உன் கண்களில்
என்னை மறந்தேன்
உன் மொழிகளில்
நான் சிவந்தேன்
உன் மௌனங்களில்
உயிர் கரைந்தேன்
உன் பிரிவில்
முழுதாய் மடிந்தேன்
உன்னை தெரியுமென
கர்வம் என்னக்கு
இன்று உன்னை தெரியாமல்
தொலைத்த தவிப்பு எனக்கு
உன் நினைவுகளை
நான் தேடும் நொடிகள் அனைத்தும்
உன் வாழ்வில்
சுகம் பல சேர்க்க வரம் வேண்டி
என் பிரார்த்தனைகள்!!
3 comments:
Hi cute kavithai emotionalana privai pathi.......like this
உன் மௌனங்களில்
உயிர் கரைந்தேன்
உன் பிரிவில்
முழுதாய் மடிந்தேன்
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Thalaipa Sariya Podunga unakaga
Post a Comment