கனவொன்று கண்டேன்
அதில் நான் கரையக் கண்டேன்
இப்படி ஒரு கனவென்றால்
எப்படி கண் விழிப்பேன்
கருவறையின் இருட்டில்
சிறிதாய் ஓர் ஒளி கண்டேன்
என் இதயத்தோடு ஒன்றாய்
கூடித் துடிக்கும் இருநாடி கேட்டேன்
வளராத வயிற்றை கூட
மெதுவாய் தடவிப் பார்த்தேன்
கேளாத மழலையில்
அம்மா என்று ஒரு மொழி கேட்டேன்
விடிந்ததும் கலைந்த
என் கனவே
இனி உன்னை சுமக்க
எத்தனை கனவுகள் வேண்டுவேன்
-- கன்யா
4 comments:
அம்மையீர்,
இது தாய்மையின் ஏக்கத்தைச் சொல்லும் கருத்தாக இருப்பினும் அந்தத் தாய்மையின் இலக்கணம் என்ன என்பது தெரிந்து உணர்ந்து கொண்ட எழுத்தாக உங்கள் பதிவுகள் இல்லையே…!
வெறும் கனவுகளும் வீண் கற்பனைகளும் விரக்தியின் விளிம்புகளாக இருக்கின்றன உமது எழுத்துக்களில்...
பிழையின்றி எழுத வேண்டும்; பிழையின்றியும் வாழ வேண்டும். அதுதான் தமிழின் ஓசையாக இருக்க முடியும்; தனிஒரு நபரின் ஆசை தமிழின் ஓசையாக இருக்க முடியாது.
தனி நபரின் உள் வேட்கைக் கருத்துக்களை எல்லாம் கவிதை என்பதாக எண்ணிக் கொண்டு அதை உலகிற்கு காட்டுவது அரைவேக்காட்டுத் தனம்.
தமிழைக் கேவலப்படுத்தும் குணம்.
தமிழுக்கென்று தனிப் பண்புகளும் உயர் ஒழுக்கச் சிந்தனைகளும் உண்டு. அதைப் பின் பற்றி எழுதாமல் புண்பட்ட எண்ணங்களையும் புரையோடிப் போனதன் பிண்ணனியில் எழும் சிந்தனைகளையும் எழுத்தாக்காதீர்கள்.
தமிழ் என்னும் புனித நதியில் சாக்கடைகள் கலக்காமல் இருப்பது கூட நீங்கள் தமிழுக்குச் செய்யும் அரிய தொண்டுதான்.
உங்களுடைய எழுத்தின் வேட்கை என்பது பிறப்பின் மூலம் தந்திருக்கிறது என்பது புரிகிறது.
அதை எட்டி உதைத்து விட்டு எழுதுகிறேன் என்பது அண்ணாந்து கொண்டு எச்சிலை உமிழ்கிற காரியம் என்பதை உணர்க!
இப்படிக்கு,
தமிழ் நலன் விரும்பி
அம்மையீர்,
இது தாய்மையின் ஏக்கத்தைச் சொல்லும் கருத்தாக இருப்பினும் அந்தத் தாய்மையின் இலக்கணம் என்ன என்பது தெரிந்து உணர்ந்து கொண்ட எழுத்தாக உங்கள் பதிவுகள் இல்லையே…!
வெறும் கனவுகளும் வீண் கற்பனைகளும் விரக்தியின் விளிம்புகளாக இருக்கின்றன உமது எழுத்துக்களில்...
பிழையின்றி எழுத வேண்டும்; பிழையின்றியும் வாழ வேண்டும். அதுதான் தமிழின் ஓசையாக இருக்க முடியும்; தனிஒரு நபரின் ஆசை தமிழின் ஓசையாக இருக்க முடியாது.
தனி நபரின் உள் வேட்கைக் கருத்துக்களை எல்லாம் கவிதை என்பதாக எண்ணிக் கொண்டு அதை உலகிற்கு காட்டுவது அரைவேக்காட்டுத் தனம்.
தமிழைக் கேவலப்படுத்தும் குணம்.
தமிழுக்கென்று தனிப் பண்புகளும் உயர் ஒழுக்கச் சிந்தனைகளும் உண்டு. அதைப் பின் பற்றி எழுதாமல் புண்பட்ட எண்ணங்களையும் புரையோடிப் போனதன் பிண்ணனியில் எழும் சிந்தனைகளையும் எழுத்தாக்காதீர்கள்.
தமிழ் என்னும் புனித நதியில் சாக்கடைகள் கலக்காமல் இருப்பது கூட நீங்கள் தமிழுக்குச் செய்யும் அரிய தொண்டுதான்.
உங்களுடைய எழுத்தின் வேட்கை என்பது பிறப்பின் மூலம் தந்திருக்கிறது என்பது புரிகிறது.
அதை எட்டி உதைத்து விட்டு எழுதுகிறேன் என்பது அண்ணாந்து கொண்டு எச்சிலை உமிழ்கிற காரியம் என்பதை உணர்க!
இப்படிக்கு,
தமிழ் நலன் விரும்பி
11:54 PM, March 01, 2012
[url=http://casodex-bicalutamide.webs.com/]cheannach Bicalutamide
[/url] Bikalard
Praxis
Bicamide
[url=http://amoxicilline.webs.com/]acheter Framox
[/url][url=http://acheter-amoxicilline.webs.com/]amoxicilline keelontsteking
[/url] amoxicilline juventus
amoxicilline douleur dentaire
amoxicilline enfant posologie
Post a Comment