Thursday, August 24, 2006

சிரிவிளையாடல் - 1

இடம்: சிவலோகம்
பார்ட்டிங்க: நாரதர்... சிவபெருமான்.. பிள்ளையார்... முருகன்... பார்வதியம்மா
சீன்: இப்பவே சீன் போட்ட அப்பறம் என்னதுக்கு மேல படிக்கிறது... சோ.. படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க....


************************************************************************************

நாரதர் (நா): "ஞானப் பழத்தைப் பிழிந்து...."

ஆடியன்ஸ்: "அய்யா நாரதரே.... நிறுத்தும்மையா உம் சகுநி வேலையை... இதை நாங்க நடிகர் திலகம் சிவாஜி அய்யாவோட திருவிளையாடல்-1'லயே பார்த்தாச்சு... புதுசா ஏதாவது சொல்லுங்க..."

நா: "அப்படியா அப்போ இது புதுசு கண்ணா புதுசு.... சிங்காரி சரக்கு நல்ல சரக்கு.. சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு..."

சிவபெருமான் (சி): "என்ன நாரதா, புதுசா இம்போர்டட் சரக்கா... ? இந்த ஆட்டம் ஆடுறே"

நா: "அட நீங்க வேற... இம்போர்டட் எல்லாம் நமக்கு சரி வராது... சும்மா எறும்பு கடிச்சாக் கூட இன்னும் அதிகம் கிக்கு இருக்கும்... இது நம்ம பேக்யார்டுல சிங்குடிங்க ரம்பா, ஜோதிகா, சிம்ரன்... சே சே... ஊர்வசி, மேனகை எல்லாம் சேர்ந்து காய்ச்சின லொகல்ஸ்... :D"

சி: "ஆஹா... நாரதா உனக்கு விவஸ்தையே இல்லைய்யா... இதை எல்லாம் கமுக்கமா எனக்கு தள்ளுவியா அதை விட்டுட்டு பசங்க இருக்குற நேரத்துல கொண்டு வந்து இருக்கியே..."

நா: "ஓஹோ .. ஜூனியர்ஸும் இப்போ போட்டிக்கு வந்துட்டாங்களா? அடடா... இது தெரிஞ்சு இருந்தா காச்சும் போதே எஃஸ்டிராவா காச்ச சொல்லி இருப்பேனே... இப்போ புதுசா காச்சினா இந்த பக்குவம் வராதே...."

பிள்ளையார் (பி): "நைனா... என்ன இது... என்னை விட்டுட்டு நாரதர் மாமா கூட ஏதோ பிளான் போடுற மாதிரி தெரியுதே..."

சி: "சே சே.. உன்னை விட்டுட்டா... இல்லப்பா... ஆனா சத்தம் இல்லாம சைலெண்டா வா... சின்னவனுக்குத் தெரிஞ்சா அவ்ளோதான்..."

முருகன் (மு): "நைனா... உமக்கு கோட்டருக்கும் சரியான மிக்சிங் சொல்லிக் கொடுத்தவனே நான் தான் ... என்கிட்டயேவா..."

நா: "அண்ணா... இருங்கண்ணா... இது இப்படி அடிக்கிற அயிட்டமா இருந்து இருந்தா நானே 4 கிளாஸ் எடுத்துட்டு வந்து இருக்க மாட்டேனா... இது சிங்கிள் மேன் சரக்கு... "

சி: "ஆரம்பிச்சுட்டான்யா... போச்சு... இனி இந்த சரக்கு உனக்கும் இல்லாம எனக்கும் இல்லாம எல்லாரும் மறந்துட்டு அண்டர்வேரோட ஆண்டியா நிக்கப்போகும் ஒருத்தன சமாதானம் பண்ண போகனும்.... அலையவிட உமக்கு வேற நேரமே இல்லையா??.. இதுல.. இது நம்ம பத்தினிக்குத் தெரிஞ்சா நான் வேஸ்டா தாண்டவம் ஆட வேண்டியது வரும்...!!!"

மு: "ஓஹோ.. என்னைப் பத்தி இப்படி ஒரு பில்டப் இருக்கா... சரி சரி... உங்க கூட இருக்குறதைவிட ஆண்டியா எனக்குன்னு சொந்தமா ஒரு சரக்கு ஸ்டோரேஜ் வெச்சு குஜாலா இருந்துக்குவேன்.... குட் பை...."

நா: "அய்யோ... முருகா.. என்ன இது... இந்த மாதிரி ஒரு சின்ன விஷயத்துக்கு இப்படி மொரிச்சுக்கலாமா.... வேணா ராசா..."

பி: "தம்பி... சரி விடு... ஆப்டரால் இது வெரும் சரக்கு... நீயே அடி... நான் வேணும்னா வெரும் வேர்க்கடலை தின்னுக்குறேன்... நில்லுடா... தம்பி..>"

பார்வதி (பா): "என்ன நடக்குது இங்கே... முருகா... எங்கே போற... நில்"

மு: "அம்மா... நீங்க எல்லாரும்தான் நில்லு நில்லுன்னு சொல்றீங்க... அப்பாவ பாரு... மூணு கண்ணும் சரக்கு மேலேதான் இருக்கு... இது இனி சரக்கப்பத்தி இல்லை... என் மேல எவ்வளவு அக்கறைன்னு இது காட்டலையா... நான் போரேன்...''

************************************************************************************

இடம்: பழமுதிர்ச்சோலை; சரக்கு காய்ச்சும் கிடங்கு
பார்ட்டீஸ்: முருகன் ... பார்வதியம்மா


பா: "முருகா... என்ன இது... எல்லாத்துக்கும் நான் உன் பின்னாடி வந்து வந்து கதை சொல்ல முடியுமா... நீ என்ன சின்ன பையனா... ஒன்னுக்கு ரெண்டு பிகர கணக்குப் பண்ணி இருக்கே... உங்க அப்பனுக்கே அந்த தைரியம் இல்லாமத்தான் ஒருத்திய ஒளிச்சு வெச்சு இருக்கார்..."

மு: '' அம்மா.. சும்மா அப்பாவ பத்தி கதகதையா சொல்லி என்னை சமாதானம் பண்ணலாம்மு நினைக்காதீங்க... இப்போ எனக்கே தனியா விளையாட்டு எல்லாம் தெரியும்.... சோ அவர் ஆடின விளையாட்டை வாய திறந்துகிட்டு கேட்கிற வயசு இல்ல எனக்கு சொல்லீட்டேன்"

பா: "தெரியும் கண்ணா... எனக்கு அது எல்லாம் போர் அடிச்சுப் போச்சு... பிளாஷ் பேக் சொல்லி சொல்லி ஒரே போர்.... ஆனா எனக்கு எப்பவும் போர் அடிக்காத ஒரு மேட்டர் என்ன தெரியுமா...?"

மு: "என்னதும்மா??"

பா: ''நம்ம செம்பு மன்னன் தான்... எதுக்கெடுத்தாலும் சந்தேகம்... இவன் சந்தேகத்த தீக்குறதுக்கே ஜனங்க தனியா ஒரு வரி கட்டுறாங்கன்னா பாரேன்..."

மு: ''ஹிஹி... அப்படியா... ??"

பா: "என்ன அப்படியாங்குறே... நான் போர் அடிக்கும் போது எல்லாம் லைவ் ஷோவே பாப்பேன்...!! அவ்ளோ ஏன்... இப்போ கூட ஒரு ஷோ இருக்கு... லைவ்... பார்க்கலாம் வா."

மு: "ஓ பார்க்கலாமே... யார் அங்கே ... நான் யூஸ்'ல இருந்து வாங்கிட்டு வந்த மூணு ரிக்லைனர்'ல இருந்து ரெண்ட இங்க போடுங்கப்பா... பிளஸ்... பெப்சி அண்ட் லேஸ் சிப்ஸ்.."

பா: "அது என்னடா...மூணு ரிக்லைனர்...??"

மு: "எத்தனை நாளைக்குத்தான் மயில் மேலையே உக்காந்து இருக்க... பிளஸ் ஒன்னு மட்டும் வாங்கினா ரெண்டு பேரும் மடியிலதான் உட்கார்வாங்க... அதுவும் இப்போ ஒருத்தியும் ஜிம் போறது இல்ல... எதுக்கு ரிஸ்க்கு... அதான் எல்லாருக்கும் தனியா வாங்கிட்டேன்..."

பா: "அறிவுடா உனக்கு... உங்க அப்பன் டப்சா கண்ணுல இருந்து வந்து இருந்தாலும்... எப்படி உனக்கு இவ்ளோ அறிவு..?"

மு: "எல்லாம் கார்த்திகை பெண்கள் கொடுத்ததும்மா..."

பா: "இருக்கும் இருக்கும்!! சரி செம்பு என்ன சீன் போடப் போறான்னு பாக்கலாம் வா"

***********************************************************************************

to be continued............................ :D

9 comments:

Syam said...

செம காமடி...total ROTFL....

//அதுவும் இப்போ ஒருத்தியும் ஜிம் போறது இல்ல... எதுக்கு ரிஸ்க்கு//

சிரிப்ப அடக்கவே முடியல :-)

Syam said...

நான் தான் பர்ஸ்ட்...சோ எனக்கு அந்த ரம்பா காச்சுன சரக்குல ஒரு கோட்டர் குடுத்துடனும் :-)

ambi said...

yappaa! ROTFL. kalaang kaathala ipdi sirikka vechuputeengale! pakathu seatu rasagulla ethuku siricha? ethuku siricha?nu kettu torture pannituchu! sonna namba matenguthu, translate panni sollu!nu vers torture.

syamuke kudunga, naan ithellam kannala kooda pathathu kidayaathu! :)

Ram said...

innum padikkala...naalaikku thaan padikkanum :(

Unknown said...

hey that was great kanya
siricchu siricchu vayitthula vali...
kudos to ur language and creativity,,,
write some more comedies like that. who knows? here may be a day when these would take the form of a book and would sell like hot cakes????

gils said...

ada aniyayathuku kalaasaareenga...chn tamizh summa pooondhu vilaaduthu..

Kanya said...

@syamanna... thankQ... ethoo comedy try panninen... pidichu irunda sarithaan

@ambi... thanks again.. aana yoov... thanni adikka maaten... tham adikka maaten.. pure veg... aana paakurathu kekkurathu ellam punjab kuthure, pakkathu seat rasagulla... sembu paandiyan figures!!! ennavo pooppa oru maargamathaan suthureenga

@ram: vandar sonnar sendrar... ennappa pooneenga??

@K: thanks ma K.. athu enna verum K.. pera poota kuranju poidumo...

@Gils: vaanga raasa... eppadi ethoo unga alavukku alambalainalum oru range'a alambuvom illa!!!

Thanks everyone

gils said...

hey jus curious...u neednot even answer this...unga profile..unga friends community ellam oray "G" gumbala iruku..but u have not mentioned tt u knw telugu...athuvum madras tamizhla oodu katreenga...anyway...its a thorough njoyment

KK said...

Super!!! Sivan family total damage...yappa oru vazhiya oru part padichuten...seekiram aduthatha padikanum.... niraya homework kodukureenga :)