Tuesday, February 20, 2007

பச்சைக்கிளி முத்துச்சரம்!!!!

அருவைப் படம் பார்த்து இருக்கேன் .. உதாரணத்துக்கு "விண்ணுக்கும் மண்ணுக்கும்"

மொக்கைப் படம் பார்த்து இருக்கேன் ... உதாரணம் "தாஸ்"

புரியாமையே படம் பார்த்து இருக்கேன்... "பாபா"

எவன் அடிக்கிறான் எதுக்கு அடிக்கிறான்னு தெரியாத அளவுக்கும் அடிதடி உள்ள படமும் பார்த்து இருக்கேன் .. "சுள்ளான்"

புழிஞ்சு தள்ளின படம் பார்த்து இருக்கேன்.. "காதல்".. "வெயில்"

அட கொடுமையே கேப்டன் படம் கூட பார்த்து இருக்கேன்... ஆன இப்படி ஒரு படம் பார்த்தில்லைடா சாமி!!!!!!!!!!

இந்த படத்தைப் பார்த்துட்டு வந்ததே அதிகம்... இதுல இதுக்கு ஒரு விமர்சனம் எழுதனுமான்னு யோசிச்சேன்... இருந்தாலும் இந்த படத்தை ஏற்கனவே பார்த்த பாவப்பட்டவர்களுக்கும்.. இன்னும் பார்க்காம இருக்குற பாக்கியசாளிகளுக்கும் ஒரு பொதுச் சேவையா இந்த விமர்சனம்

***********************************************************************************

பார்த்தார்கள்.. சிரித்தார்கள்.. காபி குடிக்க போனார்கள்.. இதுக்கே என்னோட அக்கவுண்ட்'ல எட்டு லட்சம் இருக்குன்னு ஒரு வெண்ணை வெட்டி ஒப்பிக்கிறான்னா... ஆண்களை இவ்வளவு அசமந்துக்களாக நான் கூட நினைத்தது இல்லை!!!!

மனைவி தன்னைவிட உடல் நலம் சரி இல்லாத தன் மகனோடு அதிக நேரம் செலவு செய்கிறாள்... தன்னோட உடல் உறவு வைத்துக் கொள்ள அவளுக்கும் மனம் இல்லைன்னு நினைத்த நம்ம ஹீரோ.. (இப்படி ஒரு ஹீரோவைத்தான் தமிழ் திரையுலகம் தேடிகிட்டு இருந்துச்சு போல... நான் சித்தப்பாவை சொல்லலைங்க... இந்த கதாப் பாத்திரத்தை சொன்னேன்!!!)

எங்க விட்டேன்... ஹா.. நம்ம ஹீரோ சின்ன சந்து கிடைச்சதும் சங்கீதம் கத்துக்க முடிவு பண்றார்.... (சிந்து பாடத்தான்!!!) சந்துக்கு ரொம்ப அழக ரூட் மேப் போடுகிறார் நம்ம ஜோ.. (அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்... ஆனா மேக்கப்தான் சகிக்கலை!!!!)

பிடிச்சிருக்குன்னு சொன்னா, என் கூட இருக்கனும்ன்னு சொன்னா, யாரும் இல்லாத இடம் எங்காவது போகலாம்ன்னு சொன்னா.. அடங்க இன்னுமா தெரியல அவ உன்னை மொட்டை அடிச்சு ஆண்டி மடத்துக்கு அனுப்ப போறான்னு... அய்யா செய்தி எல்லாம் படிக்கிறது இல்ல போல...

ஒரு வழியா தனியா தள்ளிகிட்டு போய் பேச்சுக் கொடுக்க.. அதுக்குள்ள எங்கிருந்தோ வந்தான் ரேஞ்சுக்கு ஒரு ரிசார்ட் கெஸ்ட் ஹவுஸ்க்கு வில்லன் வருகிறான்.. ரெண்டு பேரோட பர்ஸ்'லயும் வேற குடும்ப போட்டோ இருக்க .. இதை வெச்சு நம்ம ஹீரோவை மிரட்டி, பையன் மருத்துவ செலவிக்கு வெச்சு இருந்த எட்டு லட்சமும் அம்பேல்!!!

ஜாயிண்ட் அக்கவுண்ட்ல இருந்து 8 லட்சம் காலி ஆகியும் இது தெரியாம இருக்குற ஹிரோயினி... (புருஷன் மேல அவ்வளவு நம்பிக்கை பாவம்!!!!) .. ஆண்டிரியா.. அழகுன்னு சொல்றதா.. இல்ல அசடுன்னு சொல்றதா???

எல்லா பணமும் அம்பேல் ஆனதும் வேற வழி இல்லாம மனைவி கிட்ட உண்மையை சொல்ற ஹீரோ... அதுவும் எப்படி...

"பார்த்தேன்.. பேசினேன்.. பழகினேன்... பீச் ரிசார்ட் ரூம் வரை போனேன் ஆனா நான் ஒன்னுமே பண்ணல கல்யாணி என்னை நம்பு!!!!!!!!" அடடா இதுதாண்டா டயலாக்!!!

அம்மணிக்கு கோவம்.. 600 ரூபாய் எடுத்துகிட்டு ஏதோ ஒரு பஸ் ஏறியாச்சு... எங்கயோ பொன அப்பறம் ஒரு போன்...

"நான் தான் கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்னேன் இல்ல... நீ எப்பவாவது வேற எந்த பொண்ணு கூடயாவது இருந்தன்னு தெரிஞ்சா நான் உன்னை விட்டுட்டு ஏதாவது பஸ் ஏறுவேன்னு... ஏறிட்டேன்... திரும்பி வருவேனான்னு தெரியாது.. என்னை தேடாதே!!!"

இதுக்கு நடுவில நம்ம ஹீரோவுக்கும் ஒரு பல்பு எரிய.. உண்மையை கண்டிகிறான்.. அதாகப்பட்டது.. ஜோவும் மிலினும் (நம்ம வில்லன்!!) ஒரு ஜோடி... இப்படிதான் எல்லாருக்கும் மொட்டை அடிக்கிறாங்க...

இது இல்ல கொடுமை... இதுக்கு மேல... 3 நாள் களிச்சு அம்மணி வீட்டுக்கு ரிடர்ன்.. ஏன் தெரியுமா.... 600 ரூபாயிம் காலி... கட்டு கட்டா புருஷனும் பொண்டாட்டியும் செலவு செய்றாங்கப்பா!!!

எல்லாம் பேசி.. ஒரு வழியா முடிச்சாங்கன்னு பாத்தா... அடிச்சு புடிச்சு என் பணத்தோட வரேன்னு சொல்லீட்டு ஒரு துப்பாக்கி ஒரு இஸ்கூல் பேக் இதை எடுத்துகிட்டு நம்ம ஹீரோ அதே பீச் ரிசார்ட் போகிறார்.. அங்க வேற ஒரு அசமந்து!!!

இவர்தான் போனாரே சுட்டோமா நம்ம பணத்தை எடுத்தோமான்னு வேண்டாம்.. ஒரு 15 நிமிஷம் அந்த அசமந்துகிட்ட இந்த அசமந்து பேசுது!! உன்னை நான் இன்னைக்கு காப்பாத்தி இருக்கேன்.. என் காலில் விழுந்து நன்றி சொல்லீட்டு தப்பிச்சுப் போன்னு சொல்லிட்டு.. அந்த லூசு வாசலுக்கு போகும் போது எவனோ போட்டுத் தள்ளிட்டான்.. இதுக்கு எதுக்கு 15 நிமிஷ டயலாக்'ன்னு கேக்காதீங்க!!

எல்லாரையும் ஒரு ரவுண்டு சுட்டுட்டு ஹீரோ பணத்தோட ஹைதிராபாத் எஸ்கேப்... அப்பா படம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சா... மனைவி ஆண்டிரியா மிஸ்ஸிங்... கடத்தினது நம்ம ஜோ... ஆமாங்க அம்மணி சாகல!!!

மம்மி ரிடர்ஸ் ரேஞ்சுக்கும் வில்லியாமா!! சந்திரமுகி பாதிப்பே இன்னும் இறங்கலை போல ... அதுல லகலகலக... இதுல அட்றா அட்றா... இப்படி கத்தினதுக்கு மட்டுமே ஒரு படத்தோட சம்பலம் வாங்கி இருக்கனும்...

கடைசியா ரெண்டாவது முறையாக ஜோவை கொல்கிறார் நம்ம சித்தப்பா... அப்பறம் தனக்கு சேர வேண்டிய 8 லட்சத்தை வட்டியோட எடுத்துகிட்டு.. மிச்சத்தை ஜோவோட ஒன்னுக்கும் ஆகாத அப்பிரசெண்டுகளுக்கு தானம் செய்கிறார்.... ஹீரோவாமாப்ப!!!!

அப்பா முடிஞ்சிடுச்சு!!!!
**********************************************************************************

என்ன கொடுமை சரவணன் இது... எல்லாம் எங்க அம்மாவும் ஜோவும் பண்ணின வேலை.. கௌதம் கிட்ட அப்படி ஒன்னும் பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லைனாலும் இது கொஞ்சம் அதிகம் தான்...

எனக்கு என்ன புரியலைன்னா.. இப்படி சராமாரியா ஒரு மெடிகல் ரெப்பிரசெண்ட்டேடிவ் கொலை செய்தும் போலீஸ் கேஸ் இது எதுவுமே ஒரு வாசனைக்கு கூட படத்துல இல்லை...

அப்பறம்.. மெனக்கெட்டு ஆண்டிரியாவை கடத்திக் கிட்டு போன ஜோ... இப்படி கத்தி கத்தி உயிரை விட்டதுக்கு ... ஆண்டிரியா பொட்டுல துப்பாக்கிய வெச்சு இருந்தா எல்லாமே சத்தம் இல்லாம முடிஞ்சு இருக்குமே... அதை விட்டுட்டு... ஆண்டிரியாவையும் கவனிக்காம சித்தப்பாவையும் அடிக்காம... வெரும் அப்பிரசெண்டுகளை கத்தியே வேலை வாங்கினதை நினைச்சா பாவமா இருக்கு!!!

மொத்ததுல பச்சைக்கிளி பிச்சுப்பிடுங்கும்.. ஹீரோ பணத்தை மட்டும் இல்லை.. என்னோட 360 ரூபாயும் சேர்த்துதான்...

பி.கு: வெளிய வந்ததும் இதை பார்த்ததுக்கு "வீராச்சாமியே" பார்த்து இருக்கலாம்ன்னு நான் கிண்டல் அடிச்சேன்... அதைக் கேட்டு எனக்கு பின்னாடி இருந்த இரு இளைஞர்கள்.. ஆமாண்டா மச்சான்... இந்த படத்தை பார்த்த பாதிப்பு போகனும் நாமா இன்னைக்கு ராத்திரிக்கு தூங்கனும்ன்னா போய் வீராச்சாமி பார்க்கலாம் வா'ன்னு கிளம்பிட்டாங்க...!!!!!!!!!!

13 comments:

gils said...

me d firsta :D :D ROTFL on the caustic commnets..G3 solliyum kooda kekama i wanted to go for the movie..aana ivlo dettttaaaaaaailllla velakinaprum konjam manasu maridichi :D :D intha oorla engayumay tamizh padam ilaye enga poi paahteenga?

Anonymous said...

me secondu!

//எவன் அடிக்கிறான் எதுக்கு அடிக்கிறான்னு தெரியாத அளவுக்கும் அடிதடி உள்ள படமும் பார்த்து இருக்கேன் .. "சுள்ளான்"
//
ROTFL :) kalakkita po! :)

padam ivloo thaana? pppuuu! as gils told no thamizh theatre here.

sila peru intha padatha aaha! ohhoo!nu pugazhnthu irukaaga.

item song koodava illa? :)

G3 said...

Naanum indha kodumaiya anubavhitten :-(

//இதை பார்த்ததுக்கு "வீராச்சாமியே" பார்த்து இருக்கலாம்ன்னு நான் கிண்டல் அடிச்சேன்//

enakku therinju padam paatha ellarum sonna commentu idhu dhaan.. Naanga paathappavae en friend sonnaan.. Idhukku veerasamy poyirundha sirichitaavadhu vandhirukkalaamnu.. adha oppicela sonna andha padatha innorutharum idhey dhaan enga makkalsum sonnaangangaraaru :D

Kanya said...

@gils...

nallathu.. ithukkuthaan menakettu review ezhuthinen... vazhga en sevai!!!

chennai'la paarthen gils sani anga varaikkum follow pannittu vanthu.. ennakku munnadi iNox'la poi seat pottudichu!!!

@ambi...

item number'aaaaaaa padame item padam thaannu only 18 and above allowed.. itha ezhavukku age proof vera kettan en thangaiya...

enga amma nalla velaiya en kadaisi thangaiya kootittu varala.. she is only 9 yrs old.. irundalum.. avalai ithukku kootikittu vanthu irunda.. engalai kattaiyaalaiye adichu iruppa... illa chi thoo'nu thupila moonchiruppa!!!

@G3...

ennakku veerasamy pooga mudiyala.. so pokkiri poonen.. kodutha 40 rooba ticket'ukku rendu kuthu song.. oru item song'aavathu irundhuche!!!!

Syam said...

இப்புடி ஒரு படத்த பொருமையா பாத்து பத்தாததுக்கு அதுக்கு விமர்சனம வேற எழுதி இருக்கயே உன்னோட பொருமைக்கு ஒரு அளவே இல்லயா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)

ambi said...

//padame item padam thaannu only 18 and above allowed.. itha ezhavukku age proof vera kettan en thangaiya...
//

ROTFL :)

Ram said...

'pachikkili muthuccharam' ngratha paathona yetho kannathasan na pathi theen nnu aavala paathaa.....phew...:-p

Hi Kanya - yepdi irukeenga? naa sydney la irukken ..vanthu one month aacchu...romba busy...nammba maatengale... :)

KK said...

Aniyayathukku kathaya ippadi potu udachiteengale... ithu nyayama???

Arunkumar said...

aaha ivalo mosama.. nalla velai idhu theriyaama download ellam panni paakanumnu nenachen.. kaapathittinga.. vaazga ungal sevai :)

Sridhar V said...

நல்லா எழுதியிருக்கீங்க... ஆனா என்னங்க இப்படி கிளைமேக்ஸ், ஸஸ்பென்ஸ் எல்லாத்தையுமா எழுதுவீங்க. எங்காவது 'மீதி வெள்ளித்திரையில் காணுங்கள்' அப்படினு சொல்லுவீங்கன்னு பார்த்தா 'சுபம்' வரவரைக்கும் கதை சொல்றீங்களே... இது தப்பு இல்லையா?

Kanya said...

intha pakkam vantha ellarum thanksgoov...

@ram,

Sydney'la poi aani pudungureengalaaa... angaiyum avlo aaniyaaaaa

@KK,

Ethoo ungalai ellam kaapathalam'nu thaan...

@arunkumar,

En nokkam niraiveriyathil mikka magilchi...

@sridhar,

yaan petra thunbam neenga ellam padanuma?? athu mattum illa... ithula suspense ellam oru ezhavum illa.. padam paarkum poothu paathilaiye guess pannidalam.. avalavu appatama oru direction!!!

Anonymous said...

DERAILEDனு ஒரு ஹாலிவுட் படம். அதை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்திருக்கிறார் இயக்குநர் என்று விகடன் விமர்சனத்தில் எழுதியிருந்தனர். அதில் வில்லன் சாகாமல் திரும்பி வருவான், தமிழில் வில்லி (ஜோ) திரும்பி வருவதாக இருக்கிறது. நான் இன்னும் தமிழ்க்காப்பியை பார்க்கவில்லை. அதைப் பார்க்குமுன் அதன் ஒரிஜினலைப் பார்க்கவேண்டும் என்று பார்த்தேன்.

இதே போல் முன்பொரு தரம் ஒரு படம் வந்தது. SERENDIPITY என்ற ஆங்கிலப்படம் தமிழில் ஜேஜே என்று வந்தது.

Anonymous said...

kanya 2222222 late na unaku munadiye parthiten ena panrathu ena koduma saar ithunu. thukam thaan pada mudinchudhu. goutham menon padam aachey, nambikaiya parkalamnu pona, sothapittan. adei goutham thayavu seidhu, enime epdi engala sodhikadhanu solla matum thaan mudichuthu. ena panrathu, 7 1/2 sani summa vidathu pola irukey