottuteengalae.. :) Seri.. adutha releasekku aarvama waiting.. Padam releasekku munnadiyae thiruttu DVDlaan kedaikkara maadiri idhukkum edhaavadhu copies kedaikkumannu konjam sollunga.. :p

Syam said...

கலக்கல் கன்யா சூப்பரப்பு...கேப்பு கிடைச்சா முருகனையே சூப்பு வெச்சு குடிச்சுடுவ போல... :-)

//ஒ ள வ்வையார்ன்னு படிக்கிற புத்திசாலிகளுக்காக.. அது அவ்வையார்//

TOP :-)