Wednesday, August 16, 2006

புதுக் காதல்!!

அழகினை கடன் வாங்கி
இளமையில் விதைத்து வைத்தேன்
காலமென்னும் கண்ணாடி
முதுமையின் கோடுகள் காட்டுதம்மா

உடல் என்னும் பொய் நம்பி
வண்ண ஆடைகள் நெய்து வைத்தேன்
நிழல் என்னும் நிஜம் தொடர
கண்ட கனவுகள் கருத்ததம்மா

விழி என்னும் வாசல் வழி
அவர் வரவென்னும் தேடல் கொண்டேன்
வழி மாறி போனார் என்று
மண விருந்துண்டோர் சொன்னாரம்மா

உயிரென்றும் ஊனென்றும்
நம் உறவினைக் கண்டு வந்தேன்
வெறும் உடல் என்று எனைப் பிரித்தார்
என் பெண்மை சிறுத்ததம்மா

கலையாத நித்திரையாம்
நான் கொண்ட காதலுக்கு,
இனி புதுக் காதல் சொல்லிடுவேன்
தித்திக்கும் தேன் தமிழில்

தமிழ்மீது நான் கொண்டேன்
தனியாத ஒரு மோகம்
கவிபாடி தேடிடுவேன்
கலப்பியலின் புது இலக்கணம்

-கன்யா

20 comments:

Syam said...

யப்பா எங்க புளியோதரைய மிஸ் பன்னிடுவனோனு பயந்துட்டே வந்தேன்..இப்பல்லாம் அதுக்கும் இட ஒதுக்கீடு குடுக்கனும் போல...:-)

என்னா சொல்ல வரீங்க...லவ் பன்ன போறீங்களா :-)

Ram said...

//கலப்பியலின் புது இலக்கணம்//

u rock.!

oru question:

காதல் - கலப்பியலா? - விளக்கவும்.!

Kanya said...

என்ன ஷாமண்ணா... நான் என்ன பிரோகிதரா?? என்கிட்ட புளியோதரை கேக்குறீங்க... ஏதோ சிக்கன் 65... கேரளா பிஸ் ... இப்படிக் கேட்டாகூட செய்து தருவேன்... :P

லவ் பண்ண போறதா??? அதான் பண்ணிகிட்டு இருக்கேனே... தமிழை...

மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனித காதல் அல்ல... அல்ல.. அல்ல (எகோ... :P)

ராம்... என்னக்கேவா

கலத்தலில் காதல் இல்லை
காதலில் கலத்தல் வேண்டும்
தேகம் கலத்தல் மோகமெனில்
இதயம் கலத்தல் கலப்பியலாம்!!!

இது எப்டீகீது மாமு!!!!!

Ram said...

seri intha murai thappichutteenga....better luck next time, Ram.!

Anand said...

superu!!! nothing more to tell :) kalakure kanya...

ambi said...

//நிழல் என்னும் நிஜம் தொடர
கண்ட கனவுகள் கருத்ததம்மா//

cha! chancee illa jillu! :)

kalapiyal or kalaviyal? pls clarify, i'm weak in this aga/pura naanooru's in my school days.(he hee,padippula mattum thaan).
ippa thaan tamizh mela pasaam pongi vazhinju blogla karai porandu oduthu!
ipdi ellam kavithai ezhutha namaku vara mattenguthe! cha! try panren.

syam kanna, unakku vayuthu pokku sari ayiduchaa? :)
note: sorry for commenting in thanglish. :(

Kanya said...

அம்பி...

ரொம்ப நன்றி...

நீங்க சொல்ற கலவியல் ஒரு விதமான கலப்படம்... for example a fusion could be a கலவியல்.... ஒரு hybrid வெரைட்டீ மாதிரின்னு வெச்சுக்கலாம்!! ???

காமத்துப்பாலின் வருவது "களவியல்"... இது பழந்தமிழரின் திருமண+தாம்பத்திய முறை... ???

இந்த விளக்கம் 100% சரியான்னு யாராவது சர்டிபை பண்ணுங்கப்பா!!!

ஆனா நான் இங்க சொல்ல வந்தது.. "கலப்பு + இயல்" .. அதாவது.. புதிதாக நான் இனி தமிழோடு கலக்க ஒரு இயல்பைத் தேடப் போகிறேன் என்று... அந்த இயல்பு இதுவரை கவிதைகளாக இருக்கு...

"கலப்பு+இயல்" இலக்கண முறைப்படி சரியான்னு தமிழில் பெரிய கில்லாடிகள்தான் சொல்லனும்... சொன்னா தெரிஞ்சுக்குவேன்!! :)

ambi said...

//களவியல்"... இது பழந்தமிழரின் திருமண+தாம்பத்திய முறை... ???//

santhegame vendaam! athe thaan! theerthanthu santhegam, inthaa pidi 1000 porkaasugal :)

Syam said...

//ஏதோ சிக்கன் 65... கேரளா பிஸ்//

இதுவல்லவோ விருந்தோம்பல்...மத்த ப்ளாக்ல எல்லாம் first comment போட்டா புளியோதரை தான் கிடைக்கும்.....சரி சரி காரம் கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும் :-)

ambi said...

//சரி சரி காரம் கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும் //

@syam, he hee, unakku already vayuthu pokku puliyotharai saaptu saaptu! innum nee adangalaiyaa? :)

Kanya said...

ஷாமண்ணா ... காரம் தானே தூக்கிட்டாப் போச்சு... எப்படி வேனும் கொங்குத்தமிழ் காரமா... இல்லை சென்னைத்தமிழ் காரமா :P

சரி விடுங்க... ஒரு நாள் என் வீட்டுக்கு குடும்பத்தோட வாங்க... நல்ல தூக்கலாவே போடுறேன்... சாப்பாட்டுல காரத்தை சொன்னேன் :P

அம்பி... நாம கேக்காம போயிட்டோமேன்னு பீலிங்க்ஸா???
பிரியா விடுங்க... நீங்க எப்படி... சாம்பார் ரசம் பார்டியா இல்ல பறக்குறதுல விமாணமும் மிதக்குறதுல கப்பலும் தவிர வேர எல்லாத்துக்கும் மோட்ச்சமா??

கன்யா

ஜொள்ளுப்பாண்டி said...

//வழி மாறி போனார் என்று
மண விருந்துண்டோர் சொன்னாரம்மா//

அட கன்யாக்கா இப்படியொரு சோகமா உங்களுக்குள்ள?? :(((

//தமிழ்மீது நான் கொண்டேன்
தனியாத ஒரு மோகம்
கவிபாடி தேடிடுவேன்
கலப்பியலின் புது இலக்கணம்//

ஒஹோ இதென்னா இயலோ?? நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஜொள்ளியல் தானுங்கோ :))

கவிதாயினியா நீங்க ? நல்லாதான் எழுதறீங்க !!!

ambi said...

//பிரியா விடுங்க... நீங்க எப்படி... சாம்பார் ரசம் பார்டியா இல்ல பறக்குறதுல விமாணமும் மிதக்குறதுல கப்பலும் தவிர வேர எல்லாத்துக்கும் மோட்ச்சமா??//

apachaaram! abachaaram! me always thayir saadham. no non-veg. read my Oh! party nalla party thaan! post! (sorry, link kudukka neram illa)

Kanya said...

@ ambi... appo ennakku velai simple...

pure veg... athulayum only curd... puli kaaram ellam kavalai pada vendam... so ungalukku methuvave poodalam :D

Anonymous said...

kanyaaaaa ivlo tamil unakku theriyuma iyooo enakke ippodhan theriyudhu keep it up appuram ore ilakkiyama vera irukku i am very proud of you

Prasanna Parameswaran said...

great! udal, uyir, kaadhal ellathayum thamizhukku koduthuteenga pola! nalla lyrics! aana enna rendu dhadava padikka vendiyadha pocchu ennoda maramandaila puriyardhukku :)

gils said...

//நிழல் என்னும் நிஜம் தொடர
கண்ட கனவுகள் கருத்ததம்மா//
Wow...enna oru vari....kumkumam mathiri sollanumna..summa nacchunu iruku...disturbing lines

gils said...

unga matha kavithailaam padichen...ellathilaiyum en oru soga rasam oduthu...???konjam sandosha kavidaigalum venum pls...unga tamizh romba powerfulla iruku...vaarthaigalla oru valimai theriyuhu....padikum boathu ennakenanmo The HULK thaan nyabgathuku varuthu...

Om Santhosh said...

நீங்கள் காதல் கவதை மிகவும் நன்றாக உள்ளது. காதல் கனவுகள் என்றாவது நிஜமாகும்

Anonymous said...

very nice..

Sundar S