தனிமை
விரையமாகும் போதும்
வளர்ந்து கொண்டே போகும்
வேண்டாத செல்வம்
போர்
காதலில் மயங்கும்
இதயம் - அதை
சொல்லத் தயங்கும்
உதடுகள்
முதிற் கன்னி
கனவுகளை கருவாக்கி
கண்களில் சுமந்து வரும்
நித்திய கற்பினி
மரணம்
முடியாத இரவுகளில்
கலையாத நித்திரை
பிறப்பு
முண்ணுறு திங்கள்
தேயாது வளரும்
முழு நிலவு
5 comments:
mudirkanni poem nachhu...welgum back to bloggin :))
very nice hiku kavithai. i like this.
அருமையான பதிவு!
வளர்க எம் நிலமகளின்
தமிழ் ஆளுமை!!
விழுந்த வலி
தீருவதற்குள் துரத்தும் காற்று
பாவம் இலை.
இதையே எழுத்தாளர் சுஜாதா ஹைக்கூ அல்ல என்று கூறியுள்ளார்.
உங்கள் கவிதைகள் ஹைக்கூ அல்ல. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தவறான ஹைக்கூவின் அர்தத்திற்குள் சிக்கிக் கொண்டுவிட்டால் அதிலிருந்து மீளுவது மிகக் கடினம் என்பதால் இதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
விழுந்த வலி
தீருவதற்குள் துரத்தும் காற்று
பாவம் இலை.
இதையே எழுத்தாளர் சுஜாதா ஹைக்கூ அல்ல என்று கூறியுள்ளார்.
உங்கள் கவிதைகள் ஹைக்கூ அல்ல. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தவறான ஹைக்கூவின் அர்தத்திற்குள் சிக்கிக் கொண்டுவிட்டால் அதிலிருந்து மீளுவது மிகக் கடினம் என்பதால் இதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
Post a Comment