வானம் அந்த வானம்
மஞ்சள் பூசும் நேரம்
இதமாய் ஒரு கானம்
என் காதோடுதான் கேட்கும்
மேகம் வென் மேகம்
மெதுவாய் தவழும் காலம்
சில்லென்று சில தூரல்
என் தேகம் உரசிப் போகும்
உன் பேயரே கானமாய்
உன் வாசமே தூரலாய்
என்னைத் தொடும் போதெல்லாம்
நானாக நான் இல்லை
என் நிழல்கூட எனதில்லை
என் அருகில் நீ இருக்க
உன் அணைப்பில் நான் தவிக்க
மார்போடு முகம் புதைத்தேன்
எனக்குள் துடிக்கும்
உன் இதயத்தில் சுகம் வேண்டி
போதுமென்று நான் சிணுங்க
வேண்டுமென்று நீ சீண்ட
இதழோரம் தேங்கிய
சில பணித்துளிகளில்
நனைந்தது நான் மட்டுமல்ல
உன் தோளோடு எனைச் சேர்த்து
பரிவோடென் உச்சி முகர்ந்து
ஆதரவாய் எனை அனைத்து
நம் சுவாசம் ஒன்றாய் கலந்து
உறையும் இந்த இரவுகளில்
தொடரும் நம் நெருக்கம்
இன்று போல் என்றும் வாழ்
இன்னும் வேண்டும்
பல கோடி பௌர்னமிகள்
உன்னோடு மட்டும்
9 comments:
wow romba superb nalla kavidhai di but engayo ketta madhiri oru feeling
Kavithai Super..... Samayathula kalakarenga... Sila neram payapaduthureenga.. ungalai purinthu kollave mudiyailnga kanya... any way.... unarvukalai sirappaaa pirathipalikkirathu ungal kavithai.... congrats....
//
இன்னும் வேண்டும்
பல கோடி பௌர்னமிகள்
உன்னோடு மட்டும்
//
என்னோடயா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
உன் தோளோடு எனைச் சேர்த்து
பரிவோடென் உச்சி முகர்ந்து
ஆதரவாய் எனை அனைத்து
நம் சுவாசம் ஒன்றாய் கலந்து
உறையும் இந்த இரவுகளில்
தொடரும் நம் நெருக்கம்
//
பெரிய காதல் விஞ்ஞானிதானுங்க நீங்க!!
ஒரு அழகான பாடலை போன்று அமைதியாய் இருக்கிறது. இரசித்தேன் :)
I know why Kanya wrote this
VASU VASU VASU VASU
திரைப்படத்தில் இந்த பாடல் வருவதற்குண்டான முயற்சியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். நல்ல இசையமைப்பாளர் கிடைத்தால் இந்த பாடல் உலகம் முழுவதும் பிரபலமடைய வாய்ப்புள்ளது.
இந்தப் பாடலை படித்தவுடன் "ஜிஞ்சினுக்கா ஜிஞ்சினுக்கா ஜினுக்குத்தான் உன் ஜீன்ஸ் பாண்ட மேல வந்தா குமுக்குத்தான்" என்ற வரிகள் மனதில் தோன்றி மறைகின்றன. அந்த பாடலின் பாதிப்புத்தான் இந்தக் கவிதையோ?
Post a Comment