Sunday, August 20, 2006

கதை சொல்ல வந்தேன்!!!

வணக்கம் நண்பர்களே,

என்னடா தமிழ் இப்படி கொட்டுது?? பத்தாததுக்கு ஒரே செண்டி செண்டியா பொழியற'ன்னு என்னோட கிலோஸ் பிரண்ட்ஸ் மட்டும் இல்லாம எனக்கு கமெண்ட்ஸ் போஸ்ட் பண்ணின முகம் தெரியாத நண்பர்களும் ஒரே கேள்வி எழுப்ப... அடடா இதே ரேன்ஞ்ல போன நம்ம பிளாக்குக்கு முகாரின்னு பேர் வைக்க வேண்டியது வந்துடுமோன்னு ஒரு பீதி... :)

அதுனால இன்னைக்கு கொஞ்சம் லேச இருக்கட்டுமேன்னு ஒரு கதை... எனக்கு காமெடி எல்லாம் நடைமுறை போச்சுல தான் வரும்... எழுத ஆரம்பிச்ச கொஞ்சம் சீரியஸ் டாபிக்ஸ் தான் எழுதி இருக்கேன்...

என்னோட பழைய போஸ்ட் ஒன்னு.. உங்களோடு பகிர்ந்து கொள்ள... என்னக்கு கதை எழுத வருதான்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா.....

**********************************************************************************

நிறைவு

"ஏண்டி உனக்கு என்ன பைத்தியமா? இந்த சமுதாயம் என்ன சொல்லும்னு கொஞ்சமாவது யோசிச்சியா? இது நடந்தா வெளிய தலை நிமிர்ந்து நடக்கத்தான் முடியுமா??"

"அம்மா... என்னால என் வாழ்க்கையைப் பத்திதான் யோசிக்க முடியும், யோசிக்கனும். சமுதாயத்தப் பத்தி நான் ஏன் கவலைப்படனும்? என்னைப் பெத்தவங்க நீங்க, உங்களுக்கு மரியாதைக் கொடுக்க வேண்டியது என்னோட கடமை. அதான் உங்க கூட இதை பகிர்ந்துக்குறேன். உங்களோட ஆதரவு இல்லைனாலும் பரவா இல்லை... ஆசீர்வாதம் இருந்தா போதும்.."

"அப்போ எங்க அனுமதிகூட வேண்டாம் அப்படித்தானே"

"எதுவும் யாருடைய அனுமதி கேட்டு நடக்குறது இல்லம்மா. பிறப்பு, இறப்பு இதுக்கெல்லாம் அனுமதியா... அப்புறம் கடவுள் எதற்கு?"

"ஓஹோ வேதந்தம் பேசுறியா?"

"அம்மா... நான் இங்க வாதம் பண்ண வரல. என் முடிவு இதுதான்..."

"முடிவே பண்ணியாச்சா? அப்பறம் நாங்க என்ன சொல்ல? என்னங்க கேட்டீங்களா?"

"சரி கொஞ்சம் அமைதியா இரு கௌசல்யா. ஏம்மா லதா, இதுதான் உன்னுடைய முடிவா? நல்லா யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்தியா?"

"ஏம்ப்பா தப்பா.... ?"

"தப்பா சரியான்னு நீதாம்மா யோசிக்கனும். இந்த முடிவுனால நாளைக்கு உனக்கோ உனக்கு பிறக்கப் போகும் குழந்தைகோ என்ன கஷ்டங்கள் வரும், அதை எப்படி ஃபேஸ் பண்ணப் போற, இதை எல்லாம் யோசிச்சியா?"

"அப்பா... உங்க ஆசீர்வாதம் இருக்குற வரைக்கும் எனக்கு எந்த குறையும் வராதுப்பா"

"ஹம் சரிமா. உன் முடிவு இதுதான்னா என்னுடைய ஆசீர்வாதம், ஆதரவு எல்லாம் உண்டு. கோ அஹெட்"

"அம்மா??"

"லதா எனக்கு உன் சந்தோஷம் உன் நிம்மதி இதுதான் முக்கியம். அதுக்காக நீ என்ன செய்தாலும் ஒரு தாயா என் ஆதரவு என்னைக்கும் உனக்கு உண்டு."

"தேங்ஸ்ம்மா தேங்ஸ்ப்பா. உங்களுக்கு மகளா பிறந்ததுக்கு சந்தோஷப் படுறேன், பெருமையும் கூட. எல்லாப் பெண்களுக்கும் இப்படி அப்பா அம்மா இருந்தா எந்த பொண்ணும் தன் விதியை நினைத்து காலம் முழுக்க கண்ணை கசக்கிக்கிட்டு இருக்க மாட்டா."

===

எல்லாப் பொண்ணுங்களையும் போலதான் லதாவும். படிப்புல இவதான் முதல். ஆட்டம் பாட்டு விளையாட்டு எல்லாத்துலையும். காலேஜ்'லயும் அப்படித்தான். எல்லாம் நாங்க செய்த தப்பு, குமாருக்கு அவளைக் கல்யாணம் பண்ணிவெச்சது.

குமார்... நல்லவன்தான் ஆனா கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகியும் குழந்தை இல்லைன்னு அவங்க அம்மா இவளை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனாங்க. குமாரும் செக்கப்புக்கு போனான். ரெண்டு பேருக்கும் குறை இல்லைன்னு டெஸ்ட்டு சொன்னாலும் குழந்தை பிறக்கலைனதும் குமாரோட அம்மாவோட பேச்சு எல்லாம் வேற மாதிரிப் போச்சு.

பொருத்துகிட்டுதான் இருந்தா லதா ஆனா கடைசி வரை பேச்சு குறைந்தபாடு இல்லை. அது மட்டும் இல்ல குமாருக்கு வேற கல்யாணம் பண்றதாக் கூட பேசி இருக்காங்க. அதுக்கு குமாரும் எதிர்ப்பு தெரிவிக்காததுனால விவாகரத்துக்கு ஒத்துகிட்டு பிரிஞ்சு வந்துட்டா.

அப்படிப் பிரிஞ்ச அப்பறம் கூட தனியாதான் தங்கி இருக்கா. வேலைக்கு போறா. பெரிய வேலை, கை நிறைய சம்பளம். விவாகரத்து ஆகிடுச்சுன்னு ஒரு நாள் அவ அழுது பாத்தது இல்லை. வேற கல்யாணத்துல அவளுக்கு ஈடுபாடும் இல்லை. மீறி கேட்டா, 'ஏன் ஆண் துணை இல்லாம வாழ முடியாதா?'ன்னு கேக்குறா. முடியாதுன்னு வாதாடினா, 'ஹூம், உன் மாப்பிள்ளையும் ஆம்பளைதான், அவன் என்ன என்னை வெச்சு காப்பாத்தி கிழிச்சுட்டான்... இனி புதுசா ஒருத்தன் வந்து கிழிக்க?'ன்னு கேக்குறா.

ஆனா இப்போ என்ன தோனுச்சோ தெரியல இந்த முடிவுக்கு வந்துட்டா...

===

"டாக்டர்.. இது என் அம்மா. அம்மா, இவங்கதான் டாக்டர் சந்திரா"

"வணக்கம்மா..."

"வணக்கம் டாக்டர். டாக்டர்... இவளோட இந்த முடிவுனால... இவளுக்கு...?''

"கவலைப்படாதீங்கம்மா. இது ஒரு மெடிகல் அட்வான்ஸ்மெண்ட் அவ்ளோதான். வேற எந்த பிரச்சனையும் இதுல இருக்காது. இன்பேக்ட் அந்த பார்டி யாருன்னு இவங்களுக்கோ இல்லை இவங்களைப் பத்தி அவங்களுக்கோ தெரியவே தெரியாது"

"டாக்டர்... இதைப் பத்தி நீங்க அம்மா கிட்ட விவரமா பேசுங்க. நான் செக்கப் எல்லாம் பண்ணிட்டு வரேன்"

"ஓகே லதா... ஆல் த பெஸ்ட்"

===

"லதா செக்கப் எல்லாம் முடிஞ்சுடிச்சு. கங்கிராஜுலேஷன்ஸ் யூ ஆர் வெரி ஹெல்தி அண்ட் பிட் பார் த பிராசஸ்"

"ரொம்ப சந்தோஷம் டாக்டர்... எப்போ ஆரம்பிக்கலாம்?"

"நீங்க எப்போ இதுக்கு ரெடியோ, அன்னைக்கே"

"ஓகே டாக்டர்... வர சனிக்கிழமை வரேன்"

"குட் இனஃப்"

"வரேன் டாக்டர்"

"ஓகே சியூ தென்"

===

விவாகரத்து வாங்கி ரெண்டு வருஷம் ஆகுது. குமாருக்கும் அவன் அத்தை பொண்ணு கமலாவுக்கு அப்போவே கல்யாணம் ஆனதா கேள்வி. இன்னும் அவங்களுக்கும் குழந்தை இல்லையாம்.

"எல்லாம் செஞ்ச பாவம். அதான் வயத்துல ஒரு பூச்சி புளு தங்க மாட்டேங்குது. இந்த தருத்திரத்தைத் தேடிப் பிடிச்சு என் மகனுக்குக் கட்டி வெச்சு அவன் வாழ்க்கையையும் கெடுத்துட்டேனே"

அத்தை பேசியது இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

"அம்மா...
உனக்காய்...
உன் நினைவில் கருவாய்...
நான் வாழ்ந்த வாழ்க்கை போதும்..

உன் பூங்கரங்களில்
என்னை அள்ளி நீ கொஞ்ச...
பூரிப்பில் நீ விடும் கண்ணீர்
தரை தொடும் சப்தம்
அதைக் கேட்டுத் தூங்க ஆசையாய்
உன் மகள் வளர்கிறேன்"

என்றோ டைரியில் எழுதியது... இன்று புரட்டிப் பாக்கத் தோன்றியது...

பெண்மையின் முழுமையை உணர்வதில் எந்த பெண்ணுக்குத்தான் கனவுகள் இருக்காது. கண்களைத் திறந்து கொண்டே கனவுகாணத் தொடங்கினேன்.

===

"ஹேய் உங்க அப்பா யாருடா?"

"என்ன அப்பா பேர் தெரியாதா? ஏன் உங்க அம்மா சொல்லவே இல்லையா...?"

"அப்பன் பேர் தெரியாதவனா நீ... ஹஹஹஹ?"

"அம்மா.... அம்மா... எல்லாரும் என் கிட்ட அப்பா யாருன்னு கேக்குறாங்கம்மா... யாரும்மா என் அப்பா? யாரும்மா??"

திடுக்கிட்டுக் கண் திறந்தேன். எதிரில் அப்பா.

"என்னம்மா. உன் மகன் அப்பா யாருன்னு கேக்குறானா. என்ன சொன்ன? நிஜமாவே கேட்டா என்ன சொல்லுவே?"

அமைதியாய் நின்றேன். என்ன சொல்லுவது என்று திணறல் இல்லை. எப்படிச் சொல்லுவது என்ற தேடல்.

"அப்பா... இப்படி ஒரு குழந்தையைப் பெற்று எடுக்குற தைரியம் இப்போ எனக்கு இருக்குன்னா- இதை அவன் கேட்கும் போது சொல்லவும் எனக்கு தைரியம் இருக்கும். எனக்குப் பிறந்த அவனால இதைக் கேட்கவும் புரிஞ்சுக்கவும் தைரியம் இருக்கும். எதுக்காகப்பா நான் பயப்படனும்?"

கண்கள் கலங்கியது அப்பாவிற்கு

===

இன்று சனிக்கிழமை.... கருவுற்றேன்.

எத்தனையோ நாட்கள் அந்த நிலாவைப் பார்த்தது உண்டு. ஆனால் இன்று முதல் முறையாய் அந்தப் பௌர்னமி நிலவைப் பார்த்த போது... போடி! நானும் நிறைந்துள்ளேன் என்று சொல்லத் தோன்றியது.

இதைக் குமாருடன் இருக்கும் போதே செய்து இருக்கலாமே என்று உலகம் பேசியது...

இப்படி வாய்ப்புகள் இருந்தும், குறை இல்லை என்று தெரிந்தும், மறுமணம் செய்ய தடை சொல்லாத ஒரு சுயநலம் பிடித்த படித்த முட்டாளுக்காக... நான் உடல் கொடுத்த என் கருவிற்கு அவன் உயிர் கொடுத்து அதை நான் சுமந்திருந்தாலும் ஒரு நாள் அதில் சந்தேகம், ஒரு கசப்பு பிறக்கும்...

ஆனால் இன்று... என் குழந்தை.. எனக்கே எனக்காய்.... சந்தேகம் இன்றி...

பிறந்தான் பரத்....

இரண்டு வருடங்கள் ஓடின. அவனுக்கு கூட விளையாட தங்கை வேண்டுமாம். தத்தெடுத்தேன் பாரதியை.

ஆஸ்திக்கொன்று... ஆசைகொன்று!!

***********************************************************************************

ஹிஹிஹி... இதுவும் ஹெவி மேட்டர்தான்.... ஆனா கதை!!!

கொஞ்சம் காமெடியா எழுத ஒரு டொபிக் சஜஸ்ட் பண்ணுங்களேன்....

11 comments:

Prasanna Parameswaran said...

kadhai nalla irukku! aana sadakkunu oru break pottu vandiya niruthhittu adhukkapuram vandiya start pannama vitta maadhiri paadhiliye kadha ninnu pona maadhiri oru effect :) மேலும் எழுதுங்கள்! :)

Syam said...

கொஞ்சம் இல்ல ரொம்பவே ஹெவி....

//கொஞ்சம் காமெடியா எழுத ஒரு டாபிக் சஜஸ்ட் பண்ணுங்களேன் //

இருந்தா நாங்களே போட்டுர மாட்டோமா...அது இல்லாம தான் ஒரு மாசம் கடைய பூட்டி வெச்சு இருந்தேன் :-)

ambi said...

ரொம்பவே ஹெவி தான்! என்ன ஜில்லு,காமடிக்கா பஞ்சம்? உங்க ஆபிஸ்ல பல்பு வாங்கி இருபீங்களே? அத போட வேண்டியது தானே? :)

@syam, but puliyotharai mattum correctta vassol pannidu! intha veetla chicken 65 vera! :)

தி. ரா. ச.(T.R.C.) said...

rathunnu vanthachhu. ithule kavithai enna kathai enna summa kalakkunka.kathayum nalla thaan irukku.nativule konjam cmmedy sertha innum nalla irukkum.

Kanya said...

@indianangel...

break adichaathaanga pickup panna swarasyama irukkum.. :d

kathaiya paathila vittuta maathiri irukkunnu ethai solreenga?? ithukku mela bharat and bharathi valara maathiri naan kathai ezhuthina apparam naama oru mega serial aalunga ennai azhavekkira maathiri turning points vei'nu nochuvaanga :P

@Syam: Enna syamanna ithuve heavy'a ithukku munnadi sumangali'nu oru kathai naan yahoo groups'la post panni irunden... antha softcopy'a miss panniten ippo antha website archive pannitaanga... athai padicha ennai oru rangukku muthirai kuthiduveenga :P

@ambi: lolluthaane... naan office'la ellam bulb vaangura aal ileenga... venum'na appappo koduthu irukken.. aana athai ellam inge poota paavam ennoda seniors romba feel pannuvaanga... (executive manager ulpada :P)apparam disclaimer'nu oru poi vera ange poodanum... thevaiyaa.... !!

@ T.R C: sir... kandippa oru muzhu neela comedy seekiram post panren... aana comedy'la logic ellam ethir paaka koodaathu solliten.. :P

innoru exclusive songs post podalam'nu irukken... pazhaiya padal rasigar ellam unga knowledge'a share pannunga... ennada pazhaiya padal thaanannu kekkatheenga... puthusum undu.. ;)

kanyabp@gmail.com

ambi said...

summa ezhuthi paarunga! enna nadakuthu?nu pathuduvoom oru kai..
he hee, adi vizhuntha ungalukku thaane vizhum..? :D

Deekshanya said...

good job!

Ram said...

Soopper.!!!

//தத்தெடுத்தேன் பாரதியை//

Bharathi yaa??? :) ok..ok...

gils said...

ahaha.ithu litea....lighta heart valikaramathriye en ezhuthareenga...u got gud flow...but there is an apparently inherent sogam in ur words...unga blog paatha vaazhvey mayam padam thaan nayabgam varuthu

Kanya said...

Thanks everyone..

@gils.. vazhve mayam'a... naan kamal fan.. AC.. refrigerator.. antarticave naan thaan... so i don't mind...!! :D

@ram and deekshanya: danks baa

@ambi: thooda ennakku uthai vizhum ippadi oru nappasaiya... adikanum'na adichuthaan paakurathu!!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.